- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
நவம்பர் 8, 1680 அன்று இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1710-ஆம் ஆண்டு அவரது 30-ஆவது வயதில் தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. கிருஸ்தவ பரப்புக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதால் செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; “சுவடி தேடும்…
திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக இருந்து குறளை எழுதினார் – என்ற பேரா.தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்கு உரியது திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார். இந்தக் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு அடிப்படையில் கவனிக்க வேண்டியது திருவள்ளுவர் பிறந்த ஆண்டு என ஆய்வாளர்கள் கூறுவது கி.மு.31ஆம் ஆண்டு, ஏசு பிறந்தது என்று ஆய்வாளர்கள் கூறுவது கி.மு.6ஆம் ஆண்டு (ஆமாம் வரலாற்றின்படி கி.மு.என்பது கிறிஸ்துவுக்கு முன் அல்ல!.). அடுத்து ஏசு பிறந்த உடன் அல்லது அவர் இறந்த உடன் கிறிஸ்தவம் உருவாகி பரவி விடவில்லை. ஏசு இறக்கும்போது அவரே ஒரு யூதராகத்தான் இறந்தார். ஏசு இறந்த பின்னர் அவரது சீடர்கள் அனைவரும் வேட்டையாடப்பட்ட பின்னர் வெகுகாலம் கழித்து போப்புகள்தான் ஏசுவைக் கையில் எடுத்து ஒரு புதிய மதத்தை உருவாக்குகின்றனர். கிறிஸ்தவம் என்ற மதம் திருவள்ளுவருக்கு குறைந்தது ஒரு நூற்றாண்டாவது இளைய மதமாக இருக்கும். அடுத்து, ஏசுவின் கொள்கைகளும் திருவள்ளுவரின் கருத்துகளும் ஒன்றாக…
ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜெய்பீம் திரைப்படத்தில், பழங்குடியின மக்களுக்கு எதிரான மனநிலை கொண்ட காவல் ஆய்வாளர் கதாப்பாத்திரம் தொலைபேசியில் பேசும்போது, பின்னே உள்ள 1995ஆம் ஆண்டின் காலண்டரில் அக்னி சட்டி உள்ளது. பொதுவாக அக்னி சட்டி குறியீடு வன்னியர் சங்கங்களின் காலண்டர்களில்தான் காணப்படும் என்பதால் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெய்பீம் திரைப்படத்தில் வட்டார வழக்கில் வசனங்களை மாற்றியமைக்க உதவியவர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். இதற்காக படத்தின் டைட்டில் கார்டில் அவருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் இந்த சர்ச்சை குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விரிவான பதிவை இட்டார். அந்தப் பதிவு: “விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வாகவே எனக்கு விருப்பம். சினிமாவின் மீது எனக்கு எப்போது ஈடுபாடு இருந்ததில்லை. இந்நிலையில், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் என் வீட்டுக்கு வந்தார். இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு வட்டாரமொழியில் இருந்தால் சிறப்பாக இருக்கும்.…
வாராவாரம் யார் எலிமினேட் ஆகுவார் என்று முன்னாடியே தெரியுற மாதிரி இந்த வாரமும் ஞாயிறு காலையிலேயே சின்னபொண்ணுதான் எலிமினேட்டுன்னு தகவல் கசிய ஆரம்பித்தது. இது ஏற்கனவே எல்லாருக்கும் தெரிஞ்சதுதான், இந்த மாதிரி சில விளையாட்டுக்கு பொருந்தாதவர்களை எல்லாம் எப்படியும் சீக்கிரம் ஓரங்கட்டிடுவாங்க அப்படிங்குறது, ஆனாலும் பிக் பாஸில் இந்த மாதிரி ஆட்களை ஏன் செலக்ட் பண்றாங்கன்னு புரியல… அகம் டிவி வழியாக வந்த கமல், கன்பெஷன் ரூமில் ஹவுஸ்மேட்ஸ் உபயோகிக்கும் வார்த்தைகளை வைத்து அவர்களுக்கே ரிவீட் அடிப்பது போல் டாஸ்க் கொடுத்தார். FAKE, ESCAPE FROM WORK, PARTIALITY, BIASED, CONFUSED, NOT UNDERSTANDING THE GAME, HURTING OTHERS – என்று இருந்த பேட்சுகளை காட்டி, யார் யார் எந்தெந்த ஹவுஸ்மேட்ஸ்க்கு என்ன பெயர் கொடுப்பீர்கள்? – என்று ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னார். இதில் அதிக பேட்சுகள், கிட்டதட்ட எல்லா பேட்சும் அக்ஷராவுக்குத்தான் கொடுக்கப்பட்டது. அதை ஆரம்பித்ததும் பிரியங்கா தான்.…
இந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த முதல் முக்கிய சண்டை. கமல் இந்த விஷயத்தை எப்படிப் பாக்கிறார்?. யாரை எல்லாம் என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறார்? – என்று எதிர்பார்த்த எபிசோட். தாமரையும் சுருதியும் கூட, ”நான் அவர்கிட்டயே பேசிக்கிறேன்” என்று கோபத்தை அடக்கிவைத்துக் கொண்டு இருந்தனர். கமலும் வந்தவுடன் அதை இதை என்று வளக்காமல், தாமரையைப் பார்த்து ”சொல்லுங்க தாமரை, என்கிட்ட பேசணும்னு வெயிட் பண்றீங்க, சொல்லுங்க ”என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார். தாமரையும் நடந்தது அனைத்தையும் எமோஷன்ஸ் மாறாமல் கூறினார். அப்பப்பா எத்தனை உணர்ச்சி தாமரையின் முகத்தில், சுருதி மேல் இருக்கும் கோபம், கைக்கு கிடைத்த நாணயம் பறிபோனதில் உள்ள ஏமாற்றம், நம்பிய பாவ்னி செய்த துரோகம், தான் கத்தக் கூட முடியாத நிலையில் இருந்த சங்கடம் என்று அனைத்து உணர்ச்சிகளையும் சேர்த்து கமலிடம் கொட்டித் தீர்த்தார். பிறகு சுருதியிடமும் அவர் தரப்பு விவகாரங்களையும் கேட்டுக் கொண்டார் கமல். …
நேற்று நடந்த டாஸ்க்கில், சுவாரஸ்யம் இல்லாத நபர்களாக வருணையும் அபினய்-யையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வெளியே விடியும்வரை நெருப்பு எரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர்களை கண்காணிக்கும் காப்பாளராக இமான் நியமிக்கப்பட மூவரும் வெளியில் நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் வருண் தூங்கிவிட, பிக் பாஸும் நீங்க வீட்டுக்குள்ளையே போய் தூங்குங்கடா என்று அனுப்பிவிட்டார். ‘அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு…’ பாடலுடன் தொடங்கியது நாள். கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த தாமரையும் சின்னபொண்ணுவும் கத்திக்காக அபினயிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பழம் வெட்டிக் கொண்டிருந்த அபினயிடம், ’கத்திக் கொடுப்பா’ என்று தாமரையும், சின்னப்பொண்ணுவும் கத்தி கத்திக் கேட்டதில் கோபமாக கத்தியை தூக்கிபோட்டு விட்டு சென்றார் அபினய். ’உங்களுக்கு என் கூட சண்டைப் போடணுமா’? என்று தாமரை நேரடியாக கேட்க, அதற்கு அபினய் ’இந்த வீட்ல சண்டைப் போடுற கடைசி ஆள் நானாதான் இருப்பேன்’ என்று கூறி காய்கறி வெட்டுவதற்கு உதவியும் செய்தார் அபினய். அடுத்து விவாத மேடைக்கு…
ஜெய் பீம் படத்தைப் பார்க்கும் மக்களில் சிலர் உண்மையிலேயே இப்படியும் நடக்குமா? இதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டதா? – என்று கேள்வி எழுப்புகின்றனர். நிஜத்தில் நடந்தது படத்தை விடவும் மோசமானது. தமிழக நீதித்துறை வரலாற்றில் 13 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த ஒரே ஆட் கொணர்வு மனுவின் வரலாறு அது. அதை பற்றிய விரிவான பதிவை ஊடகவியலாளர் கார்த்திக் புகழேந்தி தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவு உங்களுக்காக… கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனை கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்கள் 1970கள் முதல் அங்கு வாழ்ந்துவந்தனர். (குரும்பர்கள் வேட்டை, மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுபவர்கள். வில் எய்வது இவர்கள் முன்னோர் தொழில்.) 90களின் மத்தியில், சுற்றுவட்டார கிராமங்களில் வயல் அறுவடைக் காலங்களில் குடும்பத்தோடு கூலி வேலைக்குச் செல்வது அவர்களது உபதொழிலாக இருந்துவந்தது. 1993ஆம் ஆண்டில் மார்ச்…
”நெருப்பு கூத்தடிக்குது… காத்தும் கூத்தடிக்குது…” என்ற பாடலுடன் தொடங்கியது நாள். பிக் பாஸோட குட்மார்னிங் சாங்கில் எப்பவும் யாருக்காவது மெசேஜ் இருக்கும், இந்த பாட்டும் அதே மாதிரிதான். இந்த வாரம் நெருப்பு வாரம் என்றும் பஞ்சதந்திரம் போட்டியில், நெருப்பு நாணயம் வைத்திருக்கும் இசைவாணிக்கான ஸ்பெஷல் வாரம் என்பதால், அவர் இருக்கும் கிச்சன் ஏரியா அவர் கண்ட்ரோலில்தான் இயங்கும் என்றும் பிக் பாஸ் அறிவித்தார். பிக் பாஸ் சொன்ன உடனேயே, இசைவாணி ’என்னைக் கேக்காம கிச்சனில் எதுவும் எடுக்காதீங்க… இதுக்காக யார் என்னை கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை’ என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் பாவம், இசைவாணி சொன்னதை யாரும் சட்டையே செய்யவில்லை. அதற்கேற்றார் போல் இசைவாணியும் மற்றவர்களை சரியாகக் கவனிக்கவில்லை… நிரூப் அதிக புளியை ஊறவைத்தது, தாமரை அதிக எண்ணெய்யுடன் குழம்பு வைத்தது என்று தவறுகளை கூறிய இசை, இந்த தவறுகளை நடப்பதற்கு முன்னே எச்சரிக்கையுடன் கவனிக்கத் தவறிவிட்டார். வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி…
சண்டே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே இவர் தான்ப்பா இன்னிக்கு எலிமினேஷன்னு தகவல் பரவுறது வாடிக்கையான விஷயம்… அதே மாதிரி தான் இந்த சண்டே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே அபிஷேக் எலிமினேட் ஆயிட்டாருன்னு தகவல் பரவ… பலர் இந்த தகவலுக்கு ’அப்பாடா போயிட்டானா’… அப்படின்னு சந்தோஷப்பட்டாலும்… ஒரு சிலர் ’அப்படி எல்லாம் இருக்காது, அவன் தாங்க நல்லா கன்டெண்ட் குடுத்துட்டு இருந்தான், அவனைப்போய் பிக் பாஸ் தூக்கிடுவாரா?’ என்றும் கேள்வி எழுப்பினர். சரி பார்த்தே தெரிஞ்சிப்போமே என்று, இந்தியா பாகிஸ்தான் மேட்சை பார்கிறதா பிக் பாஸ் பார்கிறதான்னு குழம்பி இருந்தவங்களுக்கு, கிரிக்கெட் மேட்ச் வழிவிட்டதால் அனைவரும் பிக் பாஸ் பக்கம் வந்தனர். ’அய்யோ ஆமா’ என்பது போல் அபிஷேக்தான் எலிமினேட் செய்யப்பட்டார். இறுதி எலிமினேஷனில் அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு இருக்க, அபிஷேக்கின் கார்ட்டைக் கமல் காட்டியதும், ஹவுஸ்மேட்ஸ் அனைவரின் முகமும் மாறியது. இதில் நாணயம் வைத்திருக்கும் அனைவரும் வந்து ’என்…
1956 நவம்பர் 1ஆம் தேதியன்று இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை பல மாநிலங்களும் தங்கள் மாநில நாளாகக் கொண்டாடி வருகின்றன. இதில் கர்நாடகா, ஆந்திரா, கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவிலேயே நடக்கும். ஆனால் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மாநிலநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது இல்லை. ஆனால் அதனால் தமிழகத்திற்கு மாநில நாளே இல்லை – என்று கூற இயலாது. 1981ஆண்டில் 25ஆவது தமிழ்நாடு நாளை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். கொண்டாடி இருக்கிறார். 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக 50ஆவது தமிழ்நாடு நாளைக் கொண்டாட மறந்தாலும், சில தமிழர் அமைப்புகள் கொண்டாடின. குறிப்பாக கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் பெரும் விழா எடுத்து ‘தமிழ்நாடு 50’ எனக் கொண்டாடினார். அதை அரசு செய்யத் தவறியது குறித்து பேட்டிகளும் அளித்தார். அதனைப் பார்த்த அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தொடர்புடைய அமைச்சர்களை ’ஏன் நினைவூட்டல் செய்யவில்லை?’…