- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை தொடங்குமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. புதிதாக அமையவுள்ள மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களும் பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயில்வோர் – போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைக்…
ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது தமிழக அரசு. அதே சமயம், 27 மாவட்டங்களுக்கு தளர்வுகளும் 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்: தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் , இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி. அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்படலாம். கொரோனா பரவல் அதிகம் இருக்கும் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தகக்கடைகள் இயங்க அனுமதி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு தொடரும் சென்னையில் தொற்று குறைவதால் 27 மாவட்டங்களில் சென்னையும் அடங்கும்…
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். இதனையடுத்து ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றன. ஆனால் ட்ரம்ப் அவரது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை இதனால் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அவரது பதிவுகளால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் பேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்கள் முடக்கபட்டன. இந்த நிலையில் தற்போது இந்நிலையில், டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயலுக்கு டிரம்ப் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.- மூவேந்தன்
கொரோனா வைரசின் முதல் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அப்போது அதிபராக இருந்த டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது வெளியான செய்திகளில், உகானில் உள்ள ஆய்வகத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா அரசு கூறுகிறது. அதே சமயம் அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என சீன அரசு பதில்கூறியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் தோற்றத்தை 90 நாட்களில் கண்டுபிடிக்குமாறு உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இதனால் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த சூழலில் முன்னாள் அதிபர் டிரம்ப், “நான் அப்போதே கூறினேன் சீன வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று… நான் கூறிய கருத்தை இப்போது எதிர் கட்சியினரும் சொல்லத் தொடங்கி விட்டனர். கொரோனாவைரசினை…
கம்போடியாவில் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தங்கப்பதக்கம் வென்ற எலி தனதுபணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. மகாவா (MAGAWA) என்ற எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதுவரை 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது. மகாவா வகை எலியானது வீடுகளில், வயல்களில் காணப்படும் எலி அல்ல மாறாக ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரிய ரக எலி. கம்போடியாவில் மாகாவா செய்யும் உயிர்காக்கும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் , பிரிட்டனைச் சேர்ந்த கால்நடைகளுக்கான அறநிறுவனம் கடந்த ஆண்டு எலிக்கு தங்கப் பதக்கம் வழங்கியது. மகாவா எடை குறைவாக இருப்பதால், கண்ணிவெடிகள் இருக்கும் இடத்தை அதனால் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்க முடியும். கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்காக அதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. மகாவா எலி 7 ஆண்டுகளாக கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அதற்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் சுமார் 80 மில்லியன் வெடிக்கக்கூடிய கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இருக்கும்…
டெல்லியில் தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த அழைப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியை கொல்லப்போவதாக தெரிவித்துவிட்டு போனைத் துண்டித்துள்ளார். சம்பந்தப்பட்ட எண்ணை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கஜூரி ஹாஸ் பகுதியைச் சேர்ந்த சல்மான் அர்மான் என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் தனது தந்தை திட்டிக்கொண்டே இருப்பதால் சிறை செல்வதற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார். ஏற்கனவே கொலை குற்றத்திற்காக சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த அவர் சிறையில் இருக்கவே தனக்கு பிடித்துள்ளத்தாகவும் கூறியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவேந்தன்
நடிகை ஓவியா நடித்துள்ள புதிய வெப் தொடர் இன்று முதல் யூ-டியூப் இணையதளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. களவாணி, கலகலப்பு போன்ற படங்களில் நடித்த நடிகை ஓவியா பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே மிகப் பெரிய அளவில் பிரபலமானார். அவருடைய பெயரில் ஆர்மி தொடங்கப்பட்டது தனிக்கதை. இதன்பிறகு 90 எம்.எல்., காஞ்சனா-3 ஆகிய படங்களில் நடித்த அவர் தற்போது வெப் தொடர் களில் நடிக்க தொடங்கியுள்ளார். “மெர்லின்” என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர் இன்று (ஜூன் 5 ஆம் தேதி) முதல் ஆரஞ்சு மிட்டாய் என்ற யூ-ட்யூப் பக்கத்தில் ஒளிபரப்பாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகும் இந்த தொடரை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் கண்ணுக்குத் தெரியாத சிற்பம் ஒன்று ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கடவுளை காட்டுவதாக கூறி ஒன்றுமில்லாத மலைமேல் கடவுள் வந்ததாக ஊரை ஏமாற்றுவார். அந்த பாணியில் இத்தாலியைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் சால்வடோர் கராவ் என்பவர் “நான்” என்ற தலைப்பில் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் சிறப்பு என்னவென்றால் எந்த உருவமும் இல்லாத வெற்றிடத்தை சிற்பமாக வடிவமைத்துள்ளார். இத்தாலிய ஏல நிறுவனம் ஆர்ட் ரைட் மே மாதத்தில் “அளவிடமுடியாத சிலை” என்ற பெயரில் ஏலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த வெற்றிடம் முழுவதும் முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது என சால்வடோர் கொடுத்த விளக்கத்தை கேட்ட வாடிக்கையாளர் ஒருவர் ரூ.13 லட்சத்திற்கு சிற்பத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த சம்பவம் தான் தற்போது உலகம் முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது.- மூவேந்தன்
சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவேன் என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் பங்கேற்காதது பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: சசிகலா ஆடியோ குறித்து விளக்கம் அளித்தார். அதிமுகவினரிடம் சசிகலா பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி, திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ் மாவட்ட செயலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்தும்…