‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

SHARE

மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை இரண்டாவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய வருமானவரித்துறை போர்ட்டல் இணையதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதில் தொடர்ந்து பயனாளர்களுக்கு சிக்கல் நிலவி வந்தது.

குறிப்பாக வரி செலுத்துவோர் வருமான வரி அறிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதனை உணர்ந்த மத்திய நேரடி வருமான வரித்துறை மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் 2021-22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சகம் மற்றும் புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனம் இடையே நடந்த கூட்டத்தில் புதிய தளத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தீர்க்கப்படும் என இன்போசிஸ் உறுதியளித்தது.

இந்த கால நீட்டிப்பு வரி செலுத்துவோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணத்தால் மத்திய அரசு 2020-2021ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யச் செப்டம்பர் வரையில் கால நீட்டிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

Admin

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

என்ன நேருவின் படம் இல்லையா ? – கொந்தளித்த காங்கிரஸ்

Admin

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

இந்தியாவில் 40 கோடி பேரை பாகுபலியாக மாற்றிய தடுப்பூசி.. பிரதமர் மோடி

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

Leave a Comment