மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

SHARE

சேலத்தில், மகளிருக்கான இலவச பயணச் சீட்டை, வடமாநில பயணிகளுக்கு கொடுத்து மோசடி செய்த பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக, கட்டணம் இல்லாமல், மகளிர் என அச்சிடப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம் ரயில்நிலையத்திலிருந்து, பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் அரசு பேருந்தில், வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர்.

பேருந்து ஐந்துரோடு பகுதியில் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் தொழிலாளர்கள் 26 பேருக்கு, மகளிர் பெயர் அச்சிடப்பட்ட இலவச பயணச் சீட்டை கொடுத்து, நடத்துனர் நவீன்குமார், பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நடத்துனரின் மோசடி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நவீன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் :உயர்நீதிமன்றம் அதிரடி

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Admin

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

சிவசங்கர் பாபாவின் பள்ளியை மூட கோரி பரிந்துரை…!!

Admin

ஊரடங்கில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Admin

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுங்கள்- தமிழக அரசு

Admin

Leave a Comment