3 முறை தற்கொலை செய்த ஓபிஎஸ் சசிகலாவுடன் செல்வார்: நாஞ்சில் சம்பத்

SHARE

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3 முறை தற்கொலை செய்து கொண்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை இரட்டை தலைமைகளான ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக தகவல் வெளியானது.

கட்சியை ஒற்றை தலைமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் வெளியான தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள திமுக ஆதரவாளரும் திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சென்று விடுவார் என தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக கட்சியில் தீர்மானம் நிறைவேற்றாதது, அவரை விமர்சிக்காதது என அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவையெல்லாம் ஓபிஎஸ் சசிகலாவிடம் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை காட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும் அரசியலில் மூன்று முறை தற்கொலை செய்துகொண்டவர் ஓபிஎஸ் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து வெளியேறி தர்ம யுத்தம் நடத்தியது முதலாவது தற்கொலை, மூன்று முறை முதலமைச்சராக இருந்த அவர் துணை முதலமைச்சராவதற்கு ஒப்புக்கொண்டது இரண்டாவது தற்கொலை, கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவராக இருக்காமல் இருப்பது 3வது தற்கொலை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

அவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’.. சங்கரய்யாவுக்குகமல்ஹாசன் வாழ்த்து!

Admin

உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை ? பொங்கி எழுந்த புகழேந்தி

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

இனிப்பு, கசப்பு மற்றும் அதிக காரம் இது தான் இப்போ : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

Admin

மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய ஸ்டாலின்!

Admin

‘’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல் மறந்துட்டு பேசாதீங்க ’’ – எடப்பாடிக்கு பதில் கொடுத்த ஸ்டாலின் !

Admin

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

Leave a Comment