நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார்.
இதனிடையே செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த ஈசிஆர் சாலை சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/1627180475884.jpeg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/1627180475884.jpeg)
இந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு பெண் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மதுபோதையில் விபத்து நடந்ததா? என்ற பாணியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.