World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

கடிதம்
SHARE

ஒலிக்கு உருவம் கொடுத்தால் எழுத்துகள். இந்த உருவம் முழுமை பெறும் இடமாக இருந்தவைதான் கடிதங்கள். ஆம், ஏறக்குறைய அழிந்துபோய்விட்ட கடிதம் எழுதும் கலையை நினைவுபடுத்திக் கொள்ளும் நாளாகவே இந்த கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) ஆண்டுதோறும் செப்டம்பர்1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

அன்புக்குரியவர்களுக்கு தகவல் சொல்ல, தகவல் பெற ஒரே ஊடகமாக இருந்த கடிதங்கள், வேலை முடிந்த பிறகு ஆவணங்களாகவும் காலப் பொக்கிஷங்களாகவும் பாதுகாக்கப்பட்டன.

அனுப்பி அழித்துவிடும் மெசேஜுகளைப் போல் அல்லாமல், உணர்வுகளின் பெட்டகமாக கடிதங்கள் விளங்கின.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலகாபாத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடிதம் எழுதும் தினம்
கடிதங்கள்



அப்போது, தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், தன்னுடைய அந்தப் 10 வயது மகளுக்கு , இந்தப் பூமியின் கதை, பூமியிலுள்ள நாடுகளின் கதைகள், இயற்கையின் வரலாறு, உலக நாகரிகங்களின் தோற்றம் உள்ளிட்டவற்றை எல்லாம் சுருக்கமாக எழுதினார்.

10 வயது மகளுடன் நேரம் செலவிட இயலாத நிலையில் நேரு இருந்தாலும், தனது மகளுக்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். அதன்மூலம், அவர், தனது மகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்.

பின்நாட்களில் ஆவணமாக ஆன அந்தக் கடிதங்கள்தான் அன்றைய குழந்தை இந்திராவை இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக மாற்ற அச்சாரமிட்டன.

அதுபோக காந்தி-டால்ஸ்டாய் கடிதங்கள், சாவர்க்கரின் எரவாடா சிறைக் கடிதம், அம்பேத்கர்-ரமாபாய், அம்பேத்கர் -சவிதா இடையிலான கடிதங்கள் என வரலாற்றில் சம்பவ விவரிப்பு மற்றும் சமூக நிலைப் புரிதலுக்கு கடிதங்கள் பெரும் உதவியாக விளங்குகின்றன.

அன்புக்குரியவர்களுக்கு உங்கள் அன்பை தொட்டு உணர வைக்கும் ஒரு வழி உண்டு என்றால் அது கடிதம் எழுதுவது மட்டுமே…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

வரி கட்டுங்க விஜய்; கடனை அடைங்க அஜித்: ட்விட்டரில் வெடித்த மோதல் காரணம் என்ன?

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்.. முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சம் வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

வேலுமணி வீட்டு ரெய்டு பத்தி நான் எதுவுமே சொல்லவில்லை.. ட்விட்டர் பதிவுக்கு விளக்கமளித்த பாண்டியராஜன்!

Admin

Leave a Comment