Author: Admin

நடிகை ஓவியா நடித்துள்ள புதிய வெப் தொடர் இன்று முதல் யூ-டியூப் இணையதளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. களவாணி, கலகலப்பு போன்ற படங்களில் நடித்த நடிகை ஓவியா பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே மிகப் பெரிய அளவில் பிரபலமானார். அவருடைய பெயரில் ஆர்மி தொடங்கப்பட்டது தனிக்கதை. இதன்பிறகு 90 எம்.எல்., காஞ்சனா-3 ஆகிய படங்களில் நடித்த அவர் தற்போது வெப் தொடர் களில் நடிக்க தொடங்கியுள்ளார். “மெர்லின்” என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர் இன்று (ஜூன் 5 ஆம் தேதி) முதல் ஆரஞ்சு மிட்டாய் என்ற யூ-ட்யூப் பக்கத்தில் ஒளிபரப்பாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகும் இந்த தொடரை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இத்தாலியில் கண்ணுக்குத் தெரியாத சிற்பம் ஒன்று ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கடவுளை காட்டுவதாக கூறி ஒன்றுமில்லாத மலைமேல் கடவுள் வந்ததாக ஊரை ஏமாற்றுவார். அந்த பாணியில் இத்தாலியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் சால்வடோர் கராவ் என்பவர் “நான்” என்ற தலைப்பில் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் சிறப்பு என்னவென்றால் எந்த உருவமும் இல்லாத வெற்றிடத்தை சிற்பமாக வடிவமைத்துள்ளார். இத்தாலிய ஏல நிறுவனம் ஆர்ட் ரைட் மே மாதத்தில் “அளவிடமுடியாத சிலை” என்ற பெயரில் ஏலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த வெற்றிடம் முழுவதும் முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது என சால்வடோர் கொடுத்த விளக்கத்தை கேட்ட வாடிக்கையாளர் ஒருவர் ரூ.13 லட்சத்திற்கு சிற்பத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த சம்பவம் தான் தற்போது உலகம் முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது.- மூவேந்தன்

Read More

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவேன் என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் பங்கேற்காதது பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: சசிகலா ஆடியோ குறித்து விளக்கம் அளித்தார். அதிமுகவினரிடம் சசிகலா பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி, திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ் மாவட்ட செயலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்தும்…

Read More

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்திற்கான சிறப்பு எமோஜியை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். வரும் ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜியை வெளியிட்டுள்ளது. மீசை, கூலிங் கிளாஸ் உடன் இருக்கும் அந்த எமோஜியை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கடைசியாக நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு ட்விட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜியை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,80,259 ஆக உயர்வு – மொத்த உயிரிழப்பு 15,648 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 236 பேர் உயிரிழப்பு

Read More

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அன்புமணி கேள்வி அன்புமணி ராமதாஸ் இன்றும் தனது பிரசாரத்தில் ஆ.ராசா சர்ச்சை குறித்த கேள்விகளை எழுப்பினார். பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்ட அவர் தனது பிரசாரத்தில் முதல்வரின் தாயை ஆ.ராசா விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பேசினார். அப்போது, முன்னர் திமுகவில் இருந்த நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை அவதூறாகப் பேசிய போது அவர் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுத்த ஸ்டாலின், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரக் குறைவாக விமர்சித்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – என்றும், திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் யாரும் ஆ.ராசாவை கண்டிக்காதது ஏன்?…

Read More

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் 100க்கும் மேலான நாடுகளால் பயன்படுத்தப்படும் பொருள் – என்ற வகையிலும், இந்தியாவின் தேர்தலில் விதிகளை உறுதி செய்ய உதவும் ஒரு கருவி – என்ற வகையிலும் தேர்தல் மை வகிக்கும் இடம் மிக முக்கியமானது. இது கண்டுபிடிக்கப்பட்ட காரணமே சுவாரசியமானது. 1952ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்ற போது போலி வாக்காளர்களைக் கண்டறிய இந்தியத் தேர்தல் ஆணையம் பெரும்பாடு பட்டது. இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடிக்க பல கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த, இரண்டாவது பொதுத் தேர்தலிலிலும் போலி வாக்காளர்கள் பெரும் சிக்கலாக இருந்தனர். இந்நிலையில், தேசிய இயற்பியல் சோதனைக்கூடமான என்.பி.எல். (NPL – National Physical laboratory)லில் லண்டனைச் சேர்ந்த அறிவியலாளர் எம்.எல்.கோயல் தலைமையிலான குழுவே இறுதியில் ‘தேர்தல் மை’யை ஒரு நிரந்தரத் தீர்வாகக் கண்டு பிடித்தனர். இந்தியாவின் மூன்றாவது பொதுத் தேர்தலில் இந்த…

Read More

நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்த நிலையில், அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் மேற்கொண்டு பிரசாரம் செய்வது தடைபட்டு உள்ளது. மேலும் கடந்த சில தினங்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்தவர்களும் கொரோனா சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள செய்தியானது தமிழக அரசியல் களத்திலும், திமுகவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நமது நிருபர்.

Read More

பிரியா வேலு உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது தமிழில் மதி இறுக்கம் என்று அழைக்கப்படுகின்றது. மதியிறுக்கம் என்பது மூளையின் வளர்ச்சிக் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு குறைபாடு மட்டுமே நோயல்ல. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில்தான் மதியிறுக்க விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. மதியிறுக்கத்தின் வரலாற்றை நாம் பார்க்கப் போனால்… டாக்டர் லியோ கானர் என்பவர்தான் ஆட்டிசம் என வார்த்தையையே உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். அவர் 1943ல் “தனது பாசமான தொடர்பைச் சிதைக்கும் ஆட்டிசம் (Autistic Disturbances of Affective Contact)” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதில்தான் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்னைகள் பேசப்பட்டன. 1965ல் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் மற்றும் டாக்டர் ரூத் சல்லிவன் ஆகியோர் இந்தக் குறைபாடு குறித்த ஆய்வுகளுக்காக…

Read More

இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனப் போற்றப்படுபவர் தாதா சாகேப் பால்கே என்னும் துண்டிராஜ் கோவிந்து பால்கே. யார் இந்த பால்கே? ஏன் இவரை இந்தியத் திரைப்படத்துறையின் தந்தை என கூறுகிறார்கள்? எதற்காக இவர் பெயரில் விருது வழங்கப்படுகிறது? என்று பார்க்கலாம்… தாதாசாகேப் பால்கே 1870ல் நாசிக் அருகே உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். பம்பாய் ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கை காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் கற்றார். இந்தியாவுக்கு திரைப்படம் என்ற கலையே முழுதும் அறிமுகமாகாத காலகட்டத்தில், பால்கே தனது தீவிர முயற்சியால் ஒரு முழு நீளத் திரைப்படத்தை 1913ல் தயாரித்து இயக்கினார். அப்படியாக இவர் தயாரித்து இயக்கிய “ராஜா ஹரிச்சந்திரா” தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமாகும். அதற்கு முன்பு வெளிவந்த படங்கள் எல்லாம் முழுமையடையாத முயற்சிகளாக மட்டுமே இருந்தன. அன்றைய காலகட்டத்தில் திரைப்படம் எடுப்பது சுலபமான காரியம் இல்லை. நாடகங்களில் நடிக்கவே பெண்கள் பெரும்பாலும்…

Read More