- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
வாய்ஸ் மெசேஜ் சேவையை இன்னும் மேம்படுத்தும் புதிய அப்டேட்டை வாட்ஸப் நிறுவனம் உருவாக்கி உள்ளது. நேரில் பேசுவதைவிட எழுத்துப்பூர்வமாக உரையாடுவது சில நேரங்களில் நல்லது. குறிப்பாக லொடலொட என்று பேசும் மனிதர்களிடம் மணிக் கணக்கில் பேசினாலும் வெளிவராத தகவல்கள் அவர்களிடம் வாட்ஸப்பிலோ மெசேஞ்சரிலோ எழுத்துப்பூர்வமாக உரையாடினால் கிடைத்துவிடும். இதன் காரணம் தட்டச்சு செய்வதில் மனிதர்களுக்கு ஏற்படும் அலுப்புதான். ஆனால், வாட்ஸப் செயலியில் வாய்ஸ் மெசேஜ் தொழில்நுட்பம் வந்த உடன், லொடலொட என்று பேசுவபர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமாகிவிட்டது. அதே சமயம் அவர்களின் எதிர் முனையில் உள்ளவர்களுக்கு இது பெரிய தலைவலியாகவும் உள்ளது. அவ்வளவையும் பொறுமையாகக் கேட்க வேண்டிய நிர்பந்தமும், நேர விரயமும் இதனால் ஏற்படுகின்றன. இதனை மனதில் வைத்து வாய்ஸ் மெசேஜ் சேவையில் ஒரு புதிய வசதியை வாட்ஸப் உருவாக்கி உள்ளது. வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர்களில் நாம் பாஸ்டு பார்வர்டு பொத்தானைப் பயன்படுத்தி ஒரு ஒலிப்பதிவை அதிக வேகத்தில்…
2006ஆம் ஆண்டில் பதிவிடப்பட்ட ஒரு டுவிட்டர் பதிவு 18 கோடி ரூபாய் மதிப்புக்கு சமீபத்தில் ஏலத்தில் விற்கப்பட்டு உள்ளது!. கலைப் பொருட்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், ஆட்டோகிராப்புகள் ஆகியவற்றின் வரிசையில் இப்போது இணையப் பதிவுகளும் ஏலப் பொருட்களாகிவிட்டன. வேல்யுபில்ஸ் என்ற நவீன ஏல நிறுவனமானது இணையத்தில் வெளியான ஒரு குறிப்பிட்ட பதிவின் டிஜிட்டல் சான்றிதழை எழுத்து அதை உருவாக்கிய நபரைக் கொண்டே சரிபார்த்து, உருவாக்கியவரின் கையெழுத்துடன் விற்கிறது. இதற்கு என்.எஃப்.டி. (NFD – Non-Fungible Token) என்று பெயரும் சூட்டியுள்ளது. இதன் மூலம் ஒரு இணையப் பதிவு சான்றிதழ் வடிவிலான கலைப் பொருளாகின்றது. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி கடந்த 2006ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிட்ட டுவிட்டர் பதிவை சமீபத்தில் இந்த நிறுவனம் டிஜிட்டல் சான்றிதழாக மாற்றி இணையத்தில் விற்றது. இந்த சான்றிதழ் 29 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 18 கோடிக்கு ஏலம்…
ஐபோன் 12 மினி கைபேசியுடன் சார்ஜரை கொடுக்காத ஆப்பிள் நிறுவனத்துக்கு பிரேசில் நாட்டு நுகர்வோர் அமைப்பு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்தது. பிரபல கணினி மற்றும் கைபேசி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சமீபத்தில் தனது ஐபோன் 12 மினி வகை கைபேசிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரிலேயே, ‘ஐபோன் 12 மினியுடன் சார்ஜரோ இயர் பட்களோ அளிக்கப்பட மாட்டாது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை’ – என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்தும் இருந்தது. இந்நிலையில் பிரேசில் அரசின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான புரோகான் எஸ்பி, ‘பிரேசில் நாட்டின் நுகர்வோர் சட்டங்கள் வலிமையானவை. ஆப்பிள் அந்த சட்டங்களையும் நுகர்வோர் அமைப்புகளையும் மதிக்க வேண்டும்’ – என்று சொல்லி ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்ற பெரிய தொகையை அபராதமாகவும் வித்து உள்ளது. ஒரு கைபேசியை விற்கும்போது அதற்கான சார்ஜரை கூடவே வைக்காமல் இருப்பது நுகர்வோரை…
