- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தன் முன் இருந்த கொகோ கோலா பாட்டிலை ஓரத்தில் வைத்த ரொனால்டோவின் செயலால் அந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. யூரோ சாம்பியன் 2021 கால்பந்து தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் முன் இருந்த கொகோ கோலா பாட்டிலை பாட்டிலை ஓரத்தில் வைத்து விட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கோலாவிற்குப் பதில் தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தினார். அந்தக் காணொளியும், புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக கொகோ கோலா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,377 கோடி அளவிற்குநஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் ஜூன் 21 ஆம் தேதி முதல் நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழக அரசு கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பொது போக்குவரத்திற்கு தற்போது வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும், தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஊரடங்கும் ஜூன் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் 21ம் தேதிக்கு பின் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில்…
புதுச்சேரி சட்டப்பேரவயின் சபாநாயகராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவை சேர்ந்த செல்வம் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெற இருந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.சபாநாயகர் தேர்தலில் போட்டியிட செல்வம் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நாளை காலை கூட உள்ள சட்டசபை கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் முறைப்படி அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்முன் வைக்கப்பட்ட கோகோ கோலா பாட்டிலை கால்பந்து வீரர் ரொனால்டோ அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ‘யூரோ கோப்பை’ கால்பந்து தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் போர்சுக்கல் மற்றும் ஹங்கேரி அணிகள் மோதுகின்றன. முன்னதாக இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போர்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் அவரது பயிற்சியாளர் பெர்னான்டோ ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுக்காக மேடையில் தனித்தனியே இரு கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, தனக்கான இருக்கையில் அமர்ந்த ரொனால்டோ, கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு, அதற்கு பதில் தண்ணீர் பாட்டிலை வைத்து அனைவரும் தண்ணீரை பருகும்படி அறிவுறுத்தினார். அவரது செய்கை பலரையும் கவர்ந்துள்ளது. முன்னதாக கோகோ கோலா, பேன்டா உள்ளிட்ட பானங்கள் அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என தனது மகனுக்கு அறிவுரை வழங்கி அலுத்துவிட்டதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறை தேவைப்படாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா முதல் அலைக்கு பின், உருமாறிய கொரோனாவால் இங்கிலாந்தில் பலர் பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து அங்கு உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பிற நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டன. பல மாதங்களாக நீடித்த ஊரடங்கு காரணமாக அங்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஜூலை 21ம் தேதி முதல் ஊரடங்கிலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்படும் என ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்தார். கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்தநிலையில், ஜூலை 19ம் தேதிக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்றும், எனவே இதற்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பாலியல் சர்ச்சை வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா வெளிநாடு செல்லாதவாறு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப சிபிசிஐடி முடிவுசெய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் புகார் வழக்கில் சிக்கினார். இந்த நிலையில் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அதே சமயம் சிவசங்கர் பாபா வழக்கினை எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி தனிப்படை குழுவினர் விரைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. டேராடூன் செல்லும் தனிப்படை அங்கு அவரை விசாரணை செய்துபின்னர் கைது செய்யலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு…
உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்தார். உலகம் முழுவதும் ஜூன் 14 அன்று இரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது . ABO ரத்த குரூப் முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இரத்ததான தினத்தை அடுத்து கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ரத்ததானம் செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரத்த தான தினத்தையொட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்தார். ரத்ததானம் செய்த அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலித்து வரும் நிலையில் அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கியுள்ளது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த மோசடி புகார்களை ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில், ராமர் கோவிலுக்கான நிலம் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது.ஏற்கனவே நிலத்தின் உரிமையாளர்கள் விற்ற…
நாளைமுதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது கொரோனா பரவல் வேகம் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை முதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.
தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. .தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதுபிரியர்கள் கூட்டம் காலை முதலே டாஸ்மாக்கை நோக்கி படையெடுத்தது. அந்த வகையில் திறக்கப்பட்ட முதல் நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.49.54 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. சென்னை மண்டலத்தில் 42.96 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 38.72 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.