- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை கோட்பாடுகள்தாம் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்திச் சென்றன என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளாா். இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஜோ பைடன் தனது அறிக்கையில்: மிகப்பெரிய சவால்கள் உள்ள இந்த காலத்தில் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த 1947-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் உண்மை, அகிம்சை கோட்பாடுகளின் வழியில் சுதந்திரத்தை நோக்கிய மிக நீண்ட பயணத்தில் இந்தியா வெற்றிகண்டது. ஜனநாயக வழியில் இந்திய மக்கள் புரிந்த சாதனை உலகுக்கே முன்னுதாரணமாக இருப்பதோடு, இரு நாடுகளிடையேயான சிறப்பான உறவுக்கும் அடித்தளமிட்டது. கடந்த பல ஆண்டுகளாக, இரு நாட்டு மக்களிடையேயான நல்லுறவு மற்றும் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்திய-அமெரிக்கா்களின் துடிப்பான பங்களிப்பானது இரு நாடுகளின் உறவை வலுவானதாகவும், நிலைத்தன்மையுடையதாகவும் மாற்றியிருப்பதாக கூறினார். இரு நாடுகளிடையேயான இந்த நல்லுறவு…
வெளியேறிய அமெரிக்கா கால்பதிக்கும் தாலிபன்கள்..யார் இந்த தாலிபான்கள் ? அவர்களின் நோக்கம் என்ன?
சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவுக்கும் நெடுங்காலமாக பனிப் போர் இருந்து வந்தது.உலக நாடுகள் அமெரிக்கா சார்பு, சோவியத் சார்பு என பிரிந்தும் நின்றன. இந்தியாவைப் போல இரு அணிகளிலும் சேராமல் அணிசேரா கொள்கையை கடைபிடித்த நாடுகளும் இருந்தன. 1978-ல் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அமைத்தனர். 1979-ல் இந்த கம்யூனிஸ்ட் அரசு வீழ்ந்ததும் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டையே ஆக்கிரமித்தது அப்போது சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக யுத்தம் நடத்த அமெரிக்காவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டவர்களே முஜாஹிதீன்கள். சோவியத் ஒன்றியத்துக்கு குடைச்சல் கொடுக்க அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாத கோட்பாட்டை உருவாக்கியது. அங்கிருந்துதான் ஜிஹாத், புனிதப் போர் என்கிற இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த அகிலத்தையும் ஆட்டுவிக்கும் பயங்கரவாத குழு உருவாக காரணமாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் படைகளுக்கு எதிராக இஸ்லாம் போராளிகள் கொரில்லா தாக்குதலை நடத்தினர். இதனை அமெரிக்கா அப்போது ஊக்குவித்தது. 10 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் பல்லாயிரம்…
தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது 2016 முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவ வாகை சந்திரசேகர். 1991ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றவர் . இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமித்துள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்தவும், தமிழக கலைகளை பாதுகாத்து வளர்க்கவும். தமிழக அரசின் திட்டங்களால் கலைஞர்கள் பலனடையச் செய்யவும், பல்வேறு கலை பணிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தவும் வாகை சந்திரசேகரை தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை…
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று இரவே நாடு திரும்பும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஆப்கானில் தலிபான்கள்ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் படி, இன்று மாலை 7 முதல் 8 மணிக்குள் அந்த விமானம் டெல்லி வந்துவிடும் என கூறப்படுகிறது. விமானத்தில் அனைத்து இருக்கைகளையும் நிரப்பப்பட்டு, முடிந்தவரை எத்தனை பேரை விமானத்தில் ஏற்ற முடியுமா, அத்தனை பேரையும் அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் வான் வழிகளில் ஏதேனும் பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், வரக்கூடிய பாதை ரகசியமாக வைத்துள்ளனர். இந்த ஒரு விமானம் மட்டுமல்லாமல், வரக்கூடிய இரண்டு, மூன்று நாட்களுக்கு அங்க இருக்கக்கூடிய இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கு, மேலும் விமானங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை கைபற்றிய தலிபான்…
இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சீயான் 60. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக நேற்று படக்குழு அறிவித்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் உடன் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சீயான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியினை படக்குழு வெளியிட்டுள்ளது.
பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட, நடிகைமீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர்நடிகை மீரா மிதுன். இவர், பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் அவர் மீது புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் அவர கேரளாவில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஆண் நண்பருடன் தங்கியிருந்தஅவர், நேற்று கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்,இன்று சென்னை அழைத்து வந்த நிலையில்அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் குடியிருப்பில் உள்ள 7 வது…
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதால்அந்நாட்டில் தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தாலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி ஆப்கானின் பல முக்கிய நகரங்களை தாலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலலாபாத் நகரத்தையும் இன்று காலை தாலிபான்கள் கைப்பற்றினர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தாலிபான்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. காபூல் நகருக்குள் தாலிபான்கள் ஊடுருவிட்டதால் விரைவில் ஒட்டுமொத்த ஆப்கன் நாடும் தாலிபான்கள் கட்டுக்குள் விரைவில் வரலாம் எனக் கூறப்பட்ட நிலையில் அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகினார். ரத்தம் சிந்தாமல் தலைநகர் காபூலை தாலிபான் படைகளிடம் ஒப்படைக்க அரசு படைகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட சமூக மக்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீராமிதுன் கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தமிழில் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் கடந்த வாரம் வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார். அதில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதோடு, அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் குற்றப்பின்னணியை உடையவர்களாக இருப்பதாகவும் கூறினார். இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தன்னை…
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் பெட்ரோல் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்று வழங்கியுள்ளது. அதன்படி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகனங்களின் பதிவு எண்களில் 75 என இருந்தால் அந்த வாகனங்களுக்கு ரூ.75 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார். அப்போது விமான படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து பூக்களை தூவின.பின்னர் பிரதமர் மோடி 8வது முறையாக சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். அப்போது சுதந்திரத்தை பெற்று தந்த போராட்டத் தியாகிகள், நாட்டை உருவாக்கியவர்கள், வளர்ச்சியடைய செய்த அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுக் கூறுவதாக தெரிவித்தார். நாடு பிரிவினை அடைந்த போது பொதுமக்கள் பட்ட கடும் துயரத்தை இன்றளவும் தான் உணர்வதாக மோடி குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.…