Author: Admin

தமிழகத்தில் தளர்வில்லாத 11 மாவட்டங்களில் தற்போது மாணவர் சேர்க்கை இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.கொரோன பாதிப்பு உள்ள, தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என அவர் தெரிவித்தார். மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டும். மாணவர்களை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை தொடங்குவது பற்றியும் தற்போது யோசிக்கவில்லை. கொரனோ பரவல் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். ஆன்லைனில் கல்வி, கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள்…

Read More

கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளை வயது முதிர்ந்தவர்களிடம் நெருங்க அனுமதிக்க வேண்டாம் என ஆயூஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மரபணு மாறிய வைரஸால் முதியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், குழந்தைகளின் நலன் கருதி ஆயுஷ் அமைச்சகம் அவர்களுக்கென வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் அடிக்கடி கைக்கழுவதை உறுதி செய்யும்படி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்றும், அதற்கு கீழான வயதினர் பெற்றோர் மேற்பார்வையில் தேவைப்பட்டால் அணிந்துகொள்ளலாம் என கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது உடற்பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பெற்றோர் இயற்கையான ஆயூர்வேத மருந்துகளை பயன்படுத்துவதோடு, அடிக்கடி மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்படலாம் எனவும் கூறியுள்ளது.

Read More

கிஷோர் கே சாமியை கைது செய்தது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவது போன்று உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணையத்தளங்களில் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமியினை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், கிஷோர் கே சாமியை கைது செய்ததை கண்டித்து, பாஜக மாநில துணை தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் தனது ட்வீட்டர் பதிவில்: திமுக குடும்பத்தை,அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது? இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்குஉண்டா?பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு திமுகவிற்கு அது இல்லை போல.கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர் என பதிவிட்டுள்ளார்.

Read More

இஸ்ரேலில் 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்து நப்தாலி பென்னட் பிரதமராக பதவியேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டில் 2009,முதல், பெஞ்சமின் நெதன்யாகுதான் பிரதமராக இருந்து வருகிறார் அங்கு கடந்த 2 ஆண்டுகளாக எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில், அதிக இடங்களை பெஞ்சமின் நெதன்யாகு கட்சி பிடித்தது. ஆனால், அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறியான நிலை நீடித்தது. இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கை கோர்த்து ஆட்சி அமைக்க திட்டமிட்டனர். இந்த நிலையில்கூட்டணிக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது. 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன ஒரு உறுப்பினர் வாக்களிக்க கல்ந்து கொள்ளவில்லை. ஆகவே…

Read More

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது கடந்த ஆண்டு ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்த போது கொரோனா பரவல் ஏற்பட்டது.இதனால் அவரின் அமெரிக்க பயணம ரத்தானது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை குறைந்து இருப்பதால் ரஜினி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  கொரோனா காலம் என்பதால் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவருடன் குடும்பத்தினரும் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறப்பு தனி விமானத்தில் செல்வதற்காக மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்பதால், அதற்கான அனுமதியினை ரஜினி தற்போது பெற்றுள்ளார்.

Read More

கொரோனா பரவலை தடுக்கும் வல்லமை மக்களுக்கு உண்டு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பரவல் குறைந்து தான் வருகிறது தவிர, முழுவதுமாக ஒழியவில்லை.எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் போலி மதுபானம் தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு விமர்சனங்களையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். விரைவில் முழு ஊரடங்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறிய அவர், பொது போக்குவரத்து தொடங்க வேண்டும் என்றும், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More

முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சுவாமி ட்விட்டரில் திமுக தலைவர்களை தொடர்ந்து மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தார். இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரில், கிஷோர் கே சுவாமி சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கிஷோர் கே சுவாமிக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து…

Read More

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட கொரோனா தேவி கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தாக்க தொடங்கிய போது தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டி, பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லபூர் கிராமத்தில் கொரோனா தேவிக்கு கோவில் கட்டப்பட்டது. வேப்ப மரத்தடியில் அமைக்கப்பட்ட இக்கோவில் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனிடையே 5வது நாளான ஜூன் 11 ஆம் தேதி இரவில் கோவில் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொரோனா தேவி கோவிலை நொய்டாவைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டியுள்ளார். ஆனால் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டியதாகவும், இதனை நிலத்துக்கு சொந்தக்காரரான எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இடித்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று காலை முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், புதிய ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 27 மாவட்டங்களில் அதிகாலையிலேயே தேநீர் கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என்பது உள்ளிட்ட பலவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வருகிறது. ஆனால் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.- மூவேந்தன்

Read More

டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் அறிக்கையினை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் : டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையிலுள்ள வடதெரு என்ற கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையினை மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 10.6.2021 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், தொன்றுதொட்டுத் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது. ”சோழ நாடு சோறுடைத்து” என்ற சொல் நெடுங்காலமாக உள்ளது. இவ்வுளவு பெருமை கொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. நேற்றைய தினம், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும்…

Read More