- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்ட குடும்பக் கடனை அடைக்க நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழக அரசுக்கு ரூ. 5.70 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாக வும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2,63,976 கடன் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ் என்பவர் முதல் நபராக தனது குடும்பத்துக்கான கடன் தொகையை காசோலை மூலம் செலுத்துவதற்காக காந்தி போல் வேடமணிந்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கோட்டாட்சியர் எம். கோட்டைக்குமாரை சந்தித்த அவர் தான் வைத்திருந்த ரூ.2,63,976-க்கான வங்கிக் காசோலையை அளித்தார். ஆனால் அதனை வாங்க மறுத்த கோட்டாட்சியர் அந்த காசோலையை பெறுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த…
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. பின் அதற்காக 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2019 ஜனவரி 27 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டுமான முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. எனினும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை.இதனிடையே திட்டக் அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ்க்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர், கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்…
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அவரை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கோவை மற்றும் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்த டெண்டர்களில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று அவருக்கு சொந்தமான 55 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் “மிஸ்டர் வேலுமணி.. இப்ப தெரியுதா? திமுகன்னா என்னன்னு… பதவியில் இருக்கும் வரை ஆடுனீங்களே.. பதவி போன பிறகு பாருங்க…உங்க ஆட்டத்தை எப்படி ஆட்டப் போறோம்ன்னு பாருங்க…ஒவ்வொரு தொண்டனும் வெறித்தனமா இருக்கான்..அமைச்சர் பதவி வச்சிக்கிட்டு கழக தொண்டர்கள் மேல எத்தனை பொய் வழக்கு போட்டீங்க” என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் வெள்ளிகிழமைகளில் கோவில்களை திறக்க வலியுறுத்தி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் அவிநாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூ விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விஜயா, அலுவலக வாளாகத்தில் அவர் கொண்டு வந்திருந்த சாணிப் பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனயாக அவரை தடுத்தனர். அப்போது ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் தண்டுமாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவில்களை திறக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் போலீசாரின் கால்களில் விழுந்து கதறிய அவர், ஆடி மாத உற்சவம் நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களை பூட்டினால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், ஆத்தாவுக்கே இந்த…
முன்னாள் அதிமுகஅமைச்சர் எஸ் பி வேலுமணி க்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த எஸ்.பி.வேலுமணி மீது கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் என்பவர் லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்திலும், கோவை வடக்கு கணபதிபுரம் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவர்காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் ஒன்றை அளித்தனர். அதில் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான ஒரு இடத்திலும், சென்னையில் 15 இடத்திலும், கோவையில் 35 இடத்திலும், காஞ்சிபுரத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்…
2021 ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் தேசியத் தகுதி நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படும் நிலையில், கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை…
அமேசான் பிரைம் தளத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் ஓடிடி தளத்திலும் வெளிவர தொடங்கியுள்ளது. அந்த வகையில் லோல் (Last One Laughing) என்ற நகைச்சுவை நிகழ்ச்சி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி வருகிறது.இதில், பத்து நகைச்சுவையாளர்கள் ஒரு அறையில் தங்க வைக்கப்படுவார்கள். ஒருவருக்கொருவர் மற்றவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும். பத்து நகைச்சுவையாளர்களில் கடைசியாக யார் சிரிக்கிறார்களோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். சக போட்டியாளர்களின் நகைச்சுவைகளுக்குச் சிரிக்காமல், உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் இருப்பது கடினம் என்பதால் இந்தப் போட்டி பல நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழில், விஜய் தொலைக்காட்சியில் ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு சுற்றில் இதுபோல ஒரு நிகழ்ச்சி ஏற்கெனவே வெளியானது. அதில் போட்டியாளர்களைச் சிரிக்க வைக்க ஒருவர் முயற்சி செய்வார். சிரிக்காமல் கடைசி…
பருவநிலை மாற்றத்தால் விரைவில் வெப்பநிலை உயரும் என ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான குழு சமர்பித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான காலநிலை மாற்றங்களுக்கான இந்த குழுவில் இந்தியா உட்பட மொத்தம் 195 நாடுகளின் உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழு தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், பருவநிலை மாற்றம் என்பது பூமியின் அனைத்து பகுதிகளையும் அடைந்து விட்டது என்றும் , இது மனிதர்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றியமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக வெப்பமயமாதல் அதிகரிக்கும் போது தான் அதன் தாக்கங்கள் தீவிரமடையும். அதன்படி 2050 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் புவியின் வெப்பம் 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள சூழலில் 2030 ஆண்டில் இருந்தே புவி வெப்பமடைதல் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பெரும் முயற்சி எடுத்து…
தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அடங்கிய அமர்வு இதுதொடர்பான வழக்கில் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசுத்தரப்பில் முழு விபரங்களையும் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதேசமயம் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், 1980 ஆம் ஆண்டிலேயே தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டதாகவும், 4 தமிழ் கல்வெட்டியலாளர்களில் 2 பேர் சென்னையிலும், 2 பேர் மைசூரிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது சென்னையில் சமஸ்கிருதத்திற்கென…
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 11 மற்றும்12 ஆம் தேதிகளில் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருக்கிறது. இதனையடுத்து, விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர ஏற்பாடுகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் ஆகஸ்ட் 11 மற்றும்12 ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.