Author: Admin

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு ஜாமின் வழங்கியுள்ளது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்த நிலையில், சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே இவ்வழக்கு குறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், 400 பக்க குற்றப்பத்திரிகையை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று சிறப்பு டிஜிபி ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். இதனைதொடர்ந்து வழக்கை ஆகஸ்ட் 16ஆம்தேதிக்கு ஒத்திவைத்து, முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

இந்தியாவின் தங்க மகனாக கொண்டாடப்படும் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் மத்திய அரசின் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள், பிசிசிஐ, ஆனந்த் மஹிந்திரா என பல்வேறு தரப்பினரும் பரிசுத்தொகை அறிவித்தனர். இதனிடையே நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என அவரது பயிற்சியாளர் உவே ஹான் குற்றம் சாட்டியுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்தவர் உவே ஹான் கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த போது மத்திய விளையாட்டுத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது ஒலிம்பிக்கிற்கான பயிற்சி குறித்து எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை.விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவையும் கொடுக்கவில்லை. தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு…

Read More

தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைப்பெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்பேரில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறினார். மேலும் இந்த அறிக்கை தயாரிப்பின்போது ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அறிக்கைகளை ஆய்வு செய்ததோடு, 2001 ஆம் ஆண்டு முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையையும் ஒப்பீடு செய்ததாகவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என்பதற்காகவே என் பெயர் இடம்பெற்றுள்ளது. 2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை…

Read More

கோவில்களில் அர்ச்சகர் நியமனம் செய்வது குறித்த தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆகமம் விதிகளைப் பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு அறிவிப்பு உள்ளதாக சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் ஆகஸ்டு 25ஆம் தேதிக்குள் அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

Read More

கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியான ரூ.19, 500 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2,000 வீதம் 3 தவணையாக ஆண்டுக்கு மொத்தம் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த திட்டத்தில் இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் கோடி நிதி உதவியானது, விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை தொகையான, 19,500 கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவிக்க உள்ளார்.

Read More

வாட்ஸ் -அப்பில் ஒரு நிமிடத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெற்றுகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சான்றிதழ் வழங்கி வருகிறது. ‘கோவின்’இணையதளத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அளிக்கப்படுகிறது. தற்போது, மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வது உட்பட பல்வேறு வகைகளில் இந்த சான்றிதழ் கேட்கப்படுகிறது. இதனால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கோவின் இணையதளத்தில் இருந்து உடனடியாக இதை டவுன்லோடு செய்வதும் சில சமயங்களில் சிக்கலாக உள்ளது. இந்நிலையில், இந்த சான்றிதழை எளிதாக பெறுவதற்கான வாட்ஸ் அப் வசதியை சுகாதார அமைச்சகம் செய்துள்ளது. வாட்ஸ்-அப்பில் கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழை பெற வழிமுறைகள்: அதன்படி, +91 9013151515 என்ற எண்ணை தங்கள்து செல்போன்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.பின்னர் அந்த எண்ணிற்கு covid certificate என டைப் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பவும், செய்தி அனுப்பப்பட்டவுடன், பயனாளிகளுக்கு OTP வரும். அதன்பின் பயனாளிகளுக்கு வந்த OTP-ஐ அனுப்பும்போது, பயனர்கள் தங்களுக்கான கொரோனா…

Read More

இன்று அதிமுக ஆட்சியில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று அதிமுகவின் 10 ஆண்டுகால செலவினங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ‘அதிமுக அரசு கொண்டு வந்த அம்மா மினி க்ளினிக் திட்டத்தை திமுக மூடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிமுக நிதிநிலை அறிக்கை வெளியிட்டபோதும், ஆட்சி நடத்த முடியாததால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கின்றனர்’ என கூறியுள்ளார்.

Read More

21 ஆண்டுகள் கால்பந்து உலகில்பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகுவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி 13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் சேர்ந்தார். 778 ஆட்டங்களில் அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 வெற்றி கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார். பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்சி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார். மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்பட்டதால் பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மெஸ்சி. வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என நிருபர்கள்…

Read More

தற்போது சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவுடன் பசுபதி சைக்கிளில் அமர்ந்து செல்லும் காட்சி குறித்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. கடந்த மாதம் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் ஒரு காட்சியில் ஆர்யா, தனது வாத்தியாரான பசுபதியை தனது சைக்கிளில் அமர வைத்து அழைத்து செல்வார். பசுபதியிடம் பாக்ஸிங் கற்றுக் கொண்டு வேம்புலியை வெல்ல ராமன் தயாராகும் போது பசுபதி ராமனை திட்டி விடுவார். இதனால் அவர் மறுநாள் பயிற்சிக்கு வராமல் வேறு ஒரு வாத்தியாரிடம் பாக்ஸிங் கற்றுக் கொள்வார். இது குறித்து அவரிடம் விசாரிக்க ஆர்யாவுடன் சைக்கிளில் செல்வார் பசுபதி. ஆர்யாவும் பசுபதியும் சைக்கிளில் செல்லும் மீம்தான் தற்போது இணைய்த்தில் ட்ரெண்டிங் என்றே கூறலாம் அப்படி அவென்ஜர்ஸ் தொடங்கி மெர்சல் வரை பயணம் செய்யும் ஆர்யாவும் வாத்தியார் பசுபதி மீம்ஸ்கள் உங்களுக்காக 

Read More

தமிழ்நாட்டில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டுவதாக அதிர்ச்சி தரும் ஆய்வறிகை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வுகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடதப்பட்டது. கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 80.3 சதவீத ஆண்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்ட்டியுள்ளனர். 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர். வயது வாரியாக:18 முதல் 44 வயதுடையர்கள் 16.9 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டியுள்ளனர். 45 முதல் 60 வயதுடையவர்கள் 18.2 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27.6 சதவீதம் பேர் தடுப்பூசி குறித்து மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் நகர் புறங்களில் 82.5 சதவீதமும். கிராம புறங்களில் 79.7…

Read More