செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

SHARE

கலைஞர் பெயரில் நூலகம் கட்டப்படும் இடம் குறித்து தவறாக கருத்துக்களை பரப்பி வருவதாகவும், ஆதாரம் இருந்தால், அந்த இடத்தை மாற்ற அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மற்றும் உணவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது பேசிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னி குவிக் இல்லத்தை மாற்றி, கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாகக் கூறினார்.

அப்போது பொங்கி எழுந்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அந்த இல்லம் பென்னி குவிக் இல்லம் இல்லை என்றும், தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அது பென்னி குவிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால், நிச்சயம் இடத்தை மாற்ற அரசு தயாராக உள்ளதாக விளக்கம் அளித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

வணிக வரித்துறை புகார்களுக்கு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை : அமைச்சர் மூர்த்தி தகவல்

Admin

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

Admin

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு..!!

Admin

Leave a Comment