Author: Admin

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று சென்னையில் பெட்ரோல் விலை 99.20ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. . அதேபோல டீசல் விலை லிட்டருக்கு 93.52 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்றைய விலையில் இருந்து இன்று எந்த மாற்றமுமில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Read More

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதன்படி , கொரோனா தொற்று செப்டம்பரில் மேலும் உருமாற்றம் அடைந்தால் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடையே மூன்றாம் அலை தீவிரமடையும என்றும், ஆனால் இதன் தீவிரம் இரண்டாம் அலையை போல கடுமையான பாதிப்பை ஏற்படுத்ததாது என்றும் தெரியவந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையை விட குறைவாகவே பாதிப்பு இருக்கும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழுவிலிருக்கு மகேந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார்.

Read More

கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் கொரோன தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது . மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுவரும் தொற்றின் உயர்வு, அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து. மத வழிப்பாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்கு தடை விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில்…

Read More

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெற்று முடிந்ததையடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராஒலிம்பிக் போட்டியின் இன்றைய ஈட்டி எறிதல் போட்டியில் எஃப்64 பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் பங்கேற்றார். தனது முதல் வாய்ப்பிலேயே 66.95 மீட்டருக்கு ஈட்டி எறிந்து அவர் அசத்தினார். பின்னர், அடுத்தடுத்த வாய்ப்புகளில் முறையே, 68.08, 65.27, 66.71, 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து பிரமிக்க வைத்தார். இந்த நிலையில் தற்போது 5-வது முயற்சியில் 68.55 மீ. தூரம் எறிந்து மூன்றாவது முறையாக உலக சாதனை படைத்தார். இதையடுத்து இறுதிச்சுற்றின் முடிவில் அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்தியர் சுமித் அண்டில். ஒரே போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்து அனைவர்…

Read More

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக முன்னாள் மாநில நிர்வாகி கே.டி.ராகவன் விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. யாரும் செய்யாததையா செய்து விட்டார் என்றும் இதில் எது அநாகரீகமானது என்றும் கவனிக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி, சீமான் பேசிய கருத்துகள் பலவாறாகப் பரவி வருகின்றன. முதலில் அவர் பேசியது என்ன என்பதைப் பார்ப்போம். சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வயதையுடைய இருவரின் தனிநபர் விருப்பத்தில் தலையிடுதல் ஒருபோதும் அறம் கிடையாது. இதைப் பதிவு செய்பவர்கள் ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக செய்திருக்கலாம். அதுவும் பொதுவெளிக்கான அறமற்ற செயல்தான். இதுதான் இந்த விவகாரத்தில் அநாகரீகமான செயல். சீமானும் ராகவனும் பெண்களுக்கு பேராபத்தை விளைவிப்பவர்கள் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசம் இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்ணோ அல்லது கே.டி.ராகவனின் மனைவியோ புகாரளித்தால் ஒழிய இது ஒரு பிரச்சினை அல்ல என்பதுதான் இதில் தேவையான புரிதல்.…

Read More

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று எறிதல் வீரர் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர், எஃப்52 பிரிவில் ) 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவே அவரது வெற்றி முடிவு நிறுத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், வினோத் குமாரின் வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. காரணம் என்ன இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. . வினோத் குமார் ஆடிய அந்த F52 பிரிவுக்கு ஏற்ற உடல் பாதிப்போடு அவர் இல்லை. அந்த வகைமைப்படுத்துதலுக்குள் அவர் அடங்கமாட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த F52 பிரிவு தசைகளில் பாதிப்புடையவர்கள், மூட்டுகள் செயலிழந்தவர்களுக்கான பிரிவு. இதையெல்லாம் சரியாக பரிசோதித்துதான் வினோத் குமார் விளையாட…

Read More

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ‘உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் இதுவரை நடத்தப்பட்ட 6 அகழாய்வுகளில் 5 ஆய்வுகளின் அறிக்கை வெளியாகாதது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான அகழாய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வுகளின் ஏழாம் கட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. கரோனா இரண்டாவது அலை காரணமாக அகழாய்வுப் பணிகள் சற்று பாதிக்கப்பட்டாலும், தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் அங்கு கிடைத்து வருகின்றன. கீழடி…

Read More

பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை, சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடு வெட்கக்கேடானது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டணம் தெரிவித்துள்ளார். பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ விவகாரம் சர்ச்சையானதால் ,தான் வகித்த மாநில பொதுச் செயலாளர் பதவியை கே.டி. ராகவன் ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க பாஜகவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்த சம்பவம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இது சமூக குப்பை. ராகவனின் அனுமதியில்லாமல் அவரது தனிப்பட்ட இடங்களில் வீடியோ வைத்து எடுப்பது என்பதுதான் சமூக அவலம். இந்த வீடியோவை வெளியிட்ட நபரை (மதன் ரவிச்சந்திரன்) கைது செய்திருக்க வேண்டும். உலகில் எங்குமே நடக்காத ஒன்றை…

Read More

இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை அவதூறாக சித்தரித்து மார்ஃப் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தை பரப்பும் யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால் கனகராஜ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பின்னால் இருந்து கட்டியணைப்பதுபோல் ஒரு புகைப்படத்தை கடந்த 6ஆம் தேதி Modern Times என்ற யூ-டியூப் சேனல் வெளியிட்டு…

Read More

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்கள் வென்றுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பில் வீரர்கள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவனி லெகாரா தங்கமும், வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா வெள்ளியும், ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலமும் வென்றிருந்தனர். இந்தநிலையில் இவர்களுக்கு பாராட்டு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த ராமதாஸ், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை எனவும், இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான் எனவும் பாராட்டியுள்ளார்.

Read More