சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

SHARE

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியதால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு மத்திய கல்வி வாரியம் 13 பேர் அடங்கிய குழுவை அமைத்தது.இந்த குழுவான தனது பரிந்துரையை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறையை உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கிடு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 30 விழுக்காடும், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 30 விழிக்காடும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து 40 விழுக்காடும் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பை பொறுத்த வரை மொத்தம் உள்ள 5 பாடங்களில் அதிக பட்ச மதிப்பெண் எடுத்த 3 பாடங்களின் மதிப்பெண்களை கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அதுவே பன்னிரெண்டாம் வகுப்பை பொறுத்த வரை பருவ தேர்வு மற்றும் செய்முறை தேர்வின் மதிப்பெண்களை கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் RDO ஆபீஸ் செல்ல தேவையில்லை… புதிய நடைமுறை அறிவிப்பு

Admin

தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

Admin

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

இந்த மருந்துக்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Admin

கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதா? – இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை

குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா? ரெம்டெசிவர் பாதுகாப்பானதா? விளக்கம் கொடுத்த மத்திய அரசு

Admin

மேற்கு வங்க அரசியல்: 42 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி

Admin

Leave a Comment