யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

SHARE

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, நேபாளத்தில் தான் உருவானது என கே.பி. சர்மா ஒலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மனிதர்களை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைக்கும் ஆற்றலை கொண்டது யோகா. தினமும் யோகா செய்வதன் மூலம் உடலும் மனமும் சாந்தம் பெரும்.

இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஒலி பேசினார் அப்போது, யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை என்றும் பல ராஜ்ஜியங்களாக இருந்தது என்றும் கூறினார்.

நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம் என்றும் ஆனால் இந்தியப் பிரதமர் மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார் என்றும் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழர்… ராஜகோபால் ஈச்சம்பாடி எனும் நான்

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

பொய் பேசும் நரையெல்லாம் மை பூசி மாத்திக்கோ… 100வது வயதை எட்டிய 3 மூதாட்டிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்..!!

Admin

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய சரக்கு கப்பல்…!

Admin

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

Leave a Comment