சிங்கங்களுக்கு கொரோனா.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

SHARE

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு உரிய இடங்களைத் தவிர மற்ற இடங்களான உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் போன்றவை மூடப்பட்டன.

அந்த வகையில் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், பூங்கா மருத்துவர்கள் உள்ளிட்டோர் விலங்குகளை பரிசோதித்தனர்.

பூங்காவில் உள்ள சிறுத்தை, புலி சிங்கம் உள்பட விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 9 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அங்கு ஆய்வு நடத்தினார்.

அப்போது கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிகிச்சை வழங்குவது மற்றும் பிற உயிரினங்களை தனிமைப்படுத்துதல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் கேட்டறிந்தார்.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களும் பணியைத் தொடங்கலாம்: தமிழக அரசு

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment