கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

SHARE

கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை அமைப்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறினார். 

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு மாநிலங்களில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகல் உயிரிழந்த சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க அயல்நாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்தாலும் மருத்துவமனைகளில் போதிய வசதி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் பலர் மருத்துவமனையின் வாயில்களில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.  இந்த சூழலில் தமிழக அரசு கொரோனா சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என்றும்,  கொரோனா நோயாளிகளுக்காக பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அமைக்க முடியுமா என ஆராய்ந்து வருவதாகவும், இதற்காக சுகாதாரத்துறையுடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்தியா முழுவதும் ஆம்புலன்ஸ்கள், படுக்கைகள் ஆகிய இரண்டுமே பற்றாக்குறையில் உள்ள இந்த சூழலில் தமிழக அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

Admin

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி… மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

Leave a Comment