- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரொனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியினை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத பொதுமக்கள் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளது சர்சையினை கிளப்பியுள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே. நாட்டில் தற்போது நெருக்கடி நிலை நிலவுகிறது தேசிய அவசரநிலை உள்ள நிலையில் நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், நான் உங்களை கைது செய்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும என கூறினார். மேலும், தடுப்பூசி போட விருப்பமில்லாத நபர்கள் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறுங்கள் என கூறியுள்ளார் அதிபரின் இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியினையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 16ஆவது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். அதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இந்த சட்டத் திருத்தமானது, சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். இப்போதைய கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுவதால் தற்போது, தீர்மானம் நிறைவேற்றுவது முறையாக இருக்காது என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
கொரோனாவுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் அமல்படுத்தின. மேலும் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்நிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதால், இளம்பருவத்தினருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்தநிலையில், இது தவறான தகவல் என்றும், தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு விஞ்ஞான பூர்வமாக எந்தவொரு ஆதாரமும் நிரூபிக்கப்படவுமில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசிகளானது விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு, அதன் செயல்திறன் மற்றும் பக்கவிளைவுகளை நன்கு ஆராய்ந்த பின்னரே, மனிதர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்தவரும், தனியார் பள்ளி பகுதிநேர பயிற்சியாளருமான கெபிராஜ் மீது கேரள மாணவி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை மே மாதம் 30 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கெபிராஜை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். கெபிராஜின் பயிற்சி மையம், வீடு ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவர் பயன்படுத்திய பயன்படுத்திய கணினியின் சி.பி.யூ, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.…
மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் ஒருவர் காவலர்களிடம் தகராறு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று அதிவேகமாக வந்து அரசு பேருந்து மீது மோதுவது போல் சென்றது. உடனே இதனை பார்த்த போலீசார்விசாரணைக்காக காரில் இருந்த நபரை விசார்க்கும் போது அந்த நபர் மது போதையில் முககவசம் அணியாமல் இருந்துள்ளார். மேலும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் காவலர்களுடன் தான் ஒரு வழக்கறிஞர் என தகராறு செய்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்தார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர் என்றும் அவர் பெயர் விஸ்வநாதன் என்பது தெரியவந்துள்ளது. தற்போது வழக்கறிஞர் விஸ்வநாதன் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில்…
தளபதி 65 திரைப்படத்தின் 2வது லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலையே விஜய் 65′ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டது படக்குழு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் 65′ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே நள்ளிரவு 12 மணிக்கு ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மாஸ்ஸான இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே 1,49,500க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 67,500க்கும் அதிகமானோர் ரீட்வீட் செய்துள்ளனர். பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மட்டும் ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை? – என புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை நேற்று காலை பெங்களூரில் கைது செய்தனர். பின்னர் அமைச்சர் மணிகண்டன் சென்னைக்கு அழைத்து வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, ‘பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து இன்னும் நீக்கவில்லை. இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரு நொடியில் அவரை தூக்கி இருப்பார். நடிகை சாந்தினியோடு மேலும் பல அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து விசாரிக்கத்தான் வேண்டும்’ எனக்…
யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, நேபாளத்தில் தான் உருவானது என கே.பி. சர்மா ஒலி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைக்கும் ஆற்றலை கொண்டது யோகா. தினமும் யோகா செய்வதன் மூலம் உடலும் மனமும் சாந்தம் பெரும். இந்த கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிரணாயாம மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஒலி பேசினார் அப்போது, யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா…
புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்? என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மத்திய அரசு விவரங்களை கேட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதனால் பள்ளி, கல்லூரிகள் தங்களது படிப்பை டிஜிட்டல் முறையில் கற்கின்றனர். தினமும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்க வைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? என்று மாவட்ட வாரியாக தகவல் திரட்டி ஒப்படைக்குமாறு சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க விரைந்து பட்டியலை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து…
குளத்தில் மூழ்க இருந்த மான்குட்டியை, நாய் ஒன்று காப்பாற்றி, அதனுடன் நட்பு பாராட்டும் வீடியோ காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. விர்ஜினியாவை சேர்ந்த ரால்ஃப் டோர்ன் என்பவர் அண்மையில் தனது வளர்ப்பு நாயின் செயலை பாராட்டி முகநூலில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், அவரது வளர்ப்பு நாய் ஹார்லி, வீட்டின் பின்புறம் உலாவிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த குளத்தில் மான்குட்டி ஒன்று மூழ்க இருந்ததை கண்டு ஓடோடிச்சென்று காப்பாற்றி உதவியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மான்குட்டி தனது மூக்கை, ஹார்லியின் மூக்குடன் நேருக்கு நேர் உரசியதோடு, நட்பு பாராட்ட தொடங்கியுள்ளது. மேலும் தினமும் ஹார்லியை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. ஹார்லியும் பதிலுக்கு மான் குட்டியின் உடலை நாவால் முத்தமிட்டு தனது அன்பினை வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.