World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

கடிதம்
SHARE

ஒலிக்கு உருவம் கொடுத்தால் எழுத்துகள். இந்த உருவம் முழுமை பெறும் இடமாக இருந்தவைதான் கடிதங்கள். ஆம், ஏறக்குறைய அழிந்துபோய்விட்ட கடிதம் எழுதும் கலையை நினைவுபடுத்திக் கொள்ளும் நாளாகவே இந்த கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) ஆண்டுதோறும் செப்டம்பர்1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

அன்புக்குரியவர்களுக்கு தகவல் சொல்ல, தகவல் பெற ஒரே ஊடகமாக இருந்த கடிதங்கள், வேலை முடிந்த பிறகு ஆவணங்களாகவும் காலப் பொக்கிஷங்களாகவும் பாதுகாக்கப்பட்டன.

அனுப்பி அழித்துவிடும் மெசேஜுகளைப் போல் அல்லாமல், உணர்வுகளின் பெட்டகமாக கடிதங்கள் விளங்கின.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலகாபாத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடிதம் எழுதும் தினம்
கடிதங்கள்



அப்போது, தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், தன்னுடைய அந்தப் 10 வயது மகளுக்கு , இந்தப் பூமியின் கதை, பூமியிலுள்ள நாடுகளின் கதைகள், இயற்கையின் வரலாறு, உலக நாகரிகங்களின் தோற்றம் உள்ளிட்டவற்றை எல்லாம் சுருக்கமாக எழுதினார்.

10 வயது மகளுடன் நேரம் செலவிட இயலாத நிலையில் நேரு இருந்தாலும், தனது மகளுக்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். அதன்மூலம், அவர், தனது மகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்.

பின்நாட்களில் ஆவணமாக ஆன அந்தக் கடிதங்கள்தான் அன்றைய குழந்தை இந்திராவை இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக மாற்ற அச்சாரமிட்டன.

அதுபோக காந்தி-டால்ஸ்டாய் கடிதங்கள், சாவர்க்கரின் எரவாடா சிறைக் கடிதம், அம்பேத்கர்-ரமாபாய், அம்பேத்கர் -சவிதா இடையிலான கடிதங்கள் என வரலாற்றில் சம்பவ விவரிப்பு மற்றும் சமூக நிலைப் புரிதலுக்கு கடிதங்கள் பெரும் உதவியாக விளங்குகின்றன.

அன்புக்குரியவர்களுக்கு உங்கள் அன்பை தொட்டு உணர வைக்கும் ஒரு வழி உண்டு என்றால் அது கடிதம் எழுதுவது மட்டுமே…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

சாக்லேட் குறித்த ரகசியங்கள்..! – உலக சாக்லேட் தின சிறப்புக் கட்டுரை.

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்.. முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சம் வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்

Admin

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

பெண்களை மதிப்பவரை நியமியுங்கள்: -ஓபிஎஸ் கோரிக்கை..!

Admin

சே குவேரா எனும் புரட்சித் தீ! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment