Author: இரா.மன்னர் மன்னன்

கொரோனா ஒழிப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று 50 லட்சம் ரூபாய் நிதி அளித்தார். சென்னை கொரோனாவில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர். நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ. 1 கோடியும், நடிகர் அஜித் ரூ. 25 லட்சமும் நிதி அளித்தனர். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரூ.1 கோடி நிதி அளித்தார். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் முதல்மைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசின் கொரோனா ஒழிப்பு பணிகளுக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.- நமது நிருபர்

Read More

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வாக சொல்லப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்படுகின்றன. மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கொரோனாவுக்கு எதிரான 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது. தண்ணீரில் கலந்து உட்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை டிஆர்டிஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளன. இந்த மருந்தானது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவும் என்பது பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது. எனவே, அவசரகால தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. இதையடுத்து 2-டிஜி மருந்தை டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்…

Read More

புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசுடனான ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதிலும் அமல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு மாறாக மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அறிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளிக்காத நிலையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மாநில செயலாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையை, தமிழக அரசு புறக்கணித்துள்ளது.- கெளசல்யா அருண்

Read More

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தமிழர் என்கிற தேசிய இன மக்கள் தங்களுடைய மொழி, நிலம், பண்பாடு, வரலாறு அனைத்தையும் காத்து, அவற்றைத் தலைமுறைகள் தோறும் கடத்திட தனக்கென சர்வ அதிகாரமும் கொண்ட இறையாண்மையுள்ள தமிழ்த்தேச குடியரசை தமிழர் தாயகத்தில் நிறுவது – இதுதான் தமிழ்த் தேசியம் என்கிற விடுதலை கருத்தியலுக்கான எளிய விளக்கம். இப்புவிப்பந்தில் தமிழருக்கான தாயகமாக விளங்குவது தமிழ்நாடு மற்றும் தமிழீழம். ஈழத்தில் தமிழ் தேசியம் என்கிற விடுதலை கருத்தியல் தமிழ்மக்களின் ஒன்றுபட்ட உணர்வாய் கலந்து, செயல்வடிவம் பெற்று, தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற தமிழர் இராணுவத்தின் ஊடாக சுதந்திர தமிழீழ அரசு அமைந்து, பின்பு 2009இல் வல்லரசு நாடுகளின் சதித்திட்டங்களாலும் சூழ்ச்சிகளாலும் தற்காலிகமாக தமிழர் அரசு வீழ்த்தப்பட்டது. தற்போது ‘தமிழ்த்தேசியம்: மீளெம்புதல்’ என்கிற கட்டத்தை நோக்கி தமிழீழம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் எந்நிலையில் இருக்கிறதெனில் ‘தமிழ்த்தேசியமா? அப்படினா? வார்த்தையே புதுசா இருக்கு! எதாவது படத்தோட பேரா?’ -…

Read More

வருத்தப்படாத வாலிப சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்த நகைச்சுவை நடிகரும் திரைப்பட இணை இயக்குநருமான பவுன்ராஜ் மாரடைப்பால் இறந்தார். தமிழக திரைத்துறையில் நடிகர் விவேக்கின் மரணம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் சமீபத்தில் வடிவேலுவின் ’கிணத்த காணோம் சார்’ நகைச்சுவையில் காவல்துறை அதிகாரியாக நடித்த நெல்லை சிவாவும் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தது கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் தற்போது வருத்தப்படாத வாலிப சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்த நகைச்சுவை நடிகரும் திரைப்பட இணை இயக்குநருமான பவுன்ராஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்து உள்ளார். திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் கூட திடீரென ஏற்பட்ட மாரடைப்பால்தான் மரணம் அடைந்தார். திரைத்துறையினர் அடுத்தடுத்து மாரடைப்பால் இறப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.- நமது நிருபர்

Read More

கடந்த முறை ஊரடங்கின் போது வாங்கிய திரு. வேல. ராமமூர்த்தி அவர்களின் நாவல்களை ஒரே மூச்சில் வாசித்து முடித்த பின் சிறுகதைத் தொகுப்புகளை மட்டும் பின்னர் வாசிக்கலாம் என்று எடுத்து வைத்ததில் இப்போது தான் மீண்டும் கைக்கு அகப்பட்டது இந்நூல். இந்நூலை வாசிக்கையில், நான் நூலின் முன் அட்டையை ஏறக்குறைய ஒரு பத்து முறையேனும் திருப்பி பார்த்திருப்பேன். நாம் வாசிப்பது சிறுகதை தொகுப்பு தானா அல்லது முன்னர் வாசித்த அவரது நாவல்களின் தொடர்ச்சியா என. காரணம், கதை மாந்தர்களின் பெயர்களும் இயல்பும். வேயன்னா, சேது, அன்னம்மா, வில்லாயுதம், இருளாயி என நாவல் பாத்திரங்களே இச்சிறுகதைகளுக்கும் உயிரூட்டியுள்ளனர். ஆனால், இவ்வாறு அப்பாத்திர பெயர்களையே இச்சிறுகதைகளின் மனிதர்களுக்கும் சூட்டியிருப்பதிலிருந்து ஓர் உண்மையை உணர முடிகிறது. இவையெல்லாம் வெறும் புனைவல்ல. இரத்தமும் சதையுமாய் வாழ்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள் தானென்று. களவினையே குலத் தொழிலாகக் கொண்டிருந்த ஒரு கிராமம் களவினைக் கைவிட்டு சம்சாரிகளாய் (விவசாயிகளாய்) மாறிய…

Read More

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை அமைப்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறினார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு மாநிலங்களில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகல் உயிரிழந்த சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க அயல்நாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்தாலும் மருத்துவமனைகளில் போதிய வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் பலர் மருத்துவமனையின் வாயில்களில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில் தமிழக அரசு கொரோனா சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு…

Read More

‘ராணியாய், ஜமீன்தாரிணியாய், எஜமானியாய் இந்தப் பெண்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப்பின்னால் எத்தனை சிக்கல்கள் இருந்திருக்கும்’ என்ற கவிஞர் வைசாலியின் சிந்தனையே நாவலின் கருவாக அமைந்துள்ளது. சாதாரண வாத்தியார் வீட்டுப் பெண்ணான, அறிவும் அழகும் நிரம்பிய தவ்வை, பணக்காரக் குடும்பத்தின் மருமகளாகிறாள். கணவன் தன் குறைபாட்டை மறைக்க அவளைப் பலவாறு இம்சிக்கிறான். அதை தன் மாமியார் மாமானாரிடமோ தன்னைப் பெற்றத் தாயிடமோ சொல்லாமல் தனக்குள்ளேளே வைத்து எல்லா துன்பங்களையும் அனுபவிக்கிறாள் தவ்வை. இந்தத் துன்பத்திலிருந்து மீள கணவன் சொல்லும் வழி அவளைக் கோபப்படுத்துகிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. இப்படியாக பெண் என்பவள் எப்படி இரகசியங்களை தனக்குள்ளேயே காத்து, அதன் வலியை தான் மட்டுமே அனுபவிக்கிறாள் என்பதை விளக்குகிறது இந்நாவல். இந்நாவலில் பொருளடக்கமே புதுமையாக உள்ளது. முன்னொரு காலம் என்று 7 அத்தியாயங்களும் பின்னொருகாலம் என்று 7 அத்தியாயங்களுமாக இடையிடை கலந்து கலந்து கதம்பம் போல் கோர்க்கப்பட்டுள்ள பாங்கு – அழகு.…

Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் மாஸ்க்குடன் உள்ள 95 வயது பாட்டி ஒருவரின் நடனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 95 வயது பாட்டி ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் தனது சுற்றத்தினரை மகிழ்விக்க ஆக்சிஜன் முகமூடியுடன் ‘கர்பா’ நடன அசைவுகளை கைகளால் அபிநயம் பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மகிழ்ச்சியும் மன உறுதியும் மிக முக்கியமான ஆயுதங்கள். பாட்டியின் இந்த வீடியோவைப் பகிரும் பலரும் அவர்களது மகிழ்ச்சியையும் மன உறுதியையும் பாட்டியின் செயல் மீட்டுத் தந்துள்ளதாகக் கூறுகின்றனர். பலர் பாட்டிக்காக தங்கள் வேண்டுதல்களையும் பதிவு செய்துள்ளனர். பாட்டியின் நடன வீடியோவைக் காண:https://www.instagram.com/p/COvN_6JjoYX/?igshid=1vsch6myu0z4k நமது நிருபர்

Read More

இஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்ட ஹாலிவுட் நடிகை கல் கதோட் டுவிட்டரில் போர் குறித்து வெளியிட்ட பதிவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பாலஸ்தின் மீதான இஸ்ரேலின் விரோதப் போக்கு உலகம் அறிந்ததே. பாலஸ்தீன் நாட்டின் பள்ளிக் கூடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. படிப்படியாக பாலஸ்தீனத்தின் பகுதிகளை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்தும் வருகிறது. சமீபத்தில் இரு நாடுகளும் மேற்கொண்ட தாக்குதல்களில் 6 இஸ்ரேலியர்களும், 65 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் நடிகையும், இஸ்ரேலிய மாடல் அழகியும், முன்னர் இரண்டு ஆண்டுகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவருமான கல் கதோட், இந்தப் போர் குறித்து டுவிட்டரில் நீண்ட பதிவொன்றைக் கடந்த மே 12 அன்று வெளியிட்டார். அதில், ’எனது தாய்நாடா இஸ்ரேல் சுதந்திரமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பது என் விருப்பம். அதே நேரம் நமது அண்டை நாடுகளுக்கும் அப்படி வாழ உரிமை உண்டு. பாதிக்கப்பட்ட…

Read More