Author: Admin

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம்’நெற்றிக்கண். இந்த படத்தை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்க. படத்தின்அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயாராக இருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் நெற்றிக்கண்’திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. இந்த நிலையில் நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நெற்றிக்கண்’ திரைப்படத்தை ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பையும் அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஓ.டி.டி தளத்தில் விரைவில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக உள்ளது

Read More

தெலுங்குநடிகர் பாலகிருஷ்ணா ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர்.ரகுமானை மோசமாக விமர்சனம் செய்ததால் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்கள் பாலகிருஷ்ணா மீது கோபத்தில் உள்ளனர். தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பாலகிருஷ்ணா ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார் அதில், ஏ.ஆர். ரகுமான் பற்றிய கேள்விக்கு பதில் கூறிய பாலகிருஷ்ணா அவர், ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறியுள்ளார். அதே சமயம் எந்த உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். பால கிருஷ்ணாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி அவரின் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள். மேலும், பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை அணுகியதாகவும் அவர் மறுத்ததால்…

Read More

டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மழை பெய்தது. அதன்பின் மைதானத்தில் எனவே ஈரப்பதத்தை உலரவைக்க எடுத்த முயற்சி பலன் அளிக்காததால் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கில்லீஸ் – திருப்பூர் தமிழன் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதன்படி பேட்டிங்கை துவக்கிய திருப்பூர் தமிழன்ஸ் 16.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் நிறுத்தப்பட்ட ஆட்டம் சிறிது நேரம் கழித்து ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும்…

Read More

பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான ஃபிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் எனும் தலைப்பில் சிறப்பு விற்பனையை நடத்த உள்ளது. அதன்படி ஜூலை 25 முதல் ஜூலை 29 வரை நடக்கும் இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல்வேறு சாதனங்களை சலுகை விலையில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Flipkart Plus உறுப்பினர்கள் ஜூலை 24 ஆம் தேதி முதல் இந்த சிறப்பு விற்பனையில் கலந்து கொள்ள முடியும். இதில் குறிப்பாக ரியல்மி, போக்கோ, விவோ, மோட்டோரோலா ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Read More

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனிடையே கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதி இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Read More

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த காப்பீடு திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை சுமார் 4 ஆண்டு காலத்துக்கு அமலில் இருக்கும் என்றும், இதற்காக தமிழ்நாடு அரசு யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக…

Read More

கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுக்க இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற உள்நாட்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே உலக சுகாதார நிறுவனத்தின் அவசர காலப் பயன்பாட்டுப் பட்டியலில் கோவாக்சின் தடுப்பூசியை இணைக்க பாரத் பயோடெக் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழில்நுட்ப நிபுணர்களுடன் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அவசர கால பயன்பாட்டு அனுமதி அளிப்பதற்கான தேதி இனிதான் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Read More

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட டிக்டாக் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தடம் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் இந்த தாக்குதலால் சீனா இந்தியா இடையே வர்த்தக தொடர்பில் பூசல் எழுந்தது. மேலும், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு.மத்திய அரசின் உத்தரவால் ஏராளமான டிக்டாக் பயனர்கள் சோகத்தில் மூழ்கினர். இந்த நிலையில் டிக்டாகின் உரிமை நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது அதில் டிக்டாக்கின் பெயர் Ticktock என மாற்றப்பட்டுள்ளது இதனை டெக் மாஸ்டர் முகுல் சர்மா, தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்இதன் மூலம் டிக்டாக் செயலி இந்தியாவில் களமிறங்குவதாக கூறப்படுகிறது.

Read More

தெலுங்கானாவில் கார் ஷோரூமில் புது காருடன் மாடியில் இருந்து பாய்ந்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலம் ஆல்காபோரில் உள்ள டாடா ஷோரூமுக்கு புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் எல்.ஐ.சி ஊழியர் பி.பகவத்,(59) சென்றார். ரூ.6.40 லட்சத்தில் தனக்கு பிடித்தமான காரையும் தேர்வு செய்தார். அந்த கார் ஹைட்ராலிக் லிப்ட் மூலம் முதல் தளத்தில் இருந்து தரைதளத்திற்கு இறக்குவதற்கு தயாராக இருந்ததது. தான் புதியதாக வாங்கிய காரில் பி.பகவத் ஏறி அமர்ந்து இருந்தார். அப்போது பகவத் எதிர்பாராதவிதமாக தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தி விட்டார். இதனால் அதிவேகமாக சென்ற கார் முதல் மாடியில் இருந்து அப்படியே கீழே விழுந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ஊழியர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். நல்லவேளையாக அங்கு இருந்த நபர்கள் பகவத்தினையும் அவருடன் இருந்த ஊழியரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கார் விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Read More

இன்று இந்திய அரசியலில் பேசு பொருளாக உள்ள வார்த்தை பெகாசஸ் உண்மையில் பெகாசஸ் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறாது காண்போம் இந்த தொகுப்பு. Pegasus என்றால் என்ன? முதலில்பெகாசஸ் என்ற வார்த்தை கிரேக்க மொழியாகும் இறக்கைகளுடன் கூடிய குதிரை என்பது இதன் அர்த்தம் சரி இப்போது விஷயத்திற்கு வருவோம் , பெகாசஸ் என்பது ஒருவரின் செல்போனை உளவு பார்க்கும், ரகசியங்களைத் திருடும் மென்பொருள். இந்த மென்பொருளைப் பயன்படுத்துவோர், வெகுதொலைவில் இருந்தே இந்த மென்பொருளை இயக்க முடியும். குறிப்பாக ஆப்பிள், ஆண்ட்ராய்ட் செல்போன்களை ஹேக் செய்ய வேண்டும் என்பதற்காகவே பெகாசஸ் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெகாசஸ் எப்படி வேலை செய்கிறதுபெகாசஸ் ஒரு ஸ்பைவேர் அதாவது ஒருவருக்கு தெரியாமல் அவரை வேவுப் பார்க்கக்கூடிய மென்பொருள். இந்த ஸ்பைவேர் ஒருவரது ஸ்மார்ட்ஃபோனில் எந்த தொடுதலும் இல்லாமல் ஊடுருவி தனிப்பட்ட தகவல்களைப் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது செல்போனில் இருக்கும் ‘BUG’ மூலம் பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளே…

Read More