சிங்கங்களுக்கு கொரோனா.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

SHARE

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு உரிய இடங்களைத் தவிர மற்ற இடங்களான உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் போன்றவை மூடப்பட்டன.

அந்த வகையில் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், பூங்கா மருத்துவர்கள் உள்ளிட்டோர் விலங்குகளை பரிசோதித்தனர்.

பூங்காவில் உள்ள சிறுத்தை, புலி சிங்கம் உள்பட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 9 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அங்கு ஆய்வு நடத்தினார்.

அப்போது கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிகிச்சை வழங்குவது மற்றும் பிற உயிரினங்களை தனிமைப்படுத்துதல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் கேட்டறிந்தார்.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

”1 தொகுதிதானா? மாநிலங்களவை ல பாத்துக்குறேன்” – வைகோ சொன்னது என்ன?

Admin

மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு..!!

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி…!

Admin

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

Leave a Comment