வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

SHARE

காவிரி டெல்டா பகுதியில் உள்ளவர்கள் வெள்ளைக் காகிதத்தை டெம்மி பேப்பர் என அழைக்கிறார்கள். சிலர் டிம்மி பேப்பர் என்றும் அழைப்பது உண்டு.

காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படத்தில் மளிகைக் கடைக்கு வரும் ஒருவர் டெம்மி பேப்பரை கேட்டு வாங்கிக் கொண்டு போவதாக ஒரு பின்னணிக் காட்சி இருக்கும்.

வெள்ளைக் காகிதத்தை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒயிட் பேப்பர் அல்லது ஒயிட் ஷீட் – என்றுதான் பொதுவாக அழைக்கிறார்கள், டெல்டா பகுதியில் அது எப்படி டெம்மி பேப்பரானது?.

டென்மார்க் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த சீகன் பால்கு 1715ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இருந்து ஒரு அச்சு எந்திரத்தை தரங்கம்பாடிக்கு வரவழைத்தார். அதன் மூலம் இந்தியாவின் மிக முக்கிய அச்சுக்கூடமாக தரங்கம்பாடி ஆனது.

அதன் பின்னர் தரங்கம்பாடியை சுற்றி இருந்த பகுதிகளில் அச்சுக் கூடங்கள் பெருகின. இந்த அச்சுக் கூடங்களில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் இருந்த டெல்டா மக்கள்தான்.

அச்சகத்தில் பயன்படுத்தும் தாளின் அளவுதான் டெம்மி என்பது. 451மில்லி மீட்டருக்கு 572 மில்லி மீட்டர் என்ற அளவைத்தான் ஒரு டெம்மி என்பார்கள். நாம் படிக்கும் சிறிய புத்தகங்களின் அளவு பொதுவாக ⅛ டெம்மி.

அதாவது ஒரு டெம்மி காகிதத்தில் 8 பக்கங்களை அச்சடித்து மடித்தால் இந்த புத்தகத்தின் அளவு கிடைக்கும் என்பது பொருள்.

இப்படியாக அச்சகத்தில் பயன்படுத்தும் காகிதத்தை டெம்மி பேப்பர் என்று அழைத்தவர்கள் வெளியிலும் அப்படியே அழைக்க, அதன் தொடர்ச்சியாக அச்சகப் பணியாளர்களின் சந்ததியினரால் வெள்ளைக் காகிதம் டெம்மி பேப்பர் என இன்றும் அழைக்கப்படுகிறது.

ஆனால் டெல்டாவில் உள்ள மிகப் பெரும்பாலான மக்களுக்கு ஏன் வெள்ளைக் காகிதத்தை டெம்மி பேப்பர் என அழைக்கிறோம் என்பதே தெரியாது!.

இரா.மன்னர் மன்னன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

கொரோனா சான்றிதழில் பிழையா..? திருத்தம் செய்து கொள்ள புதிய வழிமுறை இதோ

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

சு.சேதுராமலிங்கம் எழுதிய பிரபாகரன் சட்டகம் – நூல் அறிமுகம்

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு.. தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் : பேரவையில் ஸ்டாலின் முழக்கம்

Admin

யாழ்ப்பாணம் நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்ட 41ம் ஆண்டு நினைவேந்தல்

Admin

கீழடி அகழாய்வில் கிடைத்த குத்துவாள்..!!

Admin

Leave a Comment