மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

SHARE

சேலத்தில், மகளிருக்கான இலவச பயணச் சீட்டை, வடமாநில பயணிகளுக்கு கொடுத்து மோசடி செய்த பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக, கட்டணம் இல்லாமல், மகளிர் என அச்சிடப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம் ரயில்நிலையத்திலிருந்து, பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் அரசு பேருந்தில், வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர்.

பேருந்து ஐந்துரோடு பகுதியில் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் தொழிலாளர்கள் 26 பேருக்கு, மகளிர் பெயர் அச்சிடப்பட்ட இலவச பயணச் சீட்டை கொடுத்து, நடத்துனர் நவீன்குமார், பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நடத்துனரின் மோசடி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நவீன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… மதிப்பெண் இப்படித்தான் வழங்கப்படும்… முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Admin

சென்னை திரும்பினார் ரஜினி.. விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள்

Admin

நான் என்ன பிரதமரா? கேள்வி எழுப்பிய மதன் பதில் கொடுத்த காவல்துறை!

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி காலமானார்

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

Leave a Comment