Author: Admin

இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறி ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடாக ஏ.ஆர்.ரஹ்மான் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சி நடத்தியதால் நஷ்டம் ஏற்பட்டதற்கு பொறுப்பாக முடியாதென்றும், நிகழ்ச்சிக்காக பேசிய தொகையைக்கூட மனுதாரர் தராமல், போலியாக இழப்பீடு கேட்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களுக்கு பின், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து…

Read More

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் பெருநிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மாநகராட்சி துணை கமிஷனர் மணிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசு ஜூலை மாதத்துக்கு தமிழகத்துக்கு 72 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி போட கர்ப்பிணி பெண்கள் உட்பட யாரையும் வற்புறுத்தவில்லை. தடுப்பூசி போடுவது…

Read More

ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் தவறாக பேசாத சமூகம் தன்னை மட்டும் தவறாக பேசுவதாக நடிகை வனிதா குற்றம் சாட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவை வனிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதனைப் பார்த்த பலரும் பவர் ஸ்டாருடன் எப்போது திருமணம் நடந்தது என கேள்வி எழுப்பினர். இதற்கு நேற்று பதில் கிடைத்தது.அதாவது நடிகை வனிதா பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடிக்கிறார். அதன் புகைப்படம் தான் வனிதா பகிர்ந்தது என தெரிய வந்தது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை வனிதா, நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால் தான் தற்கொலைகள் அதிகரிப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய…

Read More

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் திட்டத்தை கொண்டு வர ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்த ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஏற்கனவே அமெரிக்கா டிஜிட்டல் டாலர் திட்டத்தில் பணியாற்றி வரும் நிலையில் சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளும் சமீபத்தில் டிஜிட்டல் ரூபாய் திட்டத்தில் இணைந்தன. இதனிடையே இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாய் திட்டத்தைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை வகுத்து வருகிவதாக அதன் துணை கவர்னர் டி.ரபி சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் இது சோதனை திட்டமாக அறிமுகமாகும் என்றும்,டிஜிட்டல் ரூபாய் பயன்பாடு, சேமிப்பு, பரிமாற்றம் என அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரைமுறையை உருவாக்கி வருகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Read More

ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் தீபிகா – பிரவீன் இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வில்வித்தை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்திய கலப்பு அணியான தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி சீன தைபேயின் சியா-என் லின்/சீ-சுன் டாங் ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் செட்டில் இந்திய அணி 35 புள்ளிகளும், சீன தைபே 36 புள்ளிகளும் பெற்றன.இதனால் சீன தைபே அணி 2 புள்ளிகள் பெற்றது. 2-வது செட்டில் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது. இதனால் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் பின்தங்கியது. 3வது செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜோடி விளையாடியது. இதில் இந்தியா 40 புள்ளிகள் பெற்று வெற்றி பெற 2…

Read More

சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதில் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்துள்ள கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் தாயும் 4 மாத குழந்தையும் சிக்கி தவித்துள்ளனர். மீட்பு படையை பார்த்த தாய், எப்படியாவது குழந்தையை காப்பாற்றிவிட துணிந்த அந்த தாய் குழந்தையை அங்கிருந்த மீட்பு படையினரிடம் தூக்கி எறிந்துவிட்டு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார் . கண்ணீரை வர வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Read More

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா ‌. திருமணமாகி இரண்டு முறை விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வனிதா பவர்ஸ்டாருடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனால் வனிதா 4 வதாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவிய நிலையில் வனிதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வனிதா ஆண்களுக்கு 4,5 திருமணம் நடந்தால் அதை யாரும் பேசுவதில்லை, பெண்கள் செய்தால் மட்டும்பேசுகின்றனர். நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், எதற்கும் அச்சப்பட மாட்டேன். எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் பகிர்வேன். பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம் செய்துகொண்டது போல் வெளியிடப்பட்ட புகைப்படம் திரைப்படத்துக்கானது. விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Read More

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது 46வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ஏராளமானோர் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் “எதற்கும் துணிந்தவன்” படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெய்பீம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெய்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். கர்ணன் திரைப்படத்தில் நாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் சூர்யா வழக்கறிஞராக…

Read More

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. இந்த கமிஷன் தொடங்கப்பட்ட போது 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கும் நிலையில் இன்னும் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை. இதனிடையே…

Read More

காவலர்கள் முறையான வாரண்ட் இல்லாமல் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கக் கூடாது டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிப்பது தொடர்பாக காவலர் மற்றும் நடத்துனர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை தொடர்ந்து, தற்போது காவலர்கள் முறையான வாரண்ட் இல்லாமல் தங்கள் சொந்த வேலைக்காக இலவசமாக பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Read More