- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
பாப் இசை கலைஞர் டிம் பெர்குலிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த டிம் பெர்குலிங், தனது 16 வயது முதல் புதுப்புது இசையை அமைத்து கலைத்துறையில் ரசிகர்களை கவர்ந்து வந்தார். அவீச்சி மற்றும் டிம்பெர்கு என்று அன்போடு ரசிகர்களால் அறியப்பட்டார். கடந்த 2011 முதல் 2016 காலக்கட்டத்தில் 220க்கு மேற்பட்ட மேடைகளில் கலைப்படைப்புகளை வெளியிட்டு, ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். இவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது 32வது பிறந்த தினமான இன்று, டிம் பெர்குலிங்கின் சேவையை பாராட்டி, அவரது கலைப்படைப்பில் இடம்பெற்ற ‘Wake Me Up’ என்ற பாடலுடன் சிறப்பு டூடுளை கூகுள் வெளியிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் இதுவரை 6 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. 7ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அகரம் அகழாய்வு தளத்தில் 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒரு குழியில் 15 சுடுமண் உறைகள் கொண்ட 15 அடி உறைகிணறும், மற்றொரு குழியில் 8 சுடுமண் உறைகள் கொண்ட 8 அடி உறைகிணறும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது 3வது உறைகிணற்றை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள்…
டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்யவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய இல்லங்களில் இருந்து கொண்டாடுமாறு மக்களுக்கு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலா சொத்தை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. ஏற்கனவே 2,000 கோடி ரூபாய் அளவிற்கு பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. தற்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டிருக்கிறது. பையனூர் பங்களா இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் இருந்து வலுக்கட்டாயமாக சசிகலா மிரட்டி பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலின் : முதல்வரை புகழ்ந்த நடிகர் சத்யராஜ்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது இதில் பேரவை விதி 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு பலரது வரவேற்பையும் பெற்று வருகின்றார் மு.க ஸ்டாலின் . அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றது. அதாவது சமூக சீர்த்திருத்தவாதி பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியை இனி சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும் என அறிவித்தார். மேலும், பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள் எனக் கூறினார். இதற்கு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. குறிப்பாக கடவுள் நம்பிக்கை கொண்ட கட்சியாக பாஜக இருந்தாலும் சமூக நீதிக்காக இதனை வரவேற்பதாக அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இந்த…
முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று சட்டப்பேரவையில் பேசிய போது, திமுக ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாடுபடும் அரசாக விளங்குவதாக கூறினார். மேலும், சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பால் அரவணைப்போம். மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்களின் பிரச்னைகளை தீர்க்க நல ஆணையம் அமைக்கப்படும். மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் எனக் கூறினார். அதே சமயம், மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்க தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் சாதியை ஒழிக்க முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும்” என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், நீரஜ் சோப்ராவின் விளம்பர ஒப்பதங்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இதன் மூலம், அவருக்கு பல கோடி ரூபாய் பரிசு, ஊக்கத்தொகை, சன்மானம் கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக விளம்பர ஒப்பதங்களின் மூலம் ஆண்டுக்கு 15 முதல் 25 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்த நீரஜ் சோப்ரா, தற்போது கோடி கணக்கில் வருமானம் ஈட்ட தொடங்கி உள்ளார். அவருடைய விளம்பர ஒப்பந்தங்களின் மதிப்பு தற்போது 100 மடங்கு அதிகரித்து கோடிகளை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை கிரிக்கெட் நட்சத்திரங்கள் மட்டுமே இத்தகைய வருமானத்தை ஈட்டி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக தடகள விரருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசுக்கு முகமது ஹசன் தலைமையேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஆப்கன் ராணுவ படைக்கு உதவி வந்த அமெரிக்க படை அந்நாட்டை விட்டு வெளியேறியது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்த தாலிபான்கள், ஆட்சியை கைப்பற்றின. ஆப்கன் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அங்கு புதிய அரசை அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் தலைவராக முகமது ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாலிபான் அரசின் துணை தலைவராக அப்துல் கனி பரதர் செயல்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் புதிய அரசாங்கத்தில் ஷரியா சட்டம் நிலைநாட்டப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷரியா சட்டம் என்பது இல்லாமின் சட்ட அமைப்பு ஆகும்.
கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்களின்இரங்கல் செய்தி வெளியானது. இதில், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பக்கபலமாக விளங்கியவர் புலமைப்பித்தன் என்றும், அதிமுக தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மீண்டும் மீண்டும் நாகரிகமான அரசியலைக் கையாளுகிறார் மு.க.ஸ்டாலின் என்று கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமானபுலமைப்பித்தன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்றசெய்தியறிந்து வருத்தமுற்றேன். திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுகொண்டு, அரசியலில் தீவிரமாகஇயங்கிய அவர், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பக்கத்துணையாய் விளங்கியவர்.அவர் சட்ட மேலவை துணைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பதும்தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக மறைந்த அவரது பிரிவால் வாடும் அவரதுகுடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க. தோழர்களுக்கு எனது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா? கடந்தகால அரசியல்…
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான், தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளதாக சமூகவலைதளபக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை, ஷிகர் தவான் திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கனவே திருமணமானவர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிஷா வெளியிட்டுள்ள பதிவில், 2-வது முறையாக விவாகரத்து செய்வதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரு பெண் குழந்தைகளை ஷிகர் தவான் தத்து எடுத்த நிலையில், இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது