Author: Admin

நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார். இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த ஈசிஆர் சாலை சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு பெண் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத…

Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து எளிதாக வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை நடைபெற்ற இப்போட்டியில் பிவி சிந்து இஸ்ரேலின் க்செனியா பொலிகர்போவாவை எதிர்கொண்டார். தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் செட்டை 21-7 என்ற கணக்கிலும், 2வது செட்டை 21-10 என்ற கணக்கிலும் கைப்பற்றினார். என்ன செய்வது என்றே தெரியாமல் க்செனியா நிலைகுலைந்து போகும் அளவிற்கு சிந்துவின் இன்றைய ஆட்டம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வங்கி கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரக்கூடிய மெசேஜ் லிங்கை தொட வேண்டாம் என சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட வங்கி மூலமாக வருவது போல் ஒரு லிங்க் மெசெஜ் அனைத்து செல்போன் எண்ணிற்கும் வருகிறது. அந்த மெசேஜில் இந்த லிங்கை 10 நிமிடத்திற்குள் அழுத்தி உங்களது Kyc/pan card/ aadhar card விவரங்களை பதிவிட வேண்டும் எனவும் இல்லையென்றால் உங்களது வங்கி கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனை நம்பி பொதுமக்கள் பலர் அந்த லிங்க் மூலமாக தங்களது விவரங்களை பதிவு செய்கின்றனர். அந்த சமயத்தில் அதாவது அடுத்த 2-3 நிமிடங்களில் குறிப்பிட்ட வங்கி கணக்கின் தனிப்பட்ட விவரங்களை மோசடி கும்பல் ஹேக் செய்து உடனடியாக ஏடிஎம் மூலமாகவும், ஷாப்பிங் மூலமாகவும் பணத்தை திருடி வருகின்றனர். இது போல் வரக்கூடிய மெசேஜை பொதுமக்கள் ஒருவரும் நம்பவேண்டாம் எனவும் வங்கியிலிருந்து இது போன்ற மெசேஜ் அனுப்பமாட்டார்கள் என…

Read More

சார்பட்டா’ முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே இருக்கிறது என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் ஆர்யாவின் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சார்பேட்டா பரம்பரை. வட சென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில், ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.  இந்த படம் குறித்து கூறுகையில் சார்பட்டா படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாக உள்ளது.எம்ஜியாருக்கும், விளையாட்டுத்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.கலை மூலம் உண்மைகளை மறைப்பது வருங்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம்.என்று தெரிவித்துள்ளார்.

Read More

வரும் திங்கட்கிழமை முதல் தலைநகர் டெல்லியில் 50% இருக்கைககளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் கொரொனா வைரஸின் 2 வது அலை பரவியது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போதுகொரொனா இரண்டாம் அலையின் தாக்கல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் திங்கட் கிழமை முதல் அங்கு 50 % இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,வரும் திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில், பேருந்துகள் 100% இயங்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் சினிமா துறையினரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

இங்கிலாந்தின் முன்னாள் இளவரசர் ஹரி தனது வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை 4 பிரிவாக வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எலிசபெத் மகாராணியின அரச குடும்பம் உலக அளவில் புகழ்வாய்ந்தது. பல உலக அரசியல் நிகழ்விலும் இந்த குடும்பத்திற்கு பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக குடும்பம் சொன்னாலே பிரச்சினை இருக்கும் அல்லாவா அந்தவகையில் இளவர்சர் ஹரிமேகன் தம்பதியினர் அரச குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந் மகாராணியின் பேரனும் இளவரசருமான ஹரி அவரது வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புத்தகத்தினை ஒரு பெரும் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புத்தகம் நான்கு பாகங்களாக வெளியிட உள்ளதகாவும் அதில் முதல் புத்தகம் அடுத்த ஆண்டும், 2வது புத்தகம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னரும் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் அதே நிறுவனத்துடன் இணைந்து…

Read More

திமுக அரசு இந்திய அரசினை ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது என டாகடர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் உணவக விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு கட்டாயமாக நீட் தேர்வு நடத்தப்படும் என கூறியதால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே மாணவர்களிடையே ஏற்படும் குழப்பம் நீங்கும் என கூறினார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவை ஒன்றியம் என அழைப்பது நம்மை நாமே சிறுமைபடுத்துவது போல உள்ளதால் திமுக தங்களது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் ஒன்றிய அரசு என அழைக்கப்படுவது தேசத்திற்கு எதிரானதாக பார்க்கப்பட வேண்டும் என்றார்

Read More

”உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பலர் தங்களது வாகனங்களை வெளியில் எடுத்து செல்லமுடியாமல் வீட்டிலேயே முடக்கி வைக்கும் நிலை உள்ளது. இதனால் பலரும் சைக்கிளுக்கு மாறி வருகின்றனர். மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த யூடியூபர் மதன்கொளரி இந்தியாவில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அதாவது உலகிலேயே அதிகமான இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியா என்றும்இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்திய அரசிற்கு டெஸ்லா நிறுவனம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று…

Read More

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுக இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.வளர்மதி, கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன் ஆகியோர் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாகவும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி,அதிமுக மகளிர் அணி செயலாளர் – பா.வளர்மதி (அதிமுக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்), மகளிர் அணி இணை செயலாளர் – மரகதம் குமரவேல் எம்எல்ஏ (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்), அதிமுக இலக்கிய அணி செயலாளர் – வைகைச்செல்வன் (செய்தி தொடர்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்), அதிமுக வர்த்தக அணி செயலாளர் – வி.என்.பி.வெங்கட்ராமன் (ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர், சென்னை புறநகர் மாவட்டம்), இணை செயலாளர் – ஏ.எம்.ஆனந்தராஜா (சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள்…

Read More

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவரின் தனித்தன்மை நடிப்பின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹிரோக்களில் ஒருவராக மாறி உள்ளார் விஜய் ஆண்டனி. அப்படியாக இவருக்கு பேர் சொல்லும் படமாக இயக்குனர் சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்தில் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். செண்டிமெண்ட் காட்சிகளுக்காகவே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.இந்நிலையில், பிச்சைக்காரன் 2 உருவாக்கும் முயற்சியில் விஜய் ஆண்டனி ஈடுபட்டுள்ளார். ஆனால், இப்படத்தை சசி இயக்கவில்லை. மாறாக விஜய் ஆண்டனியே இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை அவரே தயாரித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகிறது.இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Read More