உடல் எடையை குறைக்க ஈட்டி எறிய தொடங்கிய நீரஜ் சோப்ரா… தங்கம் வென்ற வெற்றி வரலாற்றின் பின்னணி …!

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் ஒருவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார்.

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கமும் வென்றிருந்தார். ஒரே இரவில் தடகள விளையாட்டு உலகில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டினார். அவர்தான் நீரஜ் சோப்ரா.

ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 1997இல் பிறந்த அவருக்கு தற்போது வயது 23 . பள்ளிப் பருவத்தில் பருமனான உடல் வாகை நீரஜ் சோப்ரா கொண்டிருந்திருக்கிறார் .

12 வயதில் 90 கிலோ உடல் எடையுடன் இருந்திருக்கிறார். அந்த எடையை குறைக்கும் நோக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி உள்ளார்.

அது நாளடைவில் அவரை தொழில்முறை வீரராக உருவாக்கி உள்ளது.தொடக்கத்தில் உள்ளூர் அளவில் அசத்தியவர்,பின் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2016-இல் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் தனது பதக்க வேட்டையை தொடங்கினார்.

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த், ஆசிய விளையாட்டுகள் மாதிரியான முக்கிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இடையில் சில மாதங்கள் காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தார்.

எப்போதுமே அனைவரும் பதக்கம் வெல்ல வேண்டும் என மட்டுமே சிந்திக்கிறார்கள்.நான் விளையாடும்போது எனது ஆட்டத்தை சரியாக விளையாடி துல்லியமாக ஈட்டியை எறிய வேண்டும் என நினைப்பேன்.

நான் எனது நோக்கத்தை அடையும்போது அதில் கிடைக்கும் வெற்றிக்கான போனஸ்தான் பதக்கங்கள்” என்று பேட்டி ஒன்றில் நீரஜ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் பிரிவில்

நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார். இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து முதலிடத்தை பிடித்து நீரஜ் சோப்ரா தங்கபதக்கத்தை வென்றார்.

இதன் மூலம் 100 ஆண்டுகளுக்கு பிறகு தடகள போட்டியில் இந்தியா முதல் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேபோல் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஷ்லே பார்டி

Admin

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது.. மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்

Admin

டோக்கியோ பாராலிம்பிக்..இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்.. வரலாறு படைத்த பவினா

Admin

நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்… யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

இரா.மன்னர் மன்னன்

தோனியோட 7 ஆம் நம்பர் ஜெர்சி ரொம்ப முக்கியம் பாஸ் :முன்னாள் வீரர் வேண்டுகோள்.

Admin

சிலிர்த்து எழுந்த சி.எஸ்.கே… மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது…

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment