விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் கொண்டாடுவது பற்றி இந்து முன்னணியினர் கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை உருவாக்கி உள்ளதாக கூறினார்.
மேலும், இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் ரமலான், பனிமயமாதா திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் கொண்டாடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடைபெற்றுவருகிறது.
ஆகவே இந்த ஆண்டு அரசு அனுமதியுடன் விநாயகர் சதுர்த்திக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஊர்வலம் நடத்த அரசு அனுமதி வழங்கவேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பா.ஜ.க பிரமுகர் கே.டி.ராகவன் விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட நபர் மதன்ரவிச்சந்திரன் குறித்து பேசிய சுப்பிரமணியம், ”மதன் மன நலம் சரியில்லாத நபர், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தொகுப்பாளராக வரும் பெண்ணை மதன் பல ஊர்களுக்கு கூட்டிக்கொண்டே சுற்றியுள்ளார். எனவே அந்த பெண்ணிற்கும், மதனுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
1 Comment
Pingback: இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன? - Mei Ezhuththu