- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கி புதிய உயரங்களைத் தொடட்டும்!
ஜப்பான் பிரதமர் யோஷிஹிதோ சுகா பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே கடந்தாண்டு உடல்நிலை பாதிப்பால் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக யோஷிஹிதே சுகா பதவியேற்றார். அதுவே அவருக்கு சோதனைக் காலமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம். கடந்தாண்டு 2 ஆண்டுகளாக உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஜப்பானிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. அங்கு சுகா தலைமையிலான அரசு கொரோனா பரவலைக் கையாண்ட விதம் நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் யோஷிஹிதே சுகா இம்மாத இறுதியில் நடைபெற உள்ள கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். கொரோனாவை சரியாக கையாளத் தவறிய தனது அரசு மீதான மக்களின் அதிருப்தியை கருத்தில் கொண்டே அவர் இந்த…
ஜியோ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் உலகில் முன்னணியில் உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் சார்பில் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த ரிலையன்ஸ் ஏஜிஎம் மாநாட்டில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்தது. இதனிடையே அந்த ஸ்மார்ட்போன் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது . இதன்படி இது இரண்டு மாடல்களில் கிடைக்கும் என்றும், ஒன்று ஜியோ போன் நெக்ஸ்ட் பேசிக் மாடல், மற்றொன்று ஜியோபோன் நெக்ஸ்ட் அட்வான்ஸ் மாடல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,000 மற்றும் ரூ.7,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் 10 சதவிகிதமான ரூ.500,700 மட்டுமே செலுத்தி வாங்கலாம் என்றும், மீதமுள்ள பணத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான இஎம்ஐ மூலம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10…
இந்து கலாச்சாரத்துக்கு எதிரான பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என மயிலாடுதுறை பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கம்போல எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. அந்த வகையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது.இதற்காக 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர். கொரோனா…
பாஜகவைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வியெழுப்பி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தமிழக பாஜக மாநில செயலாளரான கே.டி.ராகவனின் பாலியல் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதே சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். அதை காட்சிப்படுத்துவதுதானே சமூக குற்றம். முதலில் அந்த வீடியோவை வெளியிட்டவரை தான் கைது செய்ய வேண்டும் என சீமான் கூறியிருந்தார். இதற்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, சீமான் பாஜகவின் B Team தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார் என்றும், அவரின் இந்த செயல் வெட்கக்கேடானது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த சீமான், பாலியல் வன்புணர்ச்சி,…
அண்ணாமலை, சீமானை அரசியலில் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
திருமண நிதியுதவித் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட விளக்க குறிப்பு பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.
இந்திய மக்களின் வாழ்நாளில் 9 ஆண்டுகளை காற்று மாசுபாடு பறிக்கப் போகிறது என்ற எச்சரிக்கை அறிக்கையை சென்னையைச் சேர்ந்த சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சிகரெட் பிடிப்பதோ அல்லது காசநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற வியாதிகளை விட காற்று மாசுபாடு மனித ஆயுளை வெகுவாகக் குறைக்கிறது என AQLI மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி காற்றில் நுண்துகளின் அளவு 60 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். இதுவே உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 25 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். ஆனால் சென்னையின் பல பகுதிகளில் நுண் துகளின் அளவு 60 µg/m3 அளவை விட அதிகமாக உள்ளதாக Health Energy Initiative நடத்திய ஆய்வின் முடிவில் நமக்கு தெரிகிறது. குறிப்பாக திருவொற்றியூர், காசிமேடு, மீஞ்சூர்,…
இங்கு பாருங்கள். இணையத்தைக் கலக்கும் இந்த வைரல் வீடியோ, சிலந்தி வலைபின்னுவதை முழுமையாக காட்சிப்படுத்தியுள்ளது.
ஏதும் சங்கடமாக நடந்துவிடக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமும் கூட. அரசு இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.