- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
நடிகர் அஜித் எளிமையாக ஆட்டோவில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க நடிகர்களில் ஒருவர் அஜித். பிரபல காதாநாயகனாக இருந்தாலும் சக கலைஞர்களுக்கு பிரியாணி சமைத்துப் போடுவது, வாக்குப் பதிவின் போது அமைதியாக மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பது – என்று இவரின் எளிமை அடிக்கடி ஊடகங்களில் செய்தியாவது உண்டு. சமீபத்தில் கூட சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இவர் கால் டாக்ஸியில் வந்தார். அந்த செய்தி வைரலானது. இப்போது இன்னும் எளிமையாக அஜித் முகக் கவசத்துடன் ஆட்டோவில் செல்லும் காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகர், சிறிய ரக விமானங்களை வடிவமைப்பவர், ரேஸ் பிரியர், புகைப்படக் கலைஞர், துப்பாக்கி சுடுதலில் நிபுணர் ஆகியவற்றோடு எளிமை விரும்பி என்பதும் அஜித்தின் அடையாளங்களில் ஒன்று – என்று இதனை அவரது ரசிகர்கள் புகழ்ந்து பகிர்ந்து வருகின்றனர். நமது நிருபர்.
நடிகர் ஆர்யாவின் சமீபத்திய திரைப்படமான டெடியில் டெடிபியர் பொம்மையின் உடல் மொழியை வெளிப்படுத்திய நடிகர் குறித்து ஆர்யா டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். ஆர்யா, சாயிஷா நடிப்பில் சக்தி சவுந்தர ராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டெடி. ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் இந்தப் படம் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் டெடிபியர் பொம்மைக்கு உயிர் வந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்தக் காட்சிகள் குழந்தைகளால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. அதே நேரம் திரைப்பட ரசிகர்கள் ‘எப்படி இதைச் செய்தார்கள்?’ – என்று யோசித்துக் கொண்டும் இருந்தனர். அந்த ரகசியத்தை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உடைத்து உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ’இவர்தான் காட்சிகளின் பின்னிருந்தவர் – மிஸ்டர் கோகுல். இவர் ஒரு நாடக நடிகர். இவர் டெடிபோன்ற அமைப்பில் உள்ள உடையை அணிந்து கொண்டு, டெடியின் உடல்மொழியை வெளிப்படுத்தினார். டெடியின் முக பாவங்கள் முப்பரிமாணத்…
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. இரண்டு பெரிய கூட்டணிகள் உட்பட ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து முனைப் போட்டி நிலவுகின்றது. இந்த முறை வேட்பு மனுவில் அதிக கேள்விகள் இருந்ததாலும், தவறான தகவல்களைக் கொடுத்தால் வேட்புமனு தள்ளுபடியாகலாம் என்பதாலும் பலர் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து உள்ளனர். ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது அவற்றில் எது சரியாக உள்ளதோ அந்த வேட்பு மனு ஏற்கப்படும் – என்ற விதியின் காரணமாகவே இப்படி நிறைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று மதியம் 3 மணிக்கு வேட்பு மனுத் தாக்கலுக்கான கெடு நிறைவடைந்தது.…
இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற மனி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் அடுத்த சீசன் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டது. கொரோனா முடக்கத்தால் வீட்டிற்குள் அடைந்து கிடந்தவர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக அமைந்திருந்தவை வெப் தொடர்கள்தான். கொரோனா முடக்கத்தின் போது திரையரங்குகளும் திறக்கப்படாததால் மக்கள் பலரும் பழைய திரைப்படங்களையும், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் போன்ற பல்வேறு ஓ.டி.டி. தளங்களையும் பார்வையிட்டனர். இதனால் இந்திய அளவில் ஓ.டி.டி. தளங்களில் வெப் தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்தது. இதில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்நெட் பிளிக்ஸ்-சில் வெளியான மனி ஹெய்ஸ்ட். அடிப்படையில் இது ஒரு ஸ்பானிஷ் வெப் தொடர். அதிபுத்திசாலியான கொள்ளையன், ஒரு பெரிய வங்கியை கொள்ளையடிப்பதுதான் இதன் ஒருவரிக் கதை. ஏற்கனவே பார்த்து சலித்த ஒருவரிக் கதைதான் என்றாலும், கதை சொல்லும் விதம், காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம், த்ரில், எதிர்பாராத திருப்பங்கள் என்று பார்ப்பவர்களை எழவிடாமல் ஆச்சர்யம் அடைய…
ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்
ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்பதற்காக 3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன – என்ற குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொய்லி தேவி என்பவரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கொய்லி தேவியின் வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது முன்வைத்திருந்தார். தனது கட்சிக்காரர் கொய்லி தேவியின் ரேஷன் அட்டையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்பதற்காக ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் கொய்லி தேவியின் 11 வயதே ஆன மகள் சந்தோஷி குமாரி கடந்த 2017ல் பட்டினிச் சாவை சந்தித்ததாகவும் கூறிய அவர், இப்படியாக நாடெங்கும் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேஷன் அட்டைகளை மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். மேலும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளைப் போலியானவை என்று சொல்லி மத்திய அரசு நீக்கிவிட்டதாகவும்,…
