- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஒலிம்பிக் பளு தூக்குதலில் இந்தியா சார்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளநடந்து வருகிறது.இந்த நிலையில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ள நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்படுகிறது. ஒருவேளை அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானால் இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சாலை விபத்து ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மாடல் அழகியாக வலம் வந்த யாஷிகா ஆனந்த், துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த யாஷிகா, இருட்டு அறையில் முரட்டு குத்து என்றப் படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமானார்.உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், சல்ஃபர், பாம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்யாஷிகா. இந்நிலையில், நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று திரும்பிய யாஷிகாவின் கார் மாமல்லபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிவேக பயணம் மற்றும் விபத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் என இரண்டு பிரிவுகளின் கீழ்,…
நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின், யூடியூப் சேனல் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராவும் ஹிப் ஹாப் ஆதி பிஸியாக வலம் வருகிறார். தற்போது அவர் நடிப்பில் ’அன்பறிவு’, ’சிவகுமாரின் சபதம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் அன்பறிவு படம் இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. மற்றொரு படமான ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார். இவர் தனியாக ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஹிப்ஹாப் தமிழா யூடியூப் சேனல் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மில்லியன் சப்ஸ்கிரைப் கொண்ட இந்த யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு அனைத்து வீடியோக்களையும் அழித்துள்ளனர். ஏற்கனவே நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019 ஜூலை 26ம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜக கட்சியின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்யும்படி கர்நாடக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் பல மாதங்களாக போர்க்கொடி தூக்கி வந்தனர். இன்றுடன் தனது 2 ஆண்டு ஆட்சி காலத்தை எடியூரப்பா நிறைவு செய்கிறார். இதற்கிடையே கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பின்னர், கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் எடியூரப்பா அறிவித்தார். இந்நிலையில், தனது பதவியை ராஜானாமா செய்வதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்ற அதேநாளில் தனது ராஜினாமாவை அறிவித்தார்…
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மீண்டும் விசாரணை நடத்த மும்பை குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆபாச படங்களை எடுத்து அதனை இணைய செயலியில் பதிவேற்றியது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த 24 ஆம் தேதி குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவர் ஆபாச படங்கள் எடுக்கவில்லை எனவும், அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.
பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். தென்னிந்திய சினிமாவின் 1960 முதல் 80 வரையிலான காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயந்தி. ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’, ’அன்னை காளிகாம்பாள்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்த நிலையில், 76 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலை பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பாவே தொடர வேண்டும் என்று லிங்காயத்து மடாதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆனதால், பதவியில் இருந்து விலக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் இதற்கு மறுத்த அவர் பின் முடிவில் மாற்றம் கொண்டு பாஜக தலைமையின் உத்தரவினைப் பெற்றவுடன், தனது அடுத்தக்கட்ட நகர்வு பற்றி அறிவிப்பதாக கூறினார். இதனால் ஜூலை 26 ஆம் தேதியான இன்று கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை மாற்றக்கூடாது என்று கூறி கர்நாடகாவைச் சேர்ந்த லிங்காயத்து மடாதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெங்களூருவின் அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்த மிகப்பெரிய மாநாட்டில் ஏராளமான லிங்காயத்து மடாதிபதிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பலேஹோசூர் மடத்தின் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி எடியூரப்பா தலைமையிலேயே அனைத்து தீர்வுகளும் காணப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால்…
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 19 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பொறியியல் படிப்புக்கு சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு…
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொழும்பில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 50 ரன்களும் விளாச 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் சமீரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அசலங்கா 44 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் 18.3 ஓவர்களில் இலங்கை அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2…
பொழுதுபோக்குக்காக விண்வெளிக்குச் செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது அமெரிக்கா கூறியுள்ளது அமெரிக்க கோடீஸ்வரர்களான ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வெற்றிகரமாக திரும்பினர். இது வரலாற்றில் முக்கிய தருணமாக கூறப்பட்டாலும் விண்வெளிக்கு சுற்றுலா நிமித்தமாக செல்லும் கோடீஸ்வரர்களை ‘விண்வெளி வீரர்கள்’ என அழைக்கப்படுவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அமைப்பு, பொழுதுபோக்குக்காக விண்வெளிக்கு செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சுற்றுலா செல்பவர்கள் விண்வெளிக்கு சென்றாலும் சுற்றுலா பயணிகள்தான். அவர்களால் விண்வெளி வீரர்கள் ஆக முடியாது. இவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைப்பதன் மூலமாக எதிர்கால தலைமுறையினருக்கு தொழில்முறை விண்வெளி வீரர்களின் அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடும். ஆகவே விண்வெளி சுற்றுலா செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைக்கக்கூடாது என அமெரிக்க பெடரல் ஏவியேஷன் கூறியுள்ளது.