வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

SHARE

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால்  வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கும் சட்ட பாதுகாப்பு  தங்களுக்கும் வழங்க வேண்டும்என மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

கொனா பரவலை தடுக்க முககவசமும் தடுப்பூசி ஆகியவைதான் ஆயுதங்கள் என் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

வெளிநாடுகளை சேர்ந்த பைசர், மாடர்னா தடுப்பூசி நிறுவனங்களின் தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

இந்நிலையில், தங்களின் தடுப்பூசியால் மக்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அயல்நாட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் வைத்துள்ளன.

இதுவரை மத்திய அரசு எந்த தடுப்பூசி நிறுவனத்துக்கும் இத்தகைய சட்டரீதியான பாதுகாப்பை அளிக்கவில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த சலுகையை இந்த தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.  இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தடுப்பூசியினால் ஏற்படும் விளைவுகளுக்கு இழப்பீடு தருவதில் வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால் இந்திய நிறுவனமான சீரம் மட்டுமல்ல அனைத்து தடுப்பூசி நிறுவனங்களுக்கும் அந்த பாதுகாப்பை  வழங்க வேண்டும். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என நம்புகிறோம் – எனக் கூறப்பட்டு உள்ளது.

சீரம் நிறுவனம் தற்போதுகோவிஷீல்டு தடுப்பூசியை  தயாரித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின்  நோவாவாக்ஸ் தடுப்பூசியையும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையும் தயாரிப்பதற்கும் அந்நிறுவனம் அனுமதி  கேட்டுள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

CBSE +2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Admin

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

கொரோனா தேவி கோவில இடிச்சுட்டாங்க!. என்ன காரணம் தெரியுமா?

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

Leave a Comment