Author: Admin

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில்விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரின் போது அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின்…

Read More

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஜிம்பாப்வே அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் முதல், இரண்டாம் மற்றும் 3வது என குறிப்பிட்ட கால இடைவெளியில் வகை வகையாக தாக்குதலை நடத்தி வரும் கொரோனா தொற்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாடானது தற்போது கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொண்டு வருகிறது. அங்கு இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி தொற்று பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால் ஜிம்பாப்வேயில் இந்தாண்டு இறுதிக்குள் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கு பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தகுதியுடைய 12 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட சீனாவில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவை விரட்டி அடிக்கும் முயற்சியாக தடுப்பூசி விவகாரத்தில் அந்நாட்டு அரசு கெடுபிடி காட்டத் தொடங்கியுள்ளது. அதன்படி தடுப்பூசி கட்டாயம்…

Read More

மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை இரண்டாவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய வருமானவரித்துறை போர்ட்டல் இணையதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதில் தொடர்ந்து பயனாளர்களுக்கு சிக்கல் நிலவி வந்தது. குறிப்பாக வரி செலுத்துவோர் வருமான வரி அறிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனை உணர்ந்த மத்திய நேரடி வருமான வரித்துறை மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் 2021-22 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சகம் மற்றும் புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனம் இடையே நடந்த கூட்டத்தில் புதிய தளத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தீர்க்கப்படும் என இன்போசிஸ் உறுதியளித்தது. இந்த கால நீட்டிப்பு வரி செலுத்துவோரிடையே…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்துக் கொள்வதாக தகவல் பரவிய நிலையில் அதுகுறித்து டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து விளக்கமளித்துள்ளார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடரின் சீசன்-5 விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து உறுதிப்படுத்தாத தகவல்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவும் ஒருவர்.இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் வீட்டின் முன் தான் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்ததையடுத்து ஜி.பி.முத்து இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக தகவல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் வைரலானது.இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு ஜி.பி.முத்து பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இருப்பது பற்றி நானே யோசித்து தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மொபைல் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது என கூறியுள்ளார். அதேசமயம் என்னுடைய குழந்தைகளை பார்க்காமலும் என்னால் இருக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும்…

Read More

நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றிவரும் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழகத்தின் புதிய ஆளுநராக கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் காவல் துறை அதிகாரி மற்றும் இந்திய‌ உளவுத்தறையின் முன்னாள் சிறப்பு இயக்குனர். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமானவர் . . ஆர்.என். ரவி 1976 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இவர் பதவி வகித்துள்ளார். உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் ஆர்.என். ரவிக்கு உண்டு. தற்போது தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆர்.என்.ரவி .

Read More

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அதில், சட்டப்பேரவை நிகழ்வு நேரலை செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது குறித்து கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை என இபிஎஸ் தெரிவித்தார். அதற்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிமுக ஆட்சியில்தான் நடத்தது; பிறந்தநாள் விழாவின்போது ரவுடி கத்தியால் கேக் வெட்டியது அதிமுக ஆட்சியில்தான் நடந்தது என்று துரைமுருகன் பதில் கூறினார். அப்போது முதல்வர் குறுக்கிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி எப்படி அகற்றப்பட்டது? கோடநாடு இல்லத்தில் கொலை, கொள்ளை நடந்தபோது ஏன் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார் முதலவ்ர் ஸ்டாலின் மேலும்,…

Read More

கொரோனா 3ஆவது அலை எச்சரிக்கை உள்ளதால் திருவிழாக்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்: செப்டம்பர், அக்டோரில் கொரோனா 3ஆம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும், தொற்று தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்திற்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்கள், அரசியல், கலாசார நிகழ்வுகள், சமூகம், மதக் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மட்டும் பங்கேற்க அனுமதி . மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தலைவர்களை சார்ந்த குடும்பத்தினர், பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தலா 5 பேர் உரிய…

Read More

ஐபிஎல் திருவிழா முடிந்த இரண்டு நாட்களில் உலகக்கோப்பை டி20 திருவிழா தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு அந்த நாட்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு தரமான சம்பவங்கள் நடந்துள்ளது, ஒன்று நான்காண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஸ்வின் வருகை மற்றொன்று ரொம்பவே எல்லாரும் விரும்பிய தருணம் . ஆம் இந்திய அணியின் ஆலோசகராக தல தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரசிகர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தான் தோனியைக் கடைசியாக இந்திய ஜெர்சியில் பார்த்தது. அதற்குப் பிறகு இப்போது தான் இந்திய அணியுடன் இணையவிருக்கிறார். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ஏன் என பிசிசிஐ தரப்பிடம் ஒரு தனியார் ஊடகம் கேட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த பிசிசிஐ இந்திய அணியை வழிநடத்தி செல்ல தோனி மட்டும் தான் மிகச் சிறந்தவர். அவரை விட யாராலும் அதை திறமையாகச் செய்துவிட…

Read More

தமிழக சட்டப் பேரவையில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி, மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் என சூழல் இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என கடந்த ஜூலை 30ல் வெளியிடப்பட்டது. தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் மண் எடுக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்காக தமிழக அரசு ஒரு புதிய முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி, 1.5 அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது, கனிமவளங்களை எடுப்பது குற்றம் ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. எனவே மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.…

Read More