- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பாக வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். இறுதியில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சேலத்தில் கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் மேம்பாலத் தடுப்புச் சுவர் மீது மோதியதில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஸ்(வயது 22) நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தாா். அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்துபோது, மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் சென்றதால் கார் கடும் சேதமடைந்தது. இதனையடுத்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விபத்து நடந்த…
மளிகை பொருட்கள் விநியோகிக்கும் சேவையை வருகிற 17ம் தேதியுடன் சொமேட்டோ நிறுவனம் நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையவழியில் ஆர்டர் செய்யும் உணவுகளை விநியோகித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோ, கொரோனா சூழலை முன்னிட்டு, கடந்தாண்டு முதல் வீடுகளுக்கு மளிகை பொருட்களை விநியோகிக்கும் சேவையை தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக மளிகை பொருட்களை டெலிவரி செய்த போதிலும், நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நீண்ட இடைவெளி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த சேவையை வருகிற 17ம் தேதியுடன் நிறுத்திக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை மளிகை கடைகளுக்கு எழுதிய மின்னஞ்சலில் சொமேட்டோ குறிப்பிட்டுள்ளது.
மியாமி கால்பந்து விளையாட்டு அரங்கின் ஸ்டேடியத்தில் பூனை ஒன்று தடுமாறி விழ, பார்வையாளர்கள் பத்திரமாக மீட்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மியாமியில் கல்லூரி கால்பந்து விளையாட்டு அரங்கில் ஏராளமான பார்வையாளர்கள் கால்பந்து போட்டியை ரசித்துக் கொண்டிருக்க, விளையாட்டு அரங்கின் ஸ்டேடியத்தில் சைடில் இருந்த சுவரில் நடந்து சென்ற பூனை ஒன்று கால் தடுமாறி அந்தரத்தில் தொங்கியுள்ளது. இதனை பார்த்த கால்பந்தாட்ட பார்வையாளர்கள் போட்டியை விட்டு விட்டு பூனையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். பூனையானது கீழே விழ அதனை பார்வையாளர்கள் பிடித்து காப்பாற்றினர். இதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு தனது பிரச்சனையை தீர்த்து வைத்தது யார் என தெரிவித்துள்ளார். இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் – நடிகர் வடிவேலு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு கடந்த 4 வருடங்களாக சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. இந்த பிரச்சனை சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தால் தீர்த்து வைக்கப்பட்டது . இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு மீண்டும் முழுவீச்சில் சினிமாவில் நடிக்க உள்ளார். அவர் இயக்குநர் சுராஜ் இயக்கவுள்ள நாய் சேகர் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். இதனை தமிழ் திரையுலகே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதனிடையே வடிவேலு நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனது புதிய படம் குறித்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த பிரச்சினையை முடித்து வைத்தது…
தமிழகம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகி போனது தான் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கொரோனா காரணமாக தாமதமாக இந்தாண்டு நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் கோழையூர் மாணவர் தனுஷ் தேர்வு எழுத செல்வதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடப்பு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார். இந்த தீர்மானம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு…
நீட் தேர்வு தொடர்பாக தன்னை குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர் பதிவிட்ட கருத்துக்கு நடிகர் சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வை 1.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே இன்று தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் என்ற பாஜக ஆதரவாளர் ட்விட்டரில் நடிகர் சித்தார்த்தை குறிப்பிட்டு, “நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி…இன்று நீட் நடக்கிறது…. பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் -Actor Siddharth…ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க ?” என கேள்வி எழுப்பியிருந்தார். இதனை கண்டு கடுப்பான சித்தார்த், “மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன போய் கேளு. நான் என் வேலையத்தாண்டா பாக்கறன்.…
நடிகர் விஜய்யின் சாதி சான்றிதழ் வரலாறு குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பட விழா ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. இதில் நடிகர் அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி சாயம் படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ், நடிகைகள் கீர்த்தனா, கோமல் சர்மா, ஷாஸ்வி பாலா, பாடலாசிரியர்கள்…
தமிழகம் முழுவதும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா 3வது அலையை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 4,30,051 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இன்று ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தடுப்பூசி முகாம்களில் ஒரே நேரத்தில் பலர் பங்கேற்பார்கள் என்பதால் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய அங்கன்வாடி ஊழியர்களை பயன்படுத்தவும் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் ரோட்டரி சங்கங்கள் , தனியார் தொண்டு நிறுவனங்கள் , ஆசிரியர்கள் , வருவாய்த் துறையினர் , உள்ளாட்சி துறையினர் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகிக்கàப்பட்டுள்ளது.…
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் தேர்வானது நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளவர்களில் 40,376 மாணவர்களும் 70,594 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் ஆவர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இருந்து 17,992 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் இருந்து 15,067 பேர் விண்ணப்பித்துள்ளனர்.…
இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் போட்டிக்கு முன்பாக இந்திய அணி நிர்வாகத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தொற்று அச்சத்தால் இந்திய அணி விளையாட மறுப்பு தெரிவித்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதுதான் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வீரர்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என்றே முடிவு வந்தது. இங்கிலாந்து வீரர்களோ ‘நாங்கள் களமிறங்க தயார்’ என்று தெரிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியும் ரெடியாகத் தான் இருந்தது. ஆனால் இப்போட்டி முடிந்த அடுத்த 2 தினங்களில் செப்டம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய அரபு…