வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

SHARE

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால்  வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கும் சட்ட பாதுகாப்பு  தங்களுக்கும் வழங்க வேண்டும்என மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

கொனா பரவலை தடுக்க முககவசமும் தடுப்பூசி ஆகியவைதான் ஆயுதங்கள் என் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

வெளிநாடுகளை சேர்ந்த பைசர், மாடர்னா தடுப்பூசி நிறுவனங்களின் தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

இந்நிலையில், தங்களின் தடுப்பூசியால் மக்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அயல்நாட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசிடம் வைத்துள்ளன.

இதுவரை மத்திய அரசு எந்த தடுப்பூசி நிறுவனத்துக்கும் இத்தகைய சட்டரீதியான பாதுகாப்பை அளிக்கவில்லை. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த சலுகையை இந்த தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.  இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தடுப்பூசியினால் ஏற்படும் விளைவுகளுக்கு இழப்பீடு தருவதில் வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால் இந்திய நிறுவனமான சீரம் மட்டுமல்ல அனைத்து தடுப்பூசி நிறுவனங்களுக்கும் அந்த பாதுகாப்பை  வழங்க வேண்டும். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என நம்புகிறோம் – எனக் கூறப்பட்டு உள்ளது.

சீரம் நிறுவனம் தற்போதுகோவிஷீல்டு தடுப்பூசியை  தயாரித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின்  நோவாவாக்ஸ் தடுப்பூசியையும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையும் தயாரிப்பதற்கும் அந்நிறுவனம் அனுமதி  கேட்டுள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

மும்பையினை புரட்டி போட்ட கனமழை .. 17 பேர் உயிரிழப்பு!

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

புதிய டிஜிட்டல் கொள்கை… மத்திய அரசிடம் காலஅவகாசம் கேட்ட டுவிட்டர்!.

Admin

26 ஆண்டுகால புகைக்கும் பழக்கம்… மீண்டது எப்படி? – எழுத்தாளரின் அனுபவப் பதிவு…

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

Leave a Comment