ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் தவறாக பேசாத சமூகம் தன்னை மட்டும் தவறாக பேசுவதாக நடிகை வனிதா குற்றம் சாட்டியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவை வனிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதனைப் பார்த்த பலரும் பவர் ஸ்டாருடன் எப்போது திருமணம் நடந்தது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு நேற்று பதில் கிடைத்தது.அதாவது நடிகை வனிதா பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடிக்கிறார். அதன் புகைப்படம் தான் வனிதா பகிர்ந்தது என தெரிய வந்தது.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/images-33-1.jpeg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/images-33-1.jpeg)
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை வனிதா, நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால் தான் தற்கொலைகள் அதிகரிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பளமே வாங்காமல் இதில் நடித்து வருகிறேன் என்றும், கல்யாணம் ஆவதெல்லாம் கடவுள் கையில்தான் உள்ளது.
எனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதும் ஆண்டவன் கையில்தான் உள்ளது என பேசியது வனிதா ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.