Author: Admin

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் முதியவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பான விவகாரத்தில், டுவிட்டரின் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை, மர்ம நபர்கள் அடித்து, உதைத்து தாடியை மழித்தது போன்ற வீடியோ டுவிட்டரில் வைரலானது. இது பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதாக டுவிட்டர், பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க டுவிட்டரின் இந்திய தலைவர் மணிஷ் மகேஷ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் காவல்துறை இமெயில் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தும் மணிஷ் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக விசாரணையை எதிர்கொள்வதாக மணிஷ் மகேஷ்வரி கூறியுள்ளார். மகேஸ்வரியின் இந்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என கூறி, 2வது முறையாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

Read More

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை இன்று காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிவசங்கர் பாபாவின் மருத்துவ அறிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து…

Read More

தமிழக சட்டப்பேரவையின் 16ஆவது கூட்டத் தொடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடியது. அந்த கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டத் தொடரில் கலந்து கொண்டனர். ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. சட்டப்பேரவைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை சரமாரியாக முன்வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் 550 வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றுகூட இன்றைய ஆளுநர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து விட்டு இன்று அதை பற்றி விசாரிக்க குழு அமைக்கபட்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சி அமைந்து 45 நாட்கள் ஆகிறது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில்…

Read More

மனிதக்கழிவுகளை எந்திரத்தின் மூலம்அகற்றும் முறைக்கு மாநிலத்தில் முதன்முறையாக சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் மனிதர்களை கொண்டு கழிவு அகற்றும் முறை ஒழிக்கப்பட்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் தனது ட்விட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம் அதன்முன்னெடுப்பில், எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.

Read More

திமுக ஆட்சி ஏற்றவுடன் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் தொடங்கியுள்ளது. சட்டமன்ற முறைப்படி சபாநாயகர் அப்பாவு ஆளுநரை வரவேற்றார். பின்னர் அவையில் பேசிய ஆளுநர், தமிழ் மொழி இனிமையான மொழி என புகாழாரம் சூட்டினார். மேலும்,தமக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்கள் என்று பாரபட்சம் பார்க்காத இந்த அரசு சமூகநீதி, சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக செயல்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என பேசினார். முதல்வருக்கு பாராட்டு: மேலும்,முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டை பார்வையிட்டு முன்கள பணியாளர்களை ஊக்குவித்தார் முதல்வர் ஸ்டாலின். அரசியல் கட்சிகள் அனைத்தும் தோளோடு தோள் நின்று கொரோனாவை எதிர்த்து பணிபுரிகின்றனர். கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியுள்ளது தமிழக அரசு. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.335 கோடி நிதி குவிந்துள்ளது. நிதிநிலை குறித்த வெள்ளை…

Read More

இ -பதிவில் தவறான தகவல் அளித்தால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கின் போது அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் 27 மாவட்டங்களில் திருமணத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்விற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என்றும் தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும் ஒரே பதிவிலேயே அனைத்து வண்டிகளுக்கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் நேரடியாக சார்ந்துள்ள மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோர் ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர் பெயர் பத்திரிக்கையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறான தகவல்களை அளித்தாலோ, ஒரு…

Read More

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, திருக்குறளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 6.30 மணிக்கு யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது: இன்று சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. ‘ஆரோக்கியத்திற்கு யோகா’ என்பது தான் இந்தாண்டின் கருப்பொருள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதாக கூறிய பிரதமர் மோடி இந்த கொரோனா காலகட்டத்தில் யோகா புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துவதாக கூறினார். மேலும், தெய்வப் புலவர் திருவள்ளுவர், நோய் நாடி முதல் நாடி அது தணிக்கும்வாய் நாடி வாய்ப்பச் செயல் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு நோயின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து நாம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அதே போல் கண்ணுக்கு தெரியாத கொரோனா தொற்றை வெல்ல நாம் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவர்கள்…

Read More

சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. யூடியூப் சேனலில் பெண்கள் குறித்த ஆபாசமாகப் பேசிய பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதனை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்ட நிலையில் தர்மபுரியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தலைமறைவானார் மதன். யாருக்கு தெரியாமல் பதுங்கியிருந்த மதனை வெள்ளிக்கிழமை கைது செய்த காவல் துறையினர்அவரிடமிருந்து இரு கார்கள், 3 மடிக்கணினிகள், ஒரு “டிரோன் கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மதனை கைது செய்த காவல்துறையினர், சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனின் 5 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Read More

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் வாள் வீச்சு பிரிவில் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பொருமையை பெற்றுள்ளார் பவானி தேவி. தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார் பவானி தேவி பவானி தேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்தபோட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும், சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார். அவரின் கோரிக்கையைப் ஏற்ற தமிழக அரசு சென்னையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார் இந்த நிலையில் இத்தாலியில் பயிற்சி பெறும் பவானி தேவி தனக்கு நிதி வழங்கிய தமிழக…

Read More

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில்,அனைத்து மாநிலங்களுக்கான மாநில பேரிடர் மொத்த ஒதுக்கீடு ரூபாய் 22,351 கோடி. அதே சமயம் கொரோனா தொற்றால் இதுவரை 3.85 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக் கூடும் ஆகவே கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால் மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். இதனால் கூடுதல் நிதி சுமையால் சுகாதாரம் மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதி குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Read More