- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
புதுச்சேரி அரசு மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டுள்ளது மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் கடந்தாண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் 2 மாதங்களுக்குப் பிறகு மே 24 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது தமிழகத்துக்கு இணையாக மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி கடந்த ஏப்ரல் மாதம் வரை அமலில் இருந்தது. அதன்பின் சட்டமன்ற தேர்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து திடீரென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி விதிப்பு இன்று முதல் (ஜூலை 15 ஆம் தேதி ) அமலுக்கு வருகிறது. இதனால் ரூ.100க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் இனி 20% சிறப்பு வரி சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும் என்பது…
பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளித்துள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ்வுக்கு சொந்தமான நிறுவனம் பதஞ்சலி நிறுவனம் மூலிகை பொருட்கள், சோப்பு, பேஸ்ட், நூடுல்ஸ் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக கொரோனில் என்ற மருந்தை கண்டுபிடித்தாக விளம்பரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வரி விலக்கு தர வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆராய்ச்சி சங்கம் என்ற விதிகளின் படி அந்நிறுவனத்துக்கு வழங்கப்டும் நன்கொடைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா எனும் பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் சின்ன சங்கி அண்ணாமலை என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவின் மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு திருப்பூரில் அவருக்கு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், “அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்தி தான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை. பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழக மக்களை திராவிட கும்பலிருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும் திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்” எனக் கூறினார். ஏற்கனவே பாஜகவினரை மற்ற கட்சியினர் சங்கி என அழைத்தது போய் சொந்த கட்சியினரே தங்களை சங்கி என அழைத்துக் கொள்வது…
பாகிஸ்தானில் பொறியாளர்கள் சென்ற பேருந்து குண்டு வெடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் அணை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியானது ஆப்கன் எல்லையில் உள்ள சர்வதேச கத்வார் துறைமுகத்தை இணைக்கக் கூடியது. இந்த அணை கட்டுமான பணியில் ஈடுபட்ட சீனாவின் 30 பொறியாளர்களுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சக்தி வாய்ந்த குண்டு பேருந்தில் வெடித்தது. இதில் சீனாவின் 9 பொறியாளர்கள் உட்பட 13 பேர் பலியாகினர். இதில் பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் 2 பேரும் அடங்குவர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கரீனா கபூர் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது இதனை ஆமீர்கானின் சொந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் லடாக்கில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு விளக்கமளித்துள்ள நடிகர் ஆமீர் கான், படப்பிடிப்பு தளங்களில் முற்றிலும் தூய்மையான மற்றும் கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ இன்று முதல் பங்கு சந்தையில் கால் பதிக்க உள்ளது. பங்குச் சந்தை நிலவரத்தின் அடிப்படையிலேயே உலகளாவிய வர்த்தகம் நடைபெறுகிறது. பங்குச் சந்தை ஒழுங்கு ஆணையமான செபி ஒப்புதல் அளித்ததையடுத்து பங்குச் சந்தையில் ஜொமோட்டோ நிறுவனம் இன்று முதல் கால் பதிக்க உள்ளது. அதன்படி ஜொமோட்டோ நிறுவனத்தின் 9 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள பங்குகள் இன்று விற்பனைக்கு வருகிறது. பங்குச் சந்தைக்கு வரும் முதல் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமும் ஜொமோட்டோதான். சமீபத்தில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பெயர் ஜொமோட்டோ லிமிட்டெட் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆய்வறிக்கை சமர்ப்பித்தது. நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருன்கிறன. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. இதனையடுத்து, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர். இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை சமர்பித்தனர்.
நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார். சென்னைத் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த காமெடி நடிகர் வடிவேலு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி குறித்து புகழ்ந்து தள்ளினார்.மக்களுக்கு திமுக ஆட்சி, ஒரு பொற்கால ஆட்சி என கூறினார். ஒரு மாதத்திலேயே அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு மக்கள் பணிகளை சிறப்பாக பணியாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கொங்குநாடு விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஏற்கனவே ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடு உள்ள போது கொங்குநாடு எதற்கு? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து…
ஒலிம்பிக் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இதனிடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முழங்கால் காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தான் விலகுவதாக ஃபெடரர் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தொடரில் விளையாடாமல் போவது வருத்தமளிப்பதாகவும் , அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் சக நாட்டு வீரர்களுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக சைக்கிள் மீட்கப்பட்டது. திருவள்ளூரை சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர் தனது விலை உயர்ந்த சைக்கிள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் திருடுபோனது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை கண்டுபிடித்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை இணைத்து அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் மிதிவண்டியை வாலிபர் ஒருவர் திருடும் வீடியோவையும் அஜ்மல் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை திருடிய நபரை கைது செய்து சைக்கிளை மீட்டதாக திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. தனது சைக்கிளை மீட்க உதவிய அனைவருக்கும் அஜ்மல் ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.