வேலைக்கு சிபாரிசு கேட்டு வராதீங்க. . அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…

SHARE

அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு சொந்தமான வீட்டில் சிபாரிசு செய்யுமாறு கேட்டு யாரும் வரவேண்டாம் என ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் ஊழல் இல்லாமல் அனைத்து பணிகளும் வெளிப்படையாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி அனைத்து அமைச்சர்களும் அவர்களின் துறைகளில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக டெண்டர்கள்,அரசு பணிகளில் சேருவதற்கு யாருக்கும் சிபாரிசு செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு 3557 காலியிடம் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வைகடந்த மாதம் ஆயிரக்கணக்கானோர் எழுதினர்.

இந்நிலையில் நீதிமன்ற பணியாளர்கள் நியமனம் தொடர்பாக பரிந்துரை கடிதம் கோரி யாரும் வரவேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

காலியாக உள்ள 3,557 இடங்களை தேர்வு செய்வதற்கு சிலர் அமைச்சரின் சிபாரிசு மூலம் நீதிமன்ற பணியாளர் வேலையை பெறுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது.

இதனால் அமைச்சா் வீட்டில் நீதிமன்றத்தில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு எழுதியுள்ளவர்களின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் வழங்கப்படும் என்றும், வேலை குறித்து அமைச்சரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

Admin

சிவசிங்கர் பாபா’வின் பக்தைகளுக்கு நிபந்தனை முன் ஜாமின்!

Admin

சொன்னதை செய்தார் தங்கம் தென்னரசு!. நியாயமான விலையில் சிமெண்ட் விற்கப்படும் என உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு.

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

சென்னையில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் செயல்பட புதிய நிபந்தனை

Admin

அற்புதம் அம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன்!

Admin

அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

Admin

12 -ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் கணக்கீடு எப்படி?முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

Admin

சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…

Admin

Leave a Comment