Author: Admin

ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை தாலிபான்கள் விளக்கமளித்துள்ளது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தது முதல் அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாது, மற்ற நாட்டினரும் அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியானது காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்களை, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தலிபான்கள் கடத்தியதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Read More

குதிரை உடல் முழுவதும் பிஜேபி நிறத்தில் வர்ணம் பூசி, பிஜேபியின் சின்னத்தை வரைந்து வைத்து, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை கண்டித்து மேனகாகாந்தி புகார் அளித்துள்ளார் மத்திய பிரதேசத்தில் முதல்வராக உள்ள (பாஜக)ம சிவ்ராஜ் சிங் சவுகான். அம்மாநிலத்தின் இந்தூர் நகரில் நேற்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடைபெற்றது . இந்த யாத்திரையின் போது ஒரு குதிரைக்கு உடல் முழுவதும் பிஜேபி நிறத்தில் வர்ணம் பூசி, பிஜேபியின் சின்னத்தை வரைந்து வைத்து, ஊர்வலமாக அழைத்து சென்றனர். முன்னாள் நகராட்சி கார்ப்பரேட்டர் ராமதாஸ் கார்க், யாத்திரையில் குதிரையை வாடகைக்குக் கொண்டு வந்து, இப்படி அழைத்து சென்றார். குதிரையின் உடல் முழுவதும் வர்ணம் பூசி இப்படி கொடுமைப்படுத்தியிருப்பது கண்டு மேனகா காந்தியின் ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ (PFA)விலங்குகள் நல அமைப்பு இந்துார் கிளை நிர்வாகி, சன்யோகீதாகஞ்ச் கொதித்தெழுந்து போலீசில் புகாரளித்துள்ளார். விலங்குகள் வன்கொடுமை தடுப்புச்…

Read More

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி நாளை ஆப்கன் தலைநகர் காபூலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அதே சமயம் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆப்கானில் உள்ள தலிபான்களுடன் பாகிஸ்தான் இணக்கமாகச் செல்ல இம்ரான் கான் அரசு விரும்புவதாக பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் ஏற்கனவே கூறியிருந்த நிலையில்பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி நாளை ஆப்கன் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Read More

கலரிங் செய்த ஹேர் ஸ்டைல், ஜொலிக்கும் சட்டை என வித்தியாசமான தோற்றத்தில், தோனி தோன்றும் ஐ.பி.எல். புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள், வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியை வைத்து, அசத்தலான புரமோவை வெளியிட்டுள்ளது ஐ.பில் டீம். அதில் தோனி இதுவரை இல்லாத மாறுபட்ட தோற்றத்தில் ஸ்டைலாக கலரிங் செய்த ஹேர் ஸ்டைல், ஜொலிக்கும் சட்டையுடன் தோனி போடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் பேணிக்காப்பது நோக்கமாக, தமிழக முதல்வர் வாரத்தில் இரண்டு நாட்கள் ஈ.சி.ஆர் சென்று சைக்கிளிங், நடைபயிற்சி உள்ளிட்டவை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வீட்டிலேயே ஜிம் அமைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. உடல் நலத்தை பேணி காப்பது ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாக்கியங்களை தமிழகமக்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக உடற்பயிற்சி செய்யக் கூடிய இந்த வீடியோ, இன்றைய தினம் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோவாகவும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More

எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ள நிலையில் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் மூலம் பதில் கூறியுள்ளார்அதில் அதிமுக அரசு எடுத்த கணக்கைத்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் நிலக்கரி தட்டுப்பாடு வந்தநேரத்தில் ஆய்வு செய்தபோதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரியவந்தது. கடந்த( அதிமுக ) ஆட்சியிலேயே 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என கூறியுள்ளார் மேலும்,எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் முழு மனதுடன் ஆதரிப்பதாக கூறிய தங்கமணி. நிலக்கரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் வாய்ப்பு அளித்தால், பேரவையிலேயே விளக்கம் அளிக்கத் தயார் என கூறியுள்ளார்.

Read More

மக்களவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையின் போது பேசிய சோனியா காந்தி, வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கு இப்போது இருந்தே வியூகங்களை வகுத்து எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள நான் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சிந்தனையோடு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறினார் . இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா உள்ளிட்ட 19 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

Read More

ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை எட்டு மாத குழந்தையின் இருதய ஆப்பரேஷனுக்காக ஏலம் விட்டு உதவியுள்ள வீராங்கனையினை அனைவரும் பாராட்டி வருகின்றனர். போலந்தின் ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா இவருக்கு, 2018ல் எலும்பு புற்று நோய் ஏற்பட்டது. இந்த சோதனையில் இருந்து விரைவாக மீண்டு, பயிற்சியை தொடர்ந்தார். சமீபத்திய டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்த நிலையில் தாயகம் திரும்பிய மரியா மூலம், எட்டு மாதமே ஆன மிலோஜெக் மலிசா என்ற ஆண் குழந்தை இருதய பாதிப்பால் அவதிப்படும் செய்தியை அறிந்தார். ஐரோப்பிய நாடுகள் அந்த குழந்தைக்கு சிகிச்சை மறுத்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை.,மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார் உயிர் காக்கும் ஆப்பரேஷனுக்கு’ ரூ. 3 கோடி தேவைப்படும் என டாக்டர்கள் கூறினர். மகனின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமடைய, போதிய வசதி இல்லாத பெற்றோர் பரிதவித்தனர் பலரிடமும் நிதி உதவி கேட்டனர். இந்த நிலையில் மரியாவும் உதவ முன் வந்தார். ஒலிம்பிக்கில்…

Read More

திமுக ஆட்சியில் இனிப்பு, கசப்பு அதிக காரம் கலந்தது இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் கிடையாது என கூறினார் மேலும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே கோடநாடு வழக்கை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. முடித்துவைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் சேர்க்க முயற்சிப்பதாக கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சி இனிப்பு, கசப்பு மற்றும் அதிக காரம் கலந்தது; இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை என்று கூறிய அண்ணாமலை . கோடநாடு விவகாரம், பாஜகவினர் மீது வழக்கு போடுவது போன்ற செயல்களை திமுக அரசு கைவிட்டுவிட்டு மக்கள் பணிகளை செய்யவேண்டும் என அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.

Read More

மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி இரு மாநில எல்லையான ஓசூரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா, தமிழ்நாடு ஏற்கெனவே வறண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். தஞ்சையில் விளைவிக்கப்படும் நெல்தான், இந்தியா முழுவதும் உணவுக்குப் பயன்படுகிறது. தஞ்சாவூருக்குத் தண்ணீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகும் என கூறினார். அதே சமயம் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என சட்டவிரோதமாக பேசி வருகிறார். மாநில எல்லை வரை வந்தவர்கள், கர்நாடகாவுக்கு வர முடியாதா? நமக்குள் பிரிவினை வேண்டாம் என்று கூறிய பிரேமலதா தமிழக மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா, சுபாஷ் சந்திர போஸாக இருக்க வேண்டுமா என கர்நாடக அரசே முடிவு செய்ய வேண்டும் என கூறினார். மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம்.நாம் இனத்தால், ரத்தத்தால், மூச்சுக்காற்றால்…

Read More