மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

SHARE

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த காப்பீடு திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை சுமார் 4 ஆண்டு காலத்துக்கு அமலில் இருக்கும் என்றும், இதற்காக தமிழ்நாடு அரசு யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொருவரிடமும் மாதந்தோறும் ரூ.300 பிடித்தம் செய்யப்படும். அதேசமயம் இந்த காப்பீட்டுத் திட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்கு பொருந்தாது.

காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும் என அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்… சபாநாயகர் அப்பாவு

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

Admin

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு.!!

Admin

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

புகைப்படத்துக்கா பஞ்சம்? திமுக – அதிமுக விளம்பரங்களில் காணப்பட்ட ஒரே புகைப்படத்தால் சர்ச்சை…

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

Leave a Comment