திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

SHARE

தமிழக சட்டப்பேரவையின் 16ஆவது கூட்டத் தொடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடியது. அந்த கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டத் தொடரில் கலந்து கொண்டனர். ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது.

சட்டப்பேரவைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை சரமாரியாக முன்வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் 550 வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றுகூட இன்றைய ஆளுநர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து விட்டு இன்று அதை பற்றி விசாரிக்க குழு அமைக்கபட்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
 
திமுக ஆட்சி அமைந்து 45 நாட்கள் ஆகிறது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் ரத்து பத்திரம் வழங்கபடவில்லை
மாணவர்கள் வாங்கிய கல்வி கடந்த ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். அதுகுறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை.
 
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த அறிவிப்பு குறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை என சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார் எடப்பாடி பழனிசாமி.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

காவலர்களுக்கு கட்டாய விடுமுறை – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண உதவி : தமிழக அரசு

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

Leave a Comment