விரைவில் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும், ஆனால் ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று நிதின் கட்கரி அறிவிப்பு. இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி சுங்க சாவடிகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், சுங்கச் சாவடிகளே இல்லாத நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளதாகவும், இதன்படி சுங்கச் சாவடிகளில் வண்டிகள் நின்று கட்டணம் செலுத்தும் வழிமுறைக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணங்களைப் பெறும் வழிமுறைகளை ஓராண்டுக்குள் அமல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். இதன்படி ஒவ்வொரு சாலையிலும் அதன் தொடக்கப் பகுதி மற்றும் முடிவுப் பகுதியில் கேமராக்கள் இருக்கும் என்றும், அந்தக் கேமராக்களில் பதிவாகும் படங்களின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும்…
கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்! இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் நடந்த திருமண புகைப்படங்களை வெளியிட்டார். இந்திய அணியின் நம்பிக்கைக்கு உரிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரிட் பும்ரா. இவர் சமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, கடந்த டி 20 தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார். அந்நேரத்தில் பும்ரா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், பிரபல மலையாள நடிகை ஒருவரே பும்ராவின் வருங்கால மனைவி என்றும் பல வித செய்திகள் பரவின. சமீபத்தில், மார்ச் 15ஆம் தேதியன்று பும்ராவுக்கு கோவாவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், ஆனால் மணப் பெண் கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் என்றும் மீண்டும் செய்திகள் பரவின. இவற்றில் எது உண்மை எது பொய்? – என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில், தனக்கும்…
9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்விதத் தேர்வும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவித்து உள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்கு முந்தைய 10 மாதங்கள் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஜனவரியில்தான் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறத் தொடங்கின. இந்த சூழலில் மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், சமீபத்திய பேரவைக் கூட்டத் தொடரில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 9 முதல் 11 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘9 – 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் பட்டியலை உருவாக்க வேண்டும்’ -…
ஜெய்ப்பூர்: 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த 20 வயது இளைஞருக்கு போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன்ஜூனு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததற்காக கைது செய்யப்பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அளிக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட இளைஞரும் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாதவராக வழக்கை எதிர்கொண்டார். வழக்கின் 26ஆவது நாளிலேயே விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், 27ஆம் நாளில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் கண்களில் சிறுது கூட வருத்தம் காணப்படவில்லை. அவர் வருந்தி இருந்தால் தண்டனை வேறு விதமாக…
புது டெல்லி: தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் புதுடெல்லியில் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனாவைப் பரப்பும் கோவிட் 19 வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையாக உருமாற்றங்களை அடைந்து வருகின்றது. இந்த உருமாற்றங்களினால் இந்த வைரஸ்சை ஒழிக்கும் நடவடிக்கைகள் கடினமாகி உள்ளன. இப்படி உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் நாடுகளிடையே எல்லை கடந்து பரவியும் வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருமாறிய கொரோனாவின் பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க நாட்டில் உருமாற்றம் பெற்ற புதிய வகைக் கொரோனா வைரஸ் ஒன்று இந்தியத் தலைநகர் டெல்லியில் 33 வயது இளைஞர் ஒருவரைத் தாக்கி உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ்சின் பாதிப்பும் டெல்லியில் சில நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உருமாறிய கொரோனாவின் திடீர் படவல் நமக்கு உணர்த்துகிறது.…