Author: Admin

தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை நேற்று சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அண்ணாமலை, எல்.முருகன், சி.டி ரவி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருடைய சுய விவரத்தில் கொங்குநாடு என இடம்பெற்றிருந்தது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை பதிலளித்தபோது,தற்போது ட்விட்டரில் அனைவருமே தங்களுடைய அடையாளமாக பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்குநாடு என போட்டுக்கொள்கின்றனர். அதுபோல முருகனும் தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட ஒருவர்” என்று கூறினார். மேலும் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருடைய சுயவிவரக்குறிப்பில் கொங்குநாடு” எனக் குறிப்பிட்டிருந்தது தட்டச்சுப் பிழையேஇது விவாதத்திற்குரிய விஷயமே அல்ல என தனி விளக்கம் கொடுத்தார் தமிழக பாஜகவின் மாநில தலைவர்அண்ணாமலை.

Read More

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொங்குநாடு முழக்கத்தை பாஜக முன்னெடுத்திருக்கும் நிலையில், கைலாசா நாட்டிற்கு தனி யூனியன் பிரதேசமாக்க ஐ.நா.சபை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் சிக்கி பிரபலமான சாமியார் நித்யானந்தா தப்பி ஓடி கைலாசா என்ற தனி தீவை உருவாக்கி இணையம் வழியாக தனது பக்கதர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றார். அவ்வப்போது அவரது வீடியோவில் பரபரபான விஷயங்களை கூறி அதிர்ச்சி கொடுப்பார் சாமியார் நித்யானந்தா அந்த வகையில் தற்போது கைலாசா நாட்டுக்கு ஐ.நாவின் அங்கீகாரம் வாங்கவும் நித்தியானந்தா முயற்சித்து வருவதாக கூறியிருந்தார். தற்போது அந்த கைலாசாதீவுக்கு யூனியன் பிரதேசம் என ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவரது பக்தர்கள் தகவல் பரப்பி வருகின்றனர். ஐ.நாவின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டினை அங்கீகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது உண்மைதான் என்று சொல்லும்படியாக வெளிவந்திருக்கிறது நித்தியானந்தாவின் வீடியோ. அந்த வீடியோவில் விவேகானந்தர் விரும்பினார், யோகா நந்தரும்…

Read More

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. அசுரன் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவை நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கின்றார் வாடிவாசல் ,சி.சு செல்லப்பாவின் நாவலை அடிப்படியாக கொண்டு உருவாக்கபட்டுள்ள இந்த படம் ஜல்லிக்கட்டை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகின்றது. தனது அப்பாவைக் குத்திக் கொன்ற ஜமீன் வீட்டின் கம்பீரக் காளையை, அவர் மகன் வெறியோடும் வீரத்தோடும் அடக்கி, இறந்து போன தந்தையின் வாக்கைக் காப்பாற்றும் கதைதான் வாடிவாசல். தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவருகின்றார்படத்தின் வேலைகள் முடிந்தபின் வாடிவாசலில் நடிக்கவுள்ளார் இந்நிலையில் தயாரிப்பாளார் தாணு வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டிருந்தார். அதில் வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும் நம் வீரத்தையும்…

Read More

பாரதிய ஜனதாவையும் கண்டு அஞ்சும் காங்கிரஸ்காரர்கள் கட்சியைவிட்டு தாராளமாக வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல்காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவை சேர்ந்த 3,500 உறுப்பினர்களிடம் காணொலிமூலம் பேசிய ராகுல் காந்தி காங்கிரஸிற்கு தைரியமான தலைவர்கள் கட்சிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என கூறினார். அதே சமயம் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் காங்கிரஸிற்கு தேவையில்லை என்றும். அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

ஆப்கானிஸ்தான் நடந்துவரும் வன்முறைகளைசேகரிக்க சென்ற இந்திய புகைப்பட செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள மும்பையில் வளர்ந்தவர் டேனி சித்திக் பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார். இவர் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிய போது மக்கள் சந்தித்த துயரங்களை தனது புகைப்படத்தின் மூலமாக உலகிற்கு தெரிவித்தார். குறிப்பாக கங்கை கரைகளில் எரிக்கப்பட்ட பிணங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதனால் உலக சுகாதார மையம் தொடங்கி அனைத்து சர்வதேச ஊடகத்தின் பர்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியது . இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான்களினால் நடக்கும் அரசியல் மாற்றங்களை செய்தியாக சேகரிப்பதற்கு அங்கு சென்றுள்ளார் டேனி சித்திக் அதிலும் குறிப்பாக தாலிபான்கள் கந்தகார் பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வருவதை மிகவும் நெருக்கமாக படம் பிடித்து உள்ளார். அதில் மூன்று நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பகுதியில்…

Read More

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடர்வதாக ஒரு சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார். திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தடை தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார் தமிழகத்தில், 25-3-2020 முதல் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது . தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது அனுமதி: நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி. இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதி. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிh .…

Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற 18ஆம் தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் கடந்த ஜூன் 17ஆம் தேதி முதன்முறையாக டெல்லி சென்றார். டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மேகதாது அணை, நீட் தேர்வு,புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். இந்நிலையில் வரும் 18ம் தேதி இரண்டாவது முறையாக முக ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் . இந்தச் சந்திப்பின் போது, மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு விலக்கு, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு, மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

காஜியாபாத்தில் இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர், பால்கனி அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த தடுப்பினை அப்பெண் பிடித்துக்கொண்டு சத்தமிட்டுள்ளார். இந்தநிலையில் அவரது சத்தம் கேட்டு ஓடோடி வந்த அவரது கணவர், பெண்ணின் கையை பிடித்து மீட்க முயற்சி செய்தார். ஆனால் அவரது பிடியிலிருந்து நழுவிய அப்பெண் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்தநிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமெரிக்காவில், 100வது வயதை எட்டிய மூதாட்டிகள் 3 பேர் குடும்பமாக ஒன்று சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் வசிக்கும் 3 மூதாட்டிகள் சமீபத்தில் தடுப்பூசிகளுக்கான இரு டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது ஆரோக்கியமாக இருக்கும் அவர்கள் ஜூன் மாத தொடக்கத்தின் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பேரும் நூறாவது பிறந்த நாளை கண்டுள்ளனர். இந்த 100வது பிறந்த நாளை மூவரும் கொண்டாட விரும்பினர். அவர்களுள் ஒருவரான ரூத் ஸ்வார்ட்ஸ் என்பவரின் வீட்டில் கடந்த ஜூன் 8-ம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினர். நீண்ட நாள் ஊரடங்கிற்கு பின் இந்த சந்திப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read More

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு, நன்கொடை அல்ல, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும்தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், நடிகர் விஜயின் வழக்கறிஞர் குமரேசன் கூறுகையில், வரி விலக்கு கேட்பது…

Read More