- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அக்டோபரில் மூன்றாவது அலை உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக தினசரி 4 லட்சம் பாதிப்புகள் என பதிவான நிலையில் தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே கணிப்பதற்காக மத்திய அரசு அமைத்த 3 பேர் கொண்ட விஞ்ஞான குழு தெரிவித்துள்ள தகவலில் இந்தியாவில் மூன்றாவது அலை கொரோனா பரவினால் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் உச்சமடையும் என தெரிவித்துள்ளது. போதிய கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் பாதிப்பு தினசரி அளவு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலும், உச்சமடையும்போது 2 லட்சம் வரையிலும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடற்பயிற்சி செய்வார். அந்த சமயங்களில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்து பொதுமக்களுடன் பேசுவதைஅவர் வாடிக்கையாக கொண்டிருப்பார். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் பயணம் செய்த இடங்களில் வழிநெடுக காவல் துறையினர் பின்தொடர்ந்து வந்து பாதுகாப்பு அளித்தனர். அதே சமயம் சைக்கிள் பயணம் செய்யும் போதுன் அங்கு உள்ள பொதுமக்களிடம் நலம் விசாரித்தார் இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்த ஸ்டாலின், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், காமெடி நடிகர் யோகி பாபு சந்தித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் காயம் காரணமாக உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப்,தொடரில் இடம்பெறவில்லை. ஆனால்,டி20 உலகக் கோப்பை தொடரில், அவர் இடம்பெறுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடராஜன், காமெடி நடிகர் யோகி பாபு சந்தித்துள்ளனர் இந்த சந்திப்பின்போது, எடுக்கபட்ட புகைப்படங்களை தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடராஜன், அன்பான நண்பர், நடிகரை சந்திப்பதில் உற்சாகமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.மேலும், இந்த சந்திப்பின்போது, நடராஜன், முருகன் சிலையை யோகி பாபுவுக்காகபரிசாக கொடுத்துள்ளார். மேலும் இவர்கள் சந்திப்பின் போது அங்கிருந்த, டிவியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி விளையாடும் போட்டி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. இதனை பார்த்த இணைய வாசிகள் தோனி இருப்பதை சுட்டிக்காட்டி இவர்கள் சந்திப்பில், தல தோனியும் இருக்கிறார் கண்டுபிடிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்
மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு குடும்பத்தினரே பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண்,கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார் இந்நிலையில் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவர் வீட்டிலிருந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றால்திட்டுவார்களோ என்ற காரணத்தினால் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த இளம்பெண். இதனை பற்றி தகவலறிந்த பெண்ணின் குடும்பத்தார், அப்பெண்ணினை கொடூரமாகதாக்கியுள்ளனர். அதோடு இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அந்தப்பெண்ணின் தலைமுடியினை பிடித்துத் தரதரவென்று இழுந்து வந்து மரத்தில்கட்டித் தொங்கவிட்டு பொதுமக்கள் பார்க்கும்படி, பெண்ணினை குச்சியால் கொடூரமாக தாக்க ஆரம்பத்துள்ளனர். கையில் வைத்திருந்த குச்சி உடையும் வரை அடிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த இளம் பெண்ணை மரத்தில்கட்டித்தொங்கவிடப்பட்டதைக்கண்டு அனைவரும் சிரிப்பதைக் காணமுடிந்தது. ஆனால் சுற்றி நின்ற ஒருவர் கூட இளம்பெண்ணினை காப்பாற்ற முன்வரவில்லைஎன்பது தான் வேதனையான…
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹொனலுலு அருகேபறந்துகொண்டிருந்த போயிங் 747 ரக சரக்க விமானம், நடுவானில் செயலிழந்தது. நல்ல வேளையாக அது சரக்குவிமானம் என்பதால், பயணிகள் யாருமின்றி இரண்டுவிமானிகள் மட்டுமேவிமானத்தை இயக்கிச் சென்றனர். ஆகவே ஹொனலுலுவில் இருந்து மாலி தீவை நோக்கி சென்ற விமானத்தில் என்ஜின்திடீரென செயலிழந்த காரணத்தால் நடுக்கடலில் விமானத்தை இறக்க வேண்டியசூழ்நிலை வந்தது. இதனால் விமானத்தை இயக்கிய விமானிகள், அவசர நிலையைஉணர்ந்து,நடுக்கடலில் விமானத்தை இறக்கினர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமெரிக்க கடலோர படையினர், சம்பவஇடத்திற்கு சென்றுவிமானிகளை, அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்க கடலோரபடையினர் மீட்டுள்ளனர்
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டுவிட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்திருந்தார்.அதற்கு அடுத்தநாளே கர்நாடகாவுக்கு மேகதாது அணை மிக முக்கியம் எனவும், மத்திய அரசிடம் அனுமதி பெற்று அணையை கட்டுவோம் எனவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து, காவிரி ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மேகதாது அணை கட்டும்…
வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபரால் ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கூடுதலாக பிரபலமடைந்தார். இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, ஆதாரங்களையும் வழங்கினார். இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021க்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம், நிலைக்குழு அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தில் நான்காவதாக இடம்பெற்றுள்ள திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது, ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு மத்திய அரசு கூட அதை திருத்த முடியாது. ஆனால், இப்போது தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலாம் என்ற திருத்தம் இடம்பெற்றுள்ளது. இந்த மசோதாவுக்கு திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஷால் உள்ளிட்ட பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில்…
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ள நிலையில் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்தவரும், தனியார் பள்ளி பகுதிநேர பயிற்சியாளருமான கெபிராஜ் மீது கேரள மாணவி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை மே மாதம் 30 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கெபிராஜை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். கெபிராஜின் பயிற்சி மையம், வீடு ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவர் பயன்படுத்திய கணினியின் சி.பி.யூ, செல்போன்,…
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள், திரையுலகினர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருமணமாகி 15 ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம். எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது.எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன் – மனைவியாக இல்லாமல் தங்களது மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோராக இருக்க முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டு அமீர்கான் தனது மனைவி கிரணை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். நடிகர் அமீர்கான் கடந்த 2005ம் ஆண்டு கிரணை திருமணம் செய்தார் என்பதும் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வருகிறது…