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக உள்ள வெங்கடேஷ் பட் பி.எம்.டபிள்யூ கார் வாங்கி உள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. தமிழக அளவில் மிக அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த ஷோவில் இப்போது இறுதிச் சுற்றுக்கான போட்டியாளர்களாக கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். விரைவில் வைல்ட் கார்டு சுற்றில் வெற்றி பெறப் போகும் நபர் நான்காவது போட்டியாளராக இறுதிச் சுற்றுக்கு செல்ல இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ள நடிகர் புகழ் சமீபத்தில் தனது முதல் காரை வாங்கினார். அதுபற்றிய அவரது காணொலி சமூக வலைத் தளங்களில் வைரலானது. இப்போது அந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் புதிய காரை வாங்கி உள்ளார். பி.எம்.டபிள்யூ பிராண்டைச் சேர்ந்த எக்ஸ்7 கார் அது. விலை 1…
பாரிஸ்: 24 மணி நேரத்தில் 45,000 நபர்களைக் கொரோனா தாக்கிய சூழலில் பிரான்ஸ் நாட்டில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமலானது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சில் மார்ச் 26ஆம் தேதிமுதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடந்த சில நாட்களாக பிரான்சில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று மார்ச் 26ஆம் தேதியன்று 24 மணிநேரத்தில் 45,000 நபர்களுக்குப் பரவியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பிரான்சில் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் அறிவித்தார். இந்த ஊரடங்கின் படி பிரான்ஸ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான விதிமுறைகள் அமலாகி உள்ளன. உணவகங்கள், அருங்காட்சியகங்கள், கேளிக்கை விடுதிகள் – உள்ளிட்டவை இனி இரவில் மூடப்படுகின்றன. வரும் நாட்களில் இந்தக் கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பிரான்ஸ்சில் உள்ள மருத்துவ அமைப்புகளுக்கு இனி அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும் என பிரான்ஸ் நாட்டின் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆலிவர் வெரான் கூறி…
மே.வங்கத்தில் இன்று தொடங்கிய முதற்கட்ட தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் முன் வைத்துள்ளது. ஐந்து மாநில தேர்தல்கள் மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் முதற்கட்டத் தேர்தலோடு இன்று தொடங்கின. மேற்கு வங்கத்தில் இன்று 30 தொகுதிகளின் முதற்கட்ட தேர்தலோடு தொடங்கும் பேரவைத் தேர்தலானது ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் எட்டாம் கட்ட தேர்தலோடு நிறைவடையும். இந்நிலையில் முதற்கட்ட தேர்தலை எதிர்கொண்டுள்ள மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடப்பதாக அடுத்தடுத்த புகார்களைத் தெரிவித்து உள்ளது. காந்தி தக்ஷின் என்ற தொகுதியில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொத்தானை அழுத்தினாலும், ஓட்டு பாஜகவுக்கே விழுகின்றதாக விவிபாட் எந்திரம் காட்டியது என்று அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் குற்ரச்சாட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவிகிதம் திடீரென குறைக்கப்பட்டு உள்ளதாகவும் புகைப்படங்களோடு திரிணமூல் காங்கிரஸ்…
ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு பாகம் 1: கண்ணீர் நிலம் இரா.மன்னர் மன்னன் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் நிறவெறி கொண்ட அரச குடும்பத்தினர் உள்ளதால்தான் இளவரசர் ஹாரியும் அவர் மனைவி மேகன் மார்க்கலும் அங்கிருந்து வெளியேறி உள்ளனர் – என்பது பக்கிங்ஹாம் அரண்மனை குறித்து எழுந்துள்ள புதிய சர்ச்சை. ஆனால் சர்ச்சைகள் பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் புதியவை அல்ல!. உலகிலேயே மிகவும் வெறுக்கப்படும் அரண்மனை என்று அழைக்கப்படும் பக்கிங்ஹாம் அரண்மனையில், அரச குடும்ப ஆண்கள் யாருமே நிம்மதியாக இருந்தது இல்லை என்றே இங்கிலாந்தின் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி என்னதான் நடந்தது பக்கிங்ஹாம் அரண்மனையில்? கடந்த கால வரலாற்றைப் பார்ப்போம் வாருங்கள். உலகின் ஒவ்வொரு அரச குடும்பத்திற்கும் தலைமுறை தலைமுறையாக பல மாளிகைகள் இருக்கும். பின்னர் ஏதாவது ஒரு மாளிகை அரண்மனையாக மாறும். இதுதான் உலக வழக்கம். ஆனால் அரச குடும்பத்தினருக்காகக் கட்டப்படாத ஒரு கட்டடம் பின்னர் அரண்மனையான விநோதம்தான் பக்கிங்ஹாம்…
