- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி, அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது. வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டம் என்பதால் தொடக்கம் முதலே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. முதல் கால் பகுதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது கால்பகுதி நேரத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்திய அணிக்கான முதல் கோலை அடித்தார். பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முயன்றபோதிலும் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவை முட்டியளவு கழிவுநீரில் கட்டாயப்படுத்தி பொதுமக்கள் நடக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அங்கு வெற்றி பெறும் முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் 2017 தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி பக்கமே இதுவரை போகாத எம்எல்ஏக்கள் கூட மீண்டும் தங்கள் தொகுதியில் தலையை காட்டி வருகின்றனர். அந்த வகையில் மீரட் மாவட்டத்தில் உள்ள கர்முக்தேஸ்வர் தொகுதி பாஜக எம்எல்ஏவான கமல் மாலிக், தன்னுடைய தொகுதிக்குள் பாதயாத்திரை சென்றுள்ளார். அப்போது ஹபூரின் நானாய் பகுதியில் உள்ள கிராமத்தின் வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் முட்டியளவு கழிவுநீர் தேங்கி நின்றுள்ளது. வேறு பாதை கிடையாது என்பதால் அதில் இறங்கலாமா வேண்டாமா என கமல் மாலிக் யோசிக்க, இந்த பகுதி பற்றி நீங்களே தெரிஞ்சுக்குங்க என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொதுமக்கள் அதில் கட்டாயப்படுத்தி இறங்க வைத்தனர். இதன்…
பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பிளஸ்-2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 10,11,12 ஆகிய வகுப்புகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. அதேசமயம் அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு துணைத்தேர்வுகள் வருகிற 6 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று காலை வெளியானது. ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கும் அடுத்தப் படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர் இந்தியன்-2 படத்தை தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியில் எம்.எஸ்.தோனி, மெஷின், கபீர் சிங், குட் நியூஸ், லக்ஷ்மி உட்பட பல படங் களில் நடித்துள்ள கியாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இயக்குநர் ஷங்கரும் கியாரா பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்துடன் இந்த தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மூன்றாவது அலை வருமா என்பது தெரியாவில்லை ஆனால் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது . அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்திலும் கொரோனா பரவலை குறைக்க தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கொரோனா மூன்றாவது அலை வரும் என்பது தெரியாவிட்டாலும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும் என்றார். மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்…
கேரளாவில் கொரோனா தடுப்பூசிகள் தீர்ந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் மட்டும் தினசரி பாதிப்பு தினமும் 20 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. கிட்டத்தட்ட நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், கிட்டத்தட்ட பாதி அளவு கேரளாவில் பதிவாகிறது. இதனால் ஜூலை 31 ஆம் தேதி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் தடுப்பூசிகள் தான் தீர்ந்து விட்டது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே 6 பேர் கொண்ட நோய் தடுப்பு குழுவை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது குறிப்படத்தக்கது.
திருப்பூரில், அரசு பேருந்தில், கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி பொருத்தி பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த கடந்த மே மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது ஆகவே, தற்போது அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,திருப்பூர் பணிமனைக்குட்பட்ட அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாயை பொருத்தி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, அந்த பேருந்து இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கும் அரசு பேருந்து, இரும்பு பைப் உதவியுடன் இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும்,கியருக்கு பதிலாக இரும்பு ராடினை பயன்படுத்தும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனரும் நடிகருமான விஜய் ஆண்டனி, இந்து மதக்கடவுளை புண்படுத்தி விட்டதாக, இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் வெளியிட்ட அறிக்கை: இந்து கடவுளை அவமதிக்கும் வகையில், காளி படத்தோடு, ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஆகவே விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு, போஸ்டரை அகற்ற வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் திரைப்படம் என்ற பெயரில் இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் வகையில் போஸ்டர்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. இந்து மத கடவுள்களின் படத்தை போட்டு இழிவுபடுத்துவது போல் மற்ற மதத்தின் கடவுள்களின் படங்களை பிச்சைக்காரன் 2என்ற வார்த்தையை பயன்படுத்தும் துணிவு இருக்கிறதா என கேள்விஎழுப்பியுள்ளார்.
திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார்,என்று, பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற கூட்டம் நடத்தி வருகிறோம். பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரானது என, தி.மு.க திருமாவளவன் உள்ளிட்டோர் துாண்டிவிட்டு, பகைமை பாராட்டும் சூழலை உருவாக்கியுள்ளனர். இதனை தடுக்க கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை சந்தித்து, பா.ஜ., சாதனை குறித்து விளக்குவோம். பா.ஜ.,வினர், இஸ்லாமியர் பகுதிகளில் ஓட்டு சேகரிக்க சென்றால், தி.மு.க., ஆட்சியும், போலீசாரும் தடுக்கின்றனர். திருமாவளவன் கட்சிக்கு தி.மு.க.,வில் மரியாதை இல்லை. பா.ஜ.,வில் பட்டியலினத்தவர் மாநில தலைவர், மத்திய அமைச்சராகவும் ஆகிறார். இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார் என கூறினார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் நாளை முதல் அங்காடிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை எவ்வித கூடுதல் தளர்வுகளின்றி நீடிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்பொழுது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை…