- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
குஜராத் மாநிலத்தில் ஆம்லெட்டில் ஃபாண்டா குளிர்பானத்தை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக அசைவ உணவகங்கள் நாம் போனால் நாம் விரும்பி சுவைக்கும் உணவாக இருப்பது ஆன்லெட் தான் எனபதை அசைவ உணவு பிரியர்கள் மறக்கமுடியாது. பொதுவாக ஆம்லெட்டில் பல வகைகள் உள்ளன ஏன் சைவ ஆம்லெட் என்று கூட உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலம், சூரத் நகரில் இயங்கி வரும் ஒரு ரோட்டு கடையில் தயார் செய்யும் ஆம்லெட்டில் முட்டையுடன் சேர்த்த பொருள் தான் சமூக வலைதளங்களில் டிரென்டிங் ஆகி வருகிறது. முட்டையுடன், வெங்காயம், மசாலப்பொடிகள், புதினா சட்னி போன்றவற்றுடன் ஃபான்டா குளிர்பானத்தையும் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஆம்லெட் ரூபாய் 250-க்கு விற்கப்படுகிறது. இந்த ஆம்லெட்டை உணவுப் பிரியர்கள் நீ, நான் என்று போட்டிப்போட்டு வாங்கி உண்பதால் விற்பனை படுஜோராக இருப்பதால் உணவக உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஃபான்டா சேர்த்த ஆம்லெட் மட்டுமல்லாமல், முட்டை டிக்கா…
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி, பி்ன்னர் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். இதனிடையே, தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, தனி கட்சி ஒன்றை ஆரம்பித்தார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். சில மாதங்களிலேயே கட்சியை கலைத்துவிட்டு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை காலமானார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி காரினை பரிசளிக்க உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இவரை பாராட்டி டிவிட் செய்திருந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘நாங்கள் அனைவரும் தங்களது ராணுவத்தில் இருக்கிறோம் பாகுபலி’ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் டிவிட் செய்திருந்த ஒருவர், சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி பரிசளிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர், நிச்சயம் வழங்கவுள்ளதாக கூறியதோடு, அவரது நிறுவனத்தின் இரு நிர்வாக அதிகாரிகளை டேக் செய்து, XUV700 ஒன்றை தயாராக வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் கொரோனா நிபந்தனைகளை மீறி தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகர் மம்மூட்டி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் ஊரடங்கு சட்ட விதிகளை கடுமையாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருமணம் மற்றும் இறுதி சடங்கு உள்பட நிகழ்ச்சிகளில் 25 நபருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது. அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் ரோபோட் அறுவை சிகிச்சை மைய திறப்பு விழா கடந்த 2 தினங்களுக்கு முன் நடந்தது. இதில் பிரபல நடிகர் மம்மூட்டி, நகைச்சுவை நடிகர் ரமேஷ் பிஷாரடி மற்றும் பலர் கலந்து கெண்டனர். அங்கு மம்மூட்டியை பார்க்க ஏராளமான ரசிகர்களும் திரண்டணர் இதையடுத்து, கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக நடிகர்கள் மம்மூட்டி, ரமேஷ் பிஷாரடி, மருத்துவமனை நிர்வாகிகள் உள்பட 300 பேர்…
விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆபாச படம் எடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது நண்பர்களை மும்பை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர் இந்த நிலையில்ராஜ் குந்த்ரா மற்றும் அவரது தொழில் கூட்டாளியான ரியான் தார்பேவும் தங்களை கைது செய்யும் முன் குற்றவியல் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பாததால் தங்களின் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விளக்கமளித்த மும்பை காவல்துறையினர் ராஜ் குந்தாராவினை கைது செய்வதற்கு முன்பு தாங்கள் நோட்டீஸ் அனுப்பியதாகவும் ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள மனுதாரர்கள் தரப்பு தவறி விட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, ராஜ் குந்த்ரா மற்றும்…
யூ டியூப் சேனல்களில் பெண்களை ஆபாசமாக பேசியதுல் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் கடந்த ஜூலை 5-ம் தேதி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனது மேல் போடப்பட்ட குண்டர் சட்டத்த ரத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. எனவே என்னை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு நாளைக்குவிசாரணைக்கு வரவுள்ளது. பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!
ஆந்திராவின் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டு உள்ளது. அங்கு நோயாளி ஒருவருடன் இருந்த நபர், சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த செவிலியரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட அந்த செவிலியரிடம் நோயாளிகள் முன்னிலையில் மிகமோசமான முறையில் அத்துமீறிய அந்த நபர், சாவகாசமாக அங்குமிங்கும் நடந்து சென்றதோடு, தன்னை யார் என்ன செய்ய முடியும் என காலியாக இருந்த படுக்கையிலும் திமிராக படுத்துக் கொண்டிருந்தான். கொரோனா வார்டில், தன்னலம் கருதாது சிகிச்சை அளித்த செவிலியரிடம், அந்த நபர் அத்துமீறியபோது ஒரு சிலர் விலக்கி விட்டனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட செவிலியர் கூடியிருந்தவர்களிடம் முறையிட்டபோது, அந்த நபரை நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பின்னர் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தாக சொல்லப்படுகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் செவிலியரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்று, விஜய்குமார் என்ற அந்த குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி…
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியயில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது சிறுமியை மதகுருவும், இடுகாட்டில் பணியாற்றி வரும் 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் உடலைப் பெற்றோருக்குத் தெரியாமல் எரித்துவிட்டனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியுவினை உலுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி . அந்த குடும்பத்தின் புகைப்படத்தை தனது டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து,தலித் குடும்பத்தின் மகள் இந்த தேசத்தின் மகளும்கூடஎன பதிவிட்டிருந்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளத்தை புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்தியதாக அவரது பதிவை ட்விட்டர் இந்தியா நிறுவனம் நேற்று ந நடவடிக்கை எடுத்தது. ஆகவே ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்துஅக்கட்சி வெளியிட்டிருக்கும் ட்வீட்டர் பதிவில் ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.…
உடல் எடையை குறைக்க ஈட்டி எறிய தொடங்கிய நீரஜ் சோப்ரா… தங்கம் வென்ற வெற்றி வரலாற்றின் பின்னணி …!
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் ஒருவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார். உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கமும் வென்றிருந்தார். ஒரே இரவில் தடகள விளையாட்டு உலகில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டினார். அவர்தான் நீரஜ் சோப்ரா. ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 1997இல் பிறந்த அவருக்கு தற்போது வயது 23 . பள்ளிப் பருவத்தில் பருமனான உடல் வாகை நீரஜ் சோப்ரா கொண்டிருந்திருக்கிறார் . 12 வயதில் 90 கிலோ உடல் எடையுடன் இருந்திருக்கிறார். அந்த எடையை குறைக்கும் நோக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி உள்ளார். அது நாளடைவில்…
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 32வது ஒலிம்பிக் தொடரின் தடகள பிரிவு போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார். இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து முதலிடத்தை பிடித்து நீரஜ் சோப்ரா தங்கபதக்கத்தை வென்றார். இதன் மூலம் 100 ஆண்டுகளுக்கு பிறகு தடகள போட்டியில் இந்தியா முதல் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா…