- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: இரா.மன்னர் மன்னன்
நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 12 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம் 13. அர்த்த சந்திர ஹஸ்தம். அரை நிலா போன்ற தோற்றம். சுட்டுவிரல் முதல் சிறுவிரல் வரை உள்ள நான்கு விரல்களையும் ஒன்றோடொன்று ஒட்டியமைத்து, கட்டை விரலை அவற்றிலிருந்து பிரித்து விரைப்பாக எதிர்புறம் நீட்டி அமைந்த முத்திரை. இதை சமமட்டத்தில் செங்குத்தாக பிடிக்காமல் வானத்தை நோக்கி சிறிது சாய்த்து பிடிக்கின் அரைசந்திர வடிவம் தோன்றும். ஆடவல்லான் படிமத்தில் இடது மேற்கரத்தில் தீச்சுடர் ஏந்திய முத்திரை அர்த்த சந்திர ஹஸ்தமாகும். 14. அர்த்த பதாக ஹஸ்தம். சுட்டு விரலையும் நடுவிரலையும் விரித்து நீட்டி மற்ற விரல்களை முன்னோக்கி மடக்கி கைத்தலத்தையும் விரலையும் செங்குத்தாகப் பிடித்த அமைப்பு இதுவாகும். ஜீவாத்மா, பரமாத்மா இவ்விரண்டும் வெவ்வேறானவை என்பதை உணர்த்தும் குறியீடு. இம்முத்திரையை மத்துவாச்சாரியின்…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவுள்ள இப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் 11 பேர் கொண்ட வீரர்களை பிசிசிஐ சற்று முன் அறிவித்துள்ளது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக எதிர்பார்த்ததைப் போலவே ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் மேலும் சட்டேஸ்வரர் புஜாரா, விராட் கோலி அஜின்கியா ரகானே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக ரிசப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழல் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக இசாந்த் சர்மா,முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதிப் போட்டி நாளை நடைபெறும் நிலையில் ஆடும் அணியின் 11 பேர் கொண்ட வீரர்களை இன்றே பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பொழுதும் இந்திய அணி இதேபோல் போட்டிக்கு…
நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 8 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம் 9. அலபத்ம ஹஸ்தம். எல்லா விரல்களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து விரிந்த தாமரை மலர் போல் தோற்றம் தரும் முத்திரை. கைத்தலம் மேல்நோக்கி அமையும். இது மகிழ்ச்சியைத் தரும் பொருளில் அமையும் முத்திரை. துவாரபாலகர் படிமங்களில் நடுவுடலை அணுகியதாகவோ மேற்கரத்திலோ இருக்கும். உள்ளே இருப்பவரை நீங்கள் பார்த்தால், உங்களது அனைத்து துன்பங்களும் நீங்கி மலர்ந்த தாமரைபோல் முழுமையடைவீர்கள். மகிழ்ச்சி பெறுவீர்கள் என்று பொருள் கூறுமாறு துவார பாலகர் படிமத்தில் இம்முத்திரை அமையும். 10. விஸ்மய ஹஸ்தம். விஸ்மயம் என்றால் ஆச்சர்யம்.. வியப்பு .. ”அடடா.. சொல்வதற்கு வார்த்தையில்லையே..” என்று வியப்பை வெளிப்படுத்தும் முத்திரை இது. அலபத்ம முத்திரை செங்குத்தாக அமைந்து காண்போருக்கு புறங்கை தெரிய பிடித்துக் காட்டப்படும்…
நூறு வருடங்களுக்கு முந்தைய மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். பன்னிரண்டு வருடங்களாக பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர், கண்ணசைவிலேயே ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் அளவிலான காதல், குழந்தை இல்லாததால் காண்போராலும், உறவுகளாலும் ஒடுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்படும் இவர்கள், கைவிடப்பட்டவனுக்கு தெய்வமே துணையென எண்ணி ஏதேதோ வேண்டுதல்கள், விரதங்கள், கதைகதையாய் வந்த சாபத்திற்கான பரிகாரங்கள் என அதன் நீட்சியாக அவர்களின் அம்மாக்களின் கட்டாயத்தின் பேரில் தேவாத்தாவிடம் தஞ்சமடைகின்றனர். இந்த “தேவாத்தா” தான் “மாதொருபாகன்”, ஆணும் பெண்ணும் கலந்திருக்கும் ஒற்றை வடிவம். பாமரனின் “தேவாத்தா” மேட்டுக்குடியின் “மாச்சாமி” ஆகிறார். “குளுகுளுன்னு மரத்து நெழலும் பக்கத்துலயே சொனையும் வெச்சிக்கிட்டு எங்க தேவாத்தா இங்கதான் இருக்கறா. இவளக் கொண்டுக்கிட்டுப் போயிக் கோயிலுக்குள்ள அடச்சு வெச்சுக்கிட்டுப் பூச பண்றாங்க. வனத்துல தங்குண்டியாத் திரியறவள செவுத்துக்குள்ள புடுச்சு வெக்க முடியுமா? எங்கம்மா இங்கதான் இருக்கறா. அவங்க வெறுங்கல்லுக்குப் பூச பண்றாங்க” எனப் புரிதல் கொண்ட கிழவிகளையும் உள்ளடக்கிய கதை. ஊரும் உறவும் “பிள்ளைப்பேறு” மட்டுமே…
நமது ‘சிற்ப இலக்கணம்’ தொடரில் இதுவரை, 24 வகையான தொழிற் கை முத்திரைகள் எவை என்று சுருக்கமாகவும், அவற்றில் முதல் 4 முத்திரைகளை விளக்கமாகவும் கண்டோம். மீதமுள்ள முத்திரைகள் குறித்து தொடர்ந்து காண்போம்…5.வியாக்கியான முத்திரை. சின் முத்திரை என்பது இதன் மறு பெயர். இம்முத்திரையின் போது கையின் பெருவிரல் கைத்தலத்தை விட்டு பிரிந்து முன்னோக்கி நீண்டு நிற்க. சுட்டு விரலானது வணங்கி பெருலிரலின் நுனியைத் தொட்டு வளையம் போன்று அமையும். நடுவிரல், சிறுவிரல், அணி விரல் இம்மூன்றும் மேல்நோக்கி இருக்கும். ஞானாசிரியர்கள் தத்துவ விளக்கத்தைப் போதிக்கும் முத்திரை இதுவாகும். வியாக்கியானம் என்றால் விதர்க்கம் என்று பொருள். ஆணவம், மாயை, கன்மம், போன்ற மூன்று மலங்களிலிருத்தது விடுபட்டு ஜீவாத்மா பரமாத்மாவை சரணடைதலே முக்தி பேறு அடையும் வழி என்பதை உணர்த்துவதே இந்த முத்திரையின் நோக்கம் ஆகும். ஆலமர் செல்வனாகிய தஷிணாமூர்த்தி இந்த முத்திரையுடன்தான் இருப்பார். வியாக்கியான அதாவது சின் முத்திரை அமைக்கும் தஷிணாமூர்த்தி…
1.அபய ஹஸ்தம் காக்கும் முத்திரை பயம் என்பதன் எதிர்ச்சொல் அபயம். பயத்தை நீக்கி பாதுகாப்பு வழங்குகிறேன் என்பதை உணர்த்தும் முத்திரை ஆதலால் இதை காக்கும் முத்திரை என்பர். கை சுட்டுவிரல் முதல் சிறுவிரல் வரை நான்கு விரல்களையும் ஒன்றோடொன்று ஒட்டியமைத்து , பெருவிரலை சுட்டு விரலோடு சேர்த்து மேல்நோக்கி அமையும் முத்திரை. நாட்டிய வழக்கில் இது பதாகம் ( கொடி) என்றழைக்கப்படும். சிற்ப படிமங்களில் மார்பு முலைக்கண் மட்டத்திற்கு கை நடுவிரலின் நுனி அமையும். அஞ்ச வேண்டாம். நான் இருக்கிறேன் என்னும் பொருள் தரும் முத்திரை. பெரும்பாலான கடவுள் படிமங்களில் இம்முத்திரையை காணலாம். 2.வரத ஹஸ்தம். அபய ஹஸ்தத்தை தலைகீழாகப் பிடித்தால் இம் முத்திரை. உள்ளங்கை வெளிப்புறமாக அமையும். படிமங்களில் இம்முத்திரை கனிவை வெளிப்படுத்தும். அனைத்து வளங்களையும் உனக்கு வழங்குகிறேன் என்ற குறியீட்டை உணர்த்துகிறது. பொதுவாய் சிற்பங்கள் பல கைகளுடன் இருக்கும். முன்னாடி இருக்கும் கரங்களை முன்னிரு கரங்கள் என்பார்கள். முதல்…
முன்னுரை, என்னுரை, பதிப்புரை என எதையும் பொருட்படுத்தாமல் “கதைகளை” மட்டுமே முன்னிறுத்தியிருக்கும் புத்தகம். வழக்கமாக ஒரு சிறுகதைத் தொகுப்பென்றால், அந்த தொகுப்பில் உள்ள ஏதோ ஒரு கதையின் தலைப்போ அல்லது எழுத்தாளரின் பெயரோ தான் புத்தகத்தின் பெயராக இருக்கும். ஆனால் இந்த புத்தகத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பைத் தேடினாலும் கிடைக்காது. ”நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவர்களை கொலைகளுக்கு பலி கொடுத்துவிட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக்கொண்டு இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களும், தோல்வியடைந்த திருமணங்களினால் கைவிடப்பட்டவர்களும், அவர்கள் தூக்கிச் சுமக்கும் குழந்தைகளும், கடைசிக்காலத்தில் கைவிட்டுப்போன பிள்ளைகளிடம் கையேந்தும் வயதானவர்களும் என…. போர்க்களம்போல காட்சியளிக்கும் நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும்தான் அனுதினமும் வந்து கொத்துக்கொத்தாக குவிகிறார்கள். அவ்வாறு குவிகின்றவர்களின் இறுதி நம்பிக்கையும் அரசினால், அதிகாரங்களினால், அலட்சியங்களினால், சட்டங்களின் நுணுக்கங்களினால் நெரித்துக் கொல்லப்படும்போது, சிவப்புநிறக் கட்டிடங்களான இவை எனக்கு,…
பகுதி 1 இணைப்பு சிற்ப இலக்கணம் என்பது ஒரு சிற்பத்தின் முழுமையான அமைப்பு. இதை சிற்ப அமைதி அல்லது கலையமைதி என்றும் கூறுவர். ஒவ்வொறு அமைப்பும் ஒரு உறுதியான வரையறையின் கீழ் இருக்கும். அவ்வாறுதான் செதுக்கப்படும். சிற்பம் ஒன்றின் கை அமைப்பு, கால் அமைப்பு, ஆடை அணிகலன்கள், ஆயுதங்கள் – இவை ஒவ்வொன்றும் அமைய ஒரு விதிமுறை உண்டு. இன்னென்னப் படிமங்கள் இந்தந்த வரையறையின் கீழ்தான் அமைக்கப்படும். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்க இருக்கிறோம்… முதலில் சிற்ப கை அமைப்பின் வரையறையைப் பார்ப்போம் சிற்பக் கை அமைதிகள்: சிற்ப படிமங்களில் காணப்படும் உருவங்கள் ஒவ்வொன்றின் கை அமைப்பும் முத்திரை காட்டியவாறு இருக்கும். இதை ஹஸ்தம் என்பர். ஹஸ்தம் என்பது உள்ளங்கையைக் குறிக்கும். சிற்பங்களில் உள்ள கைகளில், கை விரல்களை நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்.. ஆகிய ஐந்து நிலைகளை அடிப்படையாகக் கொண்டு தன் எண்ணத்தை வெளிப்படுத்தும் அமைப்பு கை இலக்கணம் அல்லது…
வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படை காவலர்கள் தமிழக வனத்தில் கர்நாடக எல்லைப் பகுதியிலிருந்த மலைவாழ் மக்களுள் ஒருவரான சோளகர்களிடத்தில் காட்டிய அதிகார கோரமுகத்தின் ஆவணமே இந்த நாவல். “நான் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையைவிட கனமானவை. இருளைவிட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றை சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில் நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும்” என என்னுரையில் ச.பாலமுருகன் எழுதியிருப்பதைப் போல அம்மக்களின் கதை பாறையை விட கனமானவை தான். இருளை விட கருமையானவை தான், நெருப்பினைவிட வெப்பமானவை தான். அவற்றுள் சிலவற்றை மட்டுமே இந்நாவலில் ஆவணப்படுத்தியுள்ளார் பாலமுருகன். அந்த சிலவற்றைக் கூட எதோவொரு நாவலைப் படித்து முடிப்பதைப்போல் கடந்துவிட முடியவில்லை. சுமக்க முடியாத பாரமாய் இருந்து, அழுத்தம் தந்து, தூக்கம் தொலைக்கச் செய்கிறது. இரண்டு பாகங்கள். சோளகர் தொட்டியிலுள்ள…
வயிற்றுப் பசியைப் போக்குவதற்கன்றி, வேறெந்த பலனையும் எதிர்பாராமல் நடுசாமக் கொள்ளையையே தொழிலாய்க் கொண்ட கொம்பூதி ஊரின் மக்கள் தான் முக்கிய கதை மாந்தர்கள். விலையுயர்ந்த நகைகளைக் கொள்ளையடித்தாலும், அவற்றை அப்படியே பச்சைமுத்து போன்ற பேராசைக்காரனிடம் கொடுத்துவிட்டு, பதிலுக்கு தானியங்களை மட்டும் பெற்றுக்கொண்டு பிழைத்துவரும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் அப்பாவிகள். கொம்பூதியை அடுத்து பரம்பச்சேரி, அதனை அடுத்து பெருநாழி. இந்த மூன்று ஊர்களைச் சுற்றியே பின்னப்பட்டது இந்த 447 பக்கக்கதை. பரம்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் தான் குடிதண்ணீர் கிடைக்கும். கிணற்றுத் தண்ணீரை பெருநாழி மக்கள் இறைத்து ஊற்றி பரம்பச்சேரியின் குடம் நிறைந்தால்தான் உண்டு; அந்த ஒரு குடம் தண்ணீருக்காக பெருநாழிப் பெண்களிடம் பரம்பச்சேரிப் பெண்கள் பிச்சையெடுக்காத குறையாகக் கெஞ்ச வேண்டும். ஏனென்றால், பரம்பச்சேரி மக்கள் அவர்களாகவே தண்ணீர் இரைத்தால் அது “தீட்டு”. பெருநாழியின் வயல்களில் உழைப்பது என்னவோ பரம்பச்சேரி மக்கள்தான். அவர்கள் உழைப்பின் விளைச்சலை உண்டு உயிர் பிழைத்தாலும், “கிணற்றில் அவர்கள் தண்ணீர்…