Author: Admin

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஆமீர்கான் தன் மனைவி கிரண் ராவுடன் லடாக் மக்களின் பாரம்பரிய உடையணிந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமீர்கான் தனது சொந்த தயாரிப்பில் ”லால் சிங் சத்தா” என்ற இந்தி படத்தை உருவாக்கி வருகிறார். இதன் படப்படிப்பு லடாக்கின் வாகா கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஆமீர் கானை பார்த்த லடாக் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர். இதையடுத்து லடாக் மக்களின் கோரிக்கையை ஏற்று படப்படிப்பு தளத்தில் ஆமீர் தன் மனைவியுடன் லடாக் மக்களின் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

உலக நாடுகளுக்கு அமெரிக்கா கொரோனா தடுப்பூசிகள் வழங்கி வரும் நிலையில் இந்தியாவிற்கு வழங்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகளுக்கு 8 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அந்த வகையில் நேபாளம், வங்க தேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ள நிலையில் இந்தியாவிற்கு மட்டும் வழங்கவில்லைஇதுகுறித்து விளக்கமளித்து அமெரிக்கா : ஒவ்வொரு நாடும் அமெரிக்காவிடமிருந்து தடுப்பூசி பெறும் முன்னதாக உள்நாட்டு சட்ட நடைமுறை, ஒழுங்குமுறைகளை செய்து முடிக்க வேண்டும். இந்தியாவில் இந்த விதிமுறைகளை செய்து முடிக்க நேரம் எடுப்பதாகவும் இந்தியாவிற்கு தடுப்பூசிகள் இன்னமும் அனுப்பப்படவில்லை. விரைவில் இந்த நடைமுறைகளையா முடித்தது இந்தியாவிற்கு தடுப்பூசிகள் அனுப்பப்படும்’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read More

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சென்றது. அங்கு நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி விளையாடியது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கேயே தங்கியுள்ளது.இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்து தொற்று உறுதியான வீரர்களுக்கு 10 நாள் தனிமைப்படுத்துதலை நிர்வாகம் மேற்க்கொண்டுள்ளது.

Read More

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி அணிந்த 7-ம் எண் ஜெர்சியையும் யாருக்கும் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் வீரர் சாபா கரீம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு அறிவித்த அதே தினத்தில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இந்த நிலையில் ஓய்வு பெற்ற வீரர்களின் உடமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் ஜெர்சியைப் பாதுகாப்பது என்பது அவர்களது பாரம்பரியத்தைக் காப்பதோடு அவர்களுக்கான மரியாதையையும் அளிப்பதற்கு சமம் என்றும் முன்னாள் வீரர் சாபா கரீம் கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 10 ஆம் எண் ஜெர்சியை ஒருமுறை ஷர்துல் தாக்கூர் அணிந்தது பெரிய சர்ச்சையானதால் பிசிசிஐ சச்சின் டெண்டுல்கரின் 10எண் ஜெர்சியை ரிட்டையர்டு செய்தது. அதே போல் தோனியின் 7 ஆம் எண் ஜெர்சியையும் ரிட்டையர்டு செய்ய வேண்டும் என சாபா கரீம் தெரிவித்துள்ளார்.

Read More

அமெரிக்க படைகள் அவசரப்பட்டு ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டது, இது என் இதயத்தையே பாதிப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளும் வெளியேற உள்ளதால் தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றுவிட்டதாக தாலிபான் அறிவித்துள்ளது அமெரிக்காவின் இந்த முடிவை உலக நாடுகள் பல விமர்சித்து வருகின்றன. இது குறித்து முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மக்களை தாலிபான்கள் கொன்று குவிக்கிறார்கள். அங்கு பெண்களும், குழந்தைகளும் பல கொடுமைகளை, கஷ்டங்களை, அனுபவித்து வருகிறார்கள். அனுபவிக்க போகிறார்கள். இது என் இதயத்தை நொறுக்குகிறது, என்று புஷ் ஜெர்மன் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிா்த்துப் போராடிய போராளி முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யா. இன்று தனது 100 ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறாா். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சங்கரய்யா குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், தமிழக அரசியல் தலைவர்களில் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மூத்த தோழர் சங்கரய்யா பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்கு சொந்தக்காரராக அடையாளமாக விளங்குபவர். சுதந்திரப் போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பைக் கட்டமைத்தவராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி – தீக்கதிர் ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காக சங்கநாதம் எழுப்பிய சட்டமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளராக சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது வாழும் வரலாறாக நூறாவது பிறந்தநாள் காணும்…

Read More

வறுமையின் நிறம் சிவப்பு என இருக்கும் நிலையில் வறுமையின் நிறம் சிவப்பு அல்ல என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பழம்பெரும் கட்சியின் சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் என்.சங்கரய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் வகையில் கமல்ஹாசன் பதிவு செய்த ட்விட்டரில் கூறியிருப்பதாவது: வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும் என தெரிவித்துள்ளார். Ativador Office 2010 Baixar Driver Easy Crackeado

Read More

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொன்ன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.வரி என்பது நன்கொடையல்ல. அது நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். நீதிபதியின் இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில் விஜய்க்கு கார்த்தி சிதம்பரம் எம்பி., முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் வரி ஏய்ப்பு செய்வதற்கும், வரியை திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.…

Read More

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவை பொறுத்தவரை அவ்வப்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவது வழக்கம். ஏற்கனவே சச்சின், தோனி, மித்தாலி ராஜ், முகமது அசாருதீன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் வரலாறு படமாக வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் செல்லமாக தாதா என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை இந்தியில் படமாக உருவாக உள்ளது. கங்குலியின் இளமை வாழ்க்கை முதல் அவர் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறி, கேப்டன் பின்னர் இந்திய கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் இந்தப் பயோபிக்கில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இதில் கங்குலியாக பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கலாம் என்றும், விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரியும் நிலையில்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள அரிசோனா மாகாணத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக காடுகளில் தீப்பற்றியது. தீ வேகமாக பரவி வரும் நிலையில் விபத்து நடந்த பகுதியை ஆய்வு சென்ற சிறிய விமானம் தீயில் விழுந்து நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அரிசோனோ – உட்டா இடையேயான சாலை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Read More