Author: Admin

தெலுங்கானாவில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் காதலித்து, இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணமும் செய்துள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தின் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்ஜுன் என்ற இளைஞர் ஒரே சமயத்தில் தனது அப்பாவின் சகோதரியான அத்தை மகள்களை ஒருவருக்கொருவர் தெரியாமல் ஏமாற்றி காதலித்து வந்துள்ளார். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள அர்ஜுனுக்கு சமீபத்தில் வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் குறித்த பேச்சை ஆரம்பிக்கும்போது, அத்தை மகள்கள் இருவரையும் காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில், ஏமாற்றினாலும் பரவாயில்லை ஏமாற்றிய இளைஞரைத்தான் திருமணம் செய்வேன் என்று இரண்டு பெண்களும் உறுதியாக இருந்ததால், ஒரே சமயத்தில் இருவரையும் திருமணம் செய்துள்ளார் அர்ஜுன்.  பழங்குடியினத்தில் இப்படி ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணப்பதற்கு அனுமதி உள்ளதால் எவ்வித எதிர்ப்புகளும் கிளம்பவில்லை. ஆனால் இணையத்தில் உள்ள 90 s kids களின் ஒட்டு மொத்த எதிர்ப்பினையும் சம்பாதித்துள்ளார் காதல் மன்னன் அர்ஜூன்.

Read More

நடிகர் விஜய்யை, திமுக ஆட்சியை தலைமை ஏற்க முதல்வர் அழைப்பது போல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் திண்டுக்கலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.மே 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து கொரோனோ தடுப்பு பணி தொடங்கி பல்வேறு துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.இந்த சூழ்நிலையில் விஜயை வைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகரம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட ” தம்பி வா தலைமை ஏற்க வா” என மறைந்த முதல்வர் அண்ணா கலைஞரை அழைத்தது போல முதல்வர் செங்கோல் கொடுத்து திரைப்பட நடிகர் விஜயை திமுக கட்சிக்கு தலைமை தாங்க அழைப்பது போல் நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியை சமூக வலைதளங்களில்…

Read More

தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களின் பொருளாதார வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெட்ரோல்,டீசல் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், கடந்த வாரம் சிமெண்ட் செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையும் உயர்த்தப்படுவதாக கட்டுமான உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அந்த சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் தங்கம் தென்னரசு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை விடுத்ததோடு, கட்டுமான பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விலை உயர்வால் ஏழை,எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் எல்லோரும் ஏற்றுக் கொள்ள…

Read More

கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரபுசங்கர் ஐஏஎஸ் பொதுமக்களிடையே அதிகளவில் கவனம் ஈர்த்து வருகிறார். கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 16ஆம் தேதி பிரபுசங்கர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டது முதலே அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். “தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு” என்ற திருக்குறளை முன்னிறுத்தி அதேபோல தனது பணி இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். அதனைப் போலவே பொறுப்பேற்ற முதல் நாளில் கவச உடை அணிந்து கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதோடு நோயாளிகளிடம் நலம் விசாரித்து, முறையான சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோல் ரேஷன் கடைகளுக்கும் சென்று அதிரடி ஆய்வு செய்து, அங்கு கொரோனா பொருட்கள் வாங்க காத்திருந்த மக்களிடம் மன்னிப்பு கோரி நெகிழ வைத்தார். அந்த வகையில் நேற்று வேங்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வுசெய்தார். அப்போது…

Read More

சிறுமிகளை, பெண்களை ஆபாசமாக பேசி யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வழக்கில் கைதான பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை பிரைவேட் சர்வர் மூலமாக விளையாடி, அதை யூடியூப் வலைதளத்தில் ஸ்ட்ரீமிங் செய்து வந்தவர் மதன். இவரது யூடியூப் சேனலை பின்தொடர்பவர்கள் பப்ஜி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ளவர் தான் என்று கூறப்படுகிறது.இந்த யூடியூப் சேனலில் பெண்களை பற்றி ஆபாசமாக பேசி தனது யூடியூப் பக்கத்தில் பதிவுகளை மதன் வெளியிட்டு வந்தார். இதன்மூலம் லட்சக்கணக்கில் பணத்தையும் சம்பாதித்துள்ளார். இது குறித்து மதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக்ரபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்தார். சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.…

Read More

கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தெலுங்கானாவில் கொரோனா ஊரடங்கு நாளை முதல் முடிவுக்கு வரவுள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை வீசத்தொடங்கிய போது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று. அங்கு மே 12 ஆம் தேதி முதல் தற்போது வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மற்றும் கொரோனா நேர்மறை சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவும் மருத்துவ அதிகாரிகள் அறிக்கைகள் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஊரடங்கை முழுவதுமாக நீக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும் அங்கு அமலில் உள்ள அனைத்து வகையான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் நாளை முதல் விலக்கிக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

ரொனால்டோ போன்று செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலி கோகோ கோலா பாட்டிலை அகற்றாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டினா ரொனால்டோ சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது மேஜையின் மீது இருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றி விட்டு தண்ணீர் பாட்டிலை காண்பித்தார். ரொனால்டோ-வின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினரும் அவரை கொண்டாடி தீர்த்தனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்ப கோகோ கோலா நிறுவன பங்குகளின் மதிப்பு சரசரவென சரிந்தது.இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற விராட் கோலி மேஜையில் இருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க, அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டார் விராட்.

Read More

சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியை தீபா, முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கபட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகளை மூளைச் சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியைகள் பாரதி, தீபா ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் பக்தை சுஷ்மிதா கைதான நிலையில், ஆசிரியை தீபா தலைமறைவானதாக கூறப்படுகிறது. மற்றொரு ஆசிரியை பாரதி, வெளிநாட்டில் உள்ளார். இந்நிலையில், தமக்கு முன் ஜாமீன் வழங்க கோரி, சென்னை உயர்…

Read More

பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியை 3 மாத கைக்குழந்தையோடு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, ஆசிரியை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். இதே பள்ளியில் பயின்று தற்போது ஆசிரியையாக பணியாற்றி வரும் சுஷ்மிதா, பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிற்கு விருந்தாக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக எளிய குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளை குறிவைத்து, அவர்களை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்றுள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியை சுஷ்மிதாவை, செங்கல்பட்டு கூடுதல் அமர்வு மகிளா நீதிபதி சங்கீதா இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுஷ்மிதாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கினார். இதனால் அவர்…

Read More

யூடியூப் சேனல் மூலமாகஆபாசமாக பேசிய மதன் போலீசாரல் நேற்று கைது செய்யப்பட்டர்.அப்போது செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்த போது நான் என்ன பிரதமரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களிடம் ஆபாசமாக பேசி பணமோசடியில் ஈடுபட்ட யூ-டியூபர் மதன் மீது புகார் எழுந்ததால் போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த மதன் தருமபுரியில் அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்ததார். இதனை கண்டறிந்த தனிப்படை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். யூ-டியூபர் மதனிடமிருந்து 2 சொகுசு கார்கள், 3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர். இதனைத் தொடர்ந்து, மதனை தருமபுரியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர். அப்போது,செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்தபோது,நான் என்ன பிரதமரா?”,என்று மதன் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த…

Read More