தனது பெயரையும் புகைப்படத்தையும் அனுமதியின்றி பயன்படுத்திய செல்ஃபோன் செயலிக்கு காங். தலைவர் சசி தரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிளாக்போர்ட் ரேடியோ என்ற ஆங்கில மொழி கற்பிக்கும் செல்போன் செயலியானது, தனது விளம்பரத்தில் ’speak English as fluently as shashi tharoor’ என்று விளம்பரப்படுத்தி இருந்தது. அப்படி என்றால், ”சசி தரூர் போல சரளமாக ஆங்கிலம் பேசலாம்” என்பது அர்த்தமாகும். கொஞ்ச காலமாக நெட்டில் உலாவிக்கொண்டிருந்த இந்த விளம்பரத்தை ஒருவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சசி தரூரின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதனை கண்டதும் உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கும் தனக்கும் தொடர்பில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சசி தரூர். ”இந்த செயலிக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, இதனை நான் அங்கீகரிக்கவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். வணிக நோக்கங்களுக்காக எனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்துவதை நிறுத்த சட்ட நடவடிக்கை எடுப்பேன் “ என்று அந்த…
திரைப்படத் தயாரிப்பில் பெரிதும் அறியப்பட்ட ஏவி.எம் நிறுவனம் வெப் தொடர் தயாரிப்பில் களம் இறங்கி உள்ளது. தமிழ்த் திரையுலகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்தான் ஏவி.எம். புரொடக்ஷன்ஸ். தரமான திரைப்படங்களை குடும்பத்தோடு ரசிக்கும்படி கொடுப்பதே ஏ.வி.எம் நிறுவனத்தின் தனித்துவம். சமீபத்திய ஆண்டுகளில் திரைப்படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏவி.எம் நிறுவனம் தற்போது தனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்து உள்ளது. அந்த அறிவிப்பின்படி “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற வெப் தொடரை ஏவி.எம் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது இவர்களின் முதல் வெப் தொடர் ஆகும். ஈரம், வல்லினம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இந்த வெப் தொடரை இயக்க உள்ளார். திரைப்படங்களைத் திருடி இணையத்தில் வெளியிடும் ஒரு திருட்டுக் கூட்டத்தை மையமாகக் கொண்ட த்ரில்லர் தொடராக இது இருக்கும் என்று தயாரிப்புக் குழு கூறி உள்ளது. மேலும், ஒருவரின் படைப்பை சட்ட…
ஒரு மொழியில் ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் இருந்தால், அந்த சொற்களுக்கு உரிய பொருளுக்கும் அந்த மொழிக்கும் இடையே நீண்டகால நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பொருள். அரபு மொழியில் ஒட்டகத்தைக் குறிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன என்பது இதற்கான சிறந்த உதாரணம். தமிழில் சங்ககாலம் குறித்தே மிக அதிக சொற்களால் குறிக்கப்பட்ட ஒரு விலங்கு யானை. தமிழில் யானையைக் குறிக்கக் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. யானையைக் குறிக்கக் கூடிய சில வடமொழிச் சொற்களும் கூட தமிழில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. உதாரணமாக சில சொற்களை பார்க்க வேண்டும் என்றால், அடுங்குன்றம், அத்தி, அரணமத்தம், அருணம், அறுகு, அறுகை, ஆம்பலரி, ஆம்பல், அழுவை, ஆனை, இடறி, இடம்மடி, இருள், உடாலடி, உம்பல், உல்லப்பியம், எயிறு, எருவை, எறும்பி, ஐநகம், ஓங்கல், கடாசலம், கடிவை, கடிறு, கடுமா, கம்பமா, கயம், கரபம், கராசலம், கரி, கருமா, கவளமான், களபம்,…