உடல் எடையை குறைக்க ஈட்டி எறிய தொடங்கிய நீரஜ் சோப்ரா… தங்கம் வென்ற வெற்றி வரலாற்றின் பின்னணி …!

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் ஒருவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார்.

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கமும் வென்றிருந்தார். ஒரே இரவில் தடகள விளையாட்டு உலகில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டினார். அவர்தான் நீரஜ் சோப்ரா.

ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 1997இல் பிறந்த அவருக்கு தற்போது வயது 23 . பள்ளிப் பருவத்தில் பருமனான உடல் வாகை நீரஜ் சோப்ரா கொண்டிருந்திருக்கிறார் .

12 வயதில் 90 கிலோ உடல் எடையுடன் இருந்திருக்கிறார். அந்த எடையை குறைக்கும் நோக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி உள்ளார்.

அது நாளடைவில் அவரை தொழில்முறை வீரராக உருவாக்கி உள்ளது.தொடக்கத்தில் உள்ளூர் அளவில் அசத்தியவர்,பின் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2016-இல் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் தனது பதக்க வேட்டையை தொடங்கினார்.

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த், ஆசிய விளையாட்டுகள் மாதிரியான முக்கிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இடையில் சில மாதங்கள் காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தார்.

எப்போதுமே அனைவரும் பதக்கம் வெல்ல வேண்டும் என மட்டுமே சிந்திக்கிறார்கள்.நான் விளையாடும்போது எனது ஆட்டத்தை சரியாக விளையாடி துல்லியமாக ஈட்டியை எறிய வேண்டும் என நினைப்பேன்.

நான் எனது நோக்கத்தை அடையும்போது அதில் கிடைக்கும் வெற்றிக்கான போனஸ்தான் பதக்கங்கள்” என்று பேட்டி ஒன்றில் நீரஜ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் பிரிவில்

நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார். இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து முதலிடத்தை பிடித்து நீரஜ் சோப்ரா தங்கபதக்கத்தை வென்றார்.

இதன் மூலம் 100 ஆண்டுகளுக்கு பிறகு தடகள போட்டியில் இந்தியா முதல் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

120 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா!

Admin

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

Nagappan

ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

முதல் குவாலிபையர் போட்டி… சி.எஸ்.கே.வில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்னென்ன?

இரா.மன்னர் மன்னன்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment