Author: Admin

ஒலிம்பிக் போட்டி நடந்து வரும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினால் மேலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பாதுகாப்போடு ஒலிம்பிக் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது போட்டிகள் தொடங்கி நடந்துவரும் நிலையில் டோக்கியோ நகரில் தற் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. டோக்கியோவில் இன்றுமட்டும் 2,848பேருக்குகொரோனாதொற்றுஉறுதியாகியுள்ளது, இதற்கு காரணம் ஒலிம்பிக் போட்டிதான் என்றும்டெல்டா வைரஸ் பரவல் காரணமாகவே தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பாட்டுள்ளர். கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று பெங்களூருவில் தனியார் விடுதியில் நடந்த பாஜகவின் சட்டமன்ற குழு கூட்டத்தில் பசவராஜ் பொம்மாய் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படார். இந்த கூட்டத்தில், தர்மேந்திர பிரதாப் மற்றும் எடியூரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர். யார் இந்த பசுவராஜ்: எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரான பசுவராஜ் கடந்த 2 ஆண்டுகளாக உள்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார். 61 வயதான பாசவராஜ் பொம்மாய் இதற்கு முன்பு 2008 முதல் 2013 வரை கர்நாடகாவில் நடந்த பாஜக ஆட்சியின் போது நீர்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார். பசவராஜ் பொம்மாயின் தந்தை எஸ்.ஆர். பொம்மாய் கர்நாடகாவின் 11 ஆவது முதல்வராக கடந்த 1996 முதல் 1998 வரை பதவி வகித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு தனது தந்தை மறைவுக்கு பிறகு 2008ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மாய்…

Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த மணிப்பூரைச் சேர்ந்த இந்தியாவின் மீராபாய் பானு. இந்த நிலையில் மீராபாய் பானுவை போலவே செய்த சிறுமியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில் : மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுத்தூக்கும் வீடியோ ஓடிக்கொண்டிருக்க கையில் பவுடரை பூசி கெத்தாக சிறுமி மீராபாய் போலவே பளுத்தூக்கி அவர் வென்றவுடன் கையை உயர்த்தியது போலவே உயர்த்தி அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வெள்ளி மங்கை மீராபாய் சானுவின் கவனத்தையும் ஈர்க்க அவரும் அதைப் பகிர்ந்து ‘So cute. Just love this’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த குட்டி மீராபாய் பானு இணையத்தில் வைரலாகி வருகின்றார்

Read More

இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,40,951 ஆக உள்ளது. கொரோனாவினால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,21,382 ஆக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதாவது கடந்த 4 வாரமாக 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மூன்று மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா: அதன்படி, கேரளா 7, மணிப்பூர் 5, மேகாலயா 3 ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது என்றும் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.4% ஆக உயர்ந்துள்ளதாகவும். மேலும் ஒட்டுமொத்தமாக 54 மாவட்டங்களில் கொரோனா பரவல் சதவீதம் 10க்கும் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Read More

சொகுசுகாருக்கு வரி செலுத்த மறுத்த விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நிறுத்தி வைத்துள்ள உயர்நீதிமன்றம், பாக்கி வரியை உடனடியாக செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். கோரிக்கையை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிக்கப்பட்ட அபராத தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த விமர்சனத்தை திரும்பப் பெறக்கோரியும், அபராதத்தை வாபஸ் பெறவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். வரிபாக்கியை செலுத்த தயாராக உள்ளதாகத் தெரிவித்த விஜய், தனி நீதிபதி தன்னை தேச விரோதி போல் பேசி இருப்பதை…

Read More

வன்னியர், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5% என இட ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இந்த சிறப்பு ஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தபடி வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில் இந்த சிறப்பு ஒதுக்கீடு கொடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சட்ட வல்லுநர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி மாணவர் சேர்க்கையானது மேற்கூறிய சிறப்பு ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பெயரிலான சீரியல் ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஹீரோயினாக நடித்திருப்பவர் , அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு வந்திருப்பது போலவும், அவர் ஒரு கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்போது அங்கு வரும் ஹீரோ அந்த கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடியை தட்டி கேட்டு தாலியை பறிப்பதும், அதனை பார்த்து கோபமடையும் ஹீரோயின் அவரிடம் பிரச்சனை செய்வது போலவும் அடுத்தடுத்து காட்சிகள் உள்ளது. இதனால் கோபமாகும் ஹீரோ அம்மன் சிலையில் உள்ள ஒரு தாலியை எடுத்து வலுக்கட்டாயமாக கட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த திருவள்ளூர் மாவட்ட, போலீஸ் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் விஜய் டிவி பதிவில் கமெண்ட் ஒன்றை வெளியிட்டார். அதில் இதுபோன்ற செயல்களுக்கு சட்டத்தில்…

Read More

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சர்கார் படம் தொடர்பாக போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய், நடிகை கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் சர்கார். இந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாக முருகதாஸ் மீது கடந்த 2018 ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முருகதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத்திற்கு தணிக்கை வழங்கிய பிறகும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள்? என கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி திரைப்படத்தை தணிக்கை செய்த பிறகு அதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு காழ்ப்புணர்ச்சியோடு, தனி நபரால் கொடுக்கப்பட்ட…

Read More

அக்னி பரீட்சையாக எனது ஆட்சிக்காலம் அமைந்து விட்டது என்று கண்ணீர் மல்க எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. ஆனால், கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். 2 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுவதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ.க்களுக்கு பெங்களூருவில் இன்று காலை எடியூரப்பா விருந்து அளித்துள்ளார். அப்போது எனது ஆட்சிக்காலம் முழுவதும் அக்னி பரீட்சையாக அமைந்துவிட்டது என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.மேலும் , ராஜினாமா தனது சொந்த முடிவு என்றும் அவரை யாரும் வெளியேற கட்டாயப்படுத்தவில்லை என்றும் எடியூரப்பா தெளிவுபடுத்தினார்.எதேனும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பணியாற்ற அவர் தயாராக இருக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, ​​நான் மாநிலத்தை விட்டு வெளியேறுவது குறித்து எந்த கேள்வியும் இல்லை. மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். அடுத்த…

Read More

அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் பவானி தேவி டோக்கியோ மாநகரில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீராங்கனையாவார். முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் இவர் வென்றார். இதனால் இரண்டாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியது. இரண்டாவது போட்டியில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டுடன் மோதினார். அவருடன் 7/15 என்ற கணக்கில் தோல்வியினை தழுவினார் இதனால் வாள்வீச்சில் இந்தியாவிற்கான பதக்க கனவு கலைந்தது.தனது தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவி மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், ” இது…

Read More