Author: Admin

ரூ.15 கோடி மதிப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்: வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற தமிழினத் தலைவர் கலைஞர் போற்றிய செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையையும், உலகத்துக்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலம் வந்த தமிழினத்தின் சிறப்பை பறை சாற்றும் அறிவிப்பு ஒன்றை விதி எண் 110 இன் கீழ் இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை பெருமையாகக் கருதுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் அமர்கிறதோ அப்ப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத்தான் இருந்துள்ளது. மகாசக்ரவர்த்திகள் எல்லாம் இந்தியாவைத் தன் குடையின்…

Read More

செங்கல் சூளை வைத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி, மண் எடுத்துக்கொள்ளலாம் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை 30ம் தேதி, தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு , எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்களும் மண் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதால், அவர்களுக்கென தமிழக அரசு ஒரு புதிய முடிவு எடுத்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதன்படி ஒன்றரை அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிமவளங்களை சுரண்டுவதற்கு இணையாகாது என்பதால், ஒன்றரை அடி வரை மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்கான கட்டணத்தை மணல் எடுப்போர் அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Read More

நெல்லையில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் அறிவிப்புகளை வெளியிடுவதாக உரையைத் தொடங்கினார். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், பொறுப்பேற்கும் போதெல்லாம் தமிழ் அரசினை நடத்தியது திமுக தான் என்று பெருமிதம் தெரிவித்தார். பண்டைய நாகரீகத்தினர் தமிழன் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளதாகக் கூறிய ஸ்டாலின்,சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நெல்லையில் 15 கோடி செலவில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

Read More

காபூலில் பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஆப்கன் ராணுவ படைக்கு உதவி வந்த அமெரிக்க படை அந்நாட்டை விட்டு வெளியேறியது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்த தாலிபான்கள், ஆட்சியை கைப்பற்றின. இதில் பெண்களுக்கு இடமளிக்க தலிபான்கள் மறுத்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கும் பங்களிக்க கோரி பெண்கள் காபூல் வீதிகளின் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 2 பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள் அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடூர தாக்குதளுக்கு உள்ளான 2 பத்திரிகையாளர்களும் ரத்த காயங்களுடன் தோற்றமளிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை அமெரிக்க பத்திரிகையாளர் மார்கஸ் யாம் என்பவர் தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

Read More

ஆப்கானிஸ்தானில் விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளது விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை முழுவதும் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனிடையே பிரதமர், துணை பிரதமர், ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், துணை வெளியுறவு அமைச்சர் ஆகிய பதவிகளுக்கான தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிரிக்கெட் உட்பட எந்த விளையாட்டிலும் விளையாட பெண்களுக்கு அனுமதியில்லை என தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டு என்பது பெண்களுக்கான முக்கியமானதாக பார்க்கப்படவில்லை என்றும், கிரிக்கெட்டில் பெண்கள் அவர்கள் முகம் மற்றும் உடலை மறைக்காத சூழ்நிலை ஏற்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நாங்களும் எங்கள் இஸ்லாமிய விதிகளை விடமாட்டோம். அதேசமயம் ஷாப்பிங் போன்ற தேவைகளின் அடிப்படையில் பெண்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும்…

Read More

மூளையில் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தான் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக விஜே அர்ச்சனா வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமான அர்ச்சனா விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அனைவரது கவனம் ஈர்த்தார். இதனிடையே கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. பிறகு இதுதொடர்பாக பேசிய அர்ச்சனா தனக்கு தொடையில் 16 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் நீண்ட நேரம் நிற்க முடியாது எனவும் தெரிவித்ததால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். மேலும் படப்பிடிப்புக்கு வந்தால் தொடர்ந்து 15 முதல்16 மணி நேரம் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், இப்போதைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது எனவும்…

Read More

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் மஜூலி என்ற இடத்தில் இருந்து பயணிகள் படகு ஒன்று நிமதி படித்துரை நோக்கி சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் மற்றொரு படகு சென்றது. ஜோர்ஹாட் பகுதியில் வந்த போது இரண்டு படகுகளும் வந்தபோது திடீரென்று எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் படகுகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ள நிலையில் பலர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தகவல் அறிந்த மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 60க்கும் அதிகமானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படகு விபத்து குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அசாம் மாநிலத்தில் படகு விபத்து குறித்த செய்தி கவலை அளிக்கிறது. மாயமான…

Read More

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை கௌரவிக்கப்படும் வகையில் சர்ப்பிரைஸ் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கௌரவப்படுத்தும் விதமாக டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில்…

Read More

சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தால் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இதனை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வழக்கம்போல வெளிநடப்பு செய்தனர். இதற்கு முன்பாக சபாநாயகர் அப்பாவு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை பேச அனுமதித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த இஸ்லாமியர்களுக்கும் எதிரான சட்டமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போது இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, “இந்தச் சட்டம் என்றால் முதலமைச்சர் கொண்டுவந்த சட்டமா?” என்று கேள்வி எழுப்ப அவையில் சிரிப்பொலி எழுந்தது. உடனே நயினார் நாகேந்திரன் நான் சொல்வது மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை குறிப்பிடுவதாக கூறினார். தொடர்ந்து ஆதரவாக பேசி வந்த நிலையில் மத்திய அரசு கொண்டு…

